Valasai Pogum Paravaikalaai - 26
26 - தெளிந்த நீரோடை!
அன்று ஒரு விடுமுறை தினம்.
சரண், கல்யாணி, லட்சுமி, மேகலா எனப் பிள்ளைகள் எல்லோரும் சரணாலயத்தில்தான் இருந்தனர்.
குயிலியின் அலுவலக அறைக்கு முன் இருக்கும் வரவேற்பறை அவர்கள் அடிக்கும் லூட்டியில் களைகட்டியிருந்தது.
அங்கே போடப்பட்டிருந்த பெரிய சோஃபாவின் ஒரு மூலையில் நான்கு பேரும் நெருக்கியடித்து உட்கார்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் தேனீர் மேசை மேல் இருந்த மடிக்கணினியில் எல்லோருடைய பார்வையும் பதிந்திருந்தது.
“இவங்கதான் என்னோட முத்து தாத்தா. சிகாமணி தாத்தாவோட அண்ணா. இவங்க என்னோட பெரிய அத்தை ஜெயந்தி. இவங்க கடைசி அத்தை சுஜாதா”
“ஓ... அழகா இருகாங்கடா” என்றாள் மேகலா.
“எனக்கு இன்னும் மூணு அத்தை இருக்காங்க தெரியுமா? ஒருத்தங்க யூ.எஸ்ல இருக்காங்க. ரெண்டு பேர் துபாய்ல இருக்காங்க"
“லக்கீடா சரண் நீ. எனக்கு அத்தையே இல்ல” என்றாள் கல்யாணி.
“ஆமாம்! எங்க மாமன கட்டிட்டு வந்தது கூட எங்களுக்கு அத்தை இல்ல. எங்க அக்காதான்” என்று லச்சு சொல்ல, மூண்ட எரிச்சலில் அவள் தலையில் தட்டினாள் கல்யாணி. ‘ஆவ்... அடிக்காதடி அக்கா வலிக்குது என அவளுடைய கையைத் தட்டிவிட்டாள் லச்சு.
“ஐயோ... சண்டைப் போடதீங்க. மத்த ஃபோட்டோஸ்லாம் பார்க்கலாம்” என சமாதானம் பேசியவன், “இது எங்கப் பெரிய தாத்தாவோட அக்ரிகல்ச்சர் ஃபீல்ட். இதுல சுகர்கேன், பீனட் எல்லாம் கிராப் பண்றாங்க. நான் எல்லாமே ஃப்ரெஷ்ஷா சாப்டேன் தெரியுமா. இதுக்குப் பக்கத்துலதான் எங்க தாத்தாவோட இடமும் இருந்துதாம். அதை அவங்க வேற யாருக்கோ சேல் பண்ணிட்டாங்களாம்” என சரணின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. ‘வாவ்’ ‘சூப்பர்’ என இடையிடையே மற்ற பிள்ளைகளின் குரலும் கேட்டது.
“இது எங்க குல தெய்வம் திரௌபதி அம்மன் கோவில். இங்கதான் என்னோட நாலு பாட்டியும் சேர்ந்து பொங்கல் வெச்சாங்க. தென் பூஜை செஞ்சாங்க. ஸ்வீட் பொங்கல், செம்ம டேஸ்டா இருந்துது தெரியுமா” என்றபடி குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்தபொழுது எடுத்த படங்களை அவர்களுக்குக் காண்பித்தான்.
வளவளத்தபடி அவர்கள் அதைப் பார்த்து முடிக்க, “இரு, நான் பம்ப் செட்ல குளிச்ச வீடியோ ப்ளே பண்றேன்” என்றபடி அவன் அந்தக் காணொலியை ஓடவிட, இவன் தண்ணீரில் போடும் ஆட்டத்தைக் கண்டு ரசித்தபடி அதில் அவனுடன் சூர்யாவும் இருந்தான். “சரண்... பார்த்து பார்த்து... அப்பா மூக்குல தண்ணிப் போயிடப் போகுது” என அக்கறையுடன் அந்த வீடியோவை எடுத்தப் பெண்ணின் குரலும் உற்சாகமாக அதில் ஒலிக்க, “சுஜா அத்தை வாய்ஸ் அது. அவங்கதான் வீடியோ எடுத்தாங்க” என்றான் பெருமையுடன்.
“