Valasai Pogum Paravaikalaai - 19
19.தத்தை தூது!
அஞ்சுவால்தான் நடந்த எதையுமே நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் இயலவில்லை. தங்கத்திடம் சொல்லிச் சொல்லி அதிசயித்துப் போனாள். தங்கமும் கூட அதே மனநிலையில்தான் இருந்தாள்.
விடுமுறை நாள் என்றால் சரண் அவர்கள் வீட்டுக்கு வருவது அல்லது லட்சுமி அவன் வீட்டுக்குச் செல்லுவது என வாடிக்கையாகி இருந்தது. அந்த வழக்கப்படி சூர்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட அன்று காலை கல்யாணிதான் லக்ஷ்மியை குயிலியின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்திருந்தாள்.
சிறிது நேரம் கடந்து கைப்பேசியில் அவளை அழைத்த குயிலி பிள்ளைகளை தன்னுடன் சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும், ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் அதனால் சீனுவையும் அழைத்துக்கொண்டு நேரே அங்கே வருமாறும் சொல்லித் துண்டித்தாள். வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு பஸ் பிடித்து சீனுவுடன் அவள் அங்கே போய் இறங்கும் போது மணி மூன்றாகியிருந்தது.
ரிசப்ஷனில் போய் விசாரிக்க, அவசர வேலையாக குயிலி எங்கோ சென்றுவிட்டதாகவும் அவர்கள் வந்தால் பிள்ளைகளை அவளுடன் அனுப்புமாறு சொல்லிவிட்டுப் போனதாகவும் சொன்னார்கள். அதைத்தவிர வேறு எந்த தகவலும் அவளிடம் சொல்லப்படவில்லை.
குழந்தைகள் இருவரும் ஜோதிம்மாவின் பொறுப்பில் இருக்க அவர்களை வீட்டில் விட ஓட்டுநரும் தயாராகக் காத்திருந்தார்.
வீடு திரும்பும்போது மாலையாகிவிட்டிருந்தது. அப்பொழுது அவளை அழைத்த சிகாமணி, உடல்நிலை சரியில்லாமல் சூர்யாவை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதைச் சொல்ல, “ஐயோ, என்னாச்சுப்பா?” எனப் பதறினாள் அவள். “மைல்ட் அட்டாக்ன்னு சொல்றாங்கம்மா. பயப்படத் தேவை இல்லன்னு சொல்லிட்டாங்க. ஆஞ்சியோ பண்ணனுமாம். நானும் ருக்குவும் இங்கதான் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். பதட்டத்துல எல்லாத்தையும் போட்டது போட்டபடி வந்துட்டோம்மா. செக்யூரிட்டி கிட்ட சாவி கொடுத்திருக்கேன். வாங்கி வீட்டைக் கொஞ்சம் சரி பண்ணி வைம்மா” என்றார் தளர்ந்த குரலில்.
அவரிடம் ஆதரவாகப் பேசி அழைப்பைத் துண்டித்தவளுக்குப் பிறகு ஒன்றுமே ஓடவில்லை. அவர் சொன்னதுபோல வீட்டில் போய் பார்க்க மின் விசிறிகள் கூட அணைக்கப்படவில்லை. சமையல் மேடையில் பாத்திரங்களெல்லாம் திறந்தே கிடக்க, சரியாக மூடப்படாமல் சிங்க் குழாயில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. என்னதான் பண வசதி இருத்தலும் வயோதிக காலத்தில் துணைக்கு ஆளில்லை என்றால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று எண்ணிக்கொண்டாள்.
இளவயது பிள்ளை அவர்களைக் கவனிப்பது போய் முதுமையில் ஒரே பிள்ளையை அவர்கள் கவனிக்கும் நிலை வந்துவிட்டதே என மிகவும் வேதனையாக இருந்தது.
இரவு முழுவதும் அவளுக்கு உறக்கமே வரவில்லை.
அடுத்த நாள் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கி எடுத்துக்கொண்டு தங்கத்திடம் தகவலைச் சொல்லி அவளையும் உடன் சேர்த்துக்கொண்டு மருத்துவமனை நோக்கிக் கிளம்பிவிட்டாள்.
அங்கே போய் பார்த்தால் குயிலியும் அங்கே இருக்கிறாள். அவள்தான் சூர்யாவின் மனைவி எனக் கிசுகிசுக்கிறார் ருக்மணி. மயக்கம் வராத குறைதான் இருவருக்கும். அஞ்சுவுடன் தங்கத்தையும் அங்கே பார்த்ததும் குயிலிக்குதான் கொஞ்சம் சங்கடமாகிப்போனது.
சட்டென சமாளித்துக்கொண்டு தோழியரை எதிர்கொண்டாள். அவர்களுக்கும் சூர்யாவின் குடும்பத்துக்குமான தொடர்பைக் கதை கதையாகச் சொல்லி முடித்தாள் அஞ்சு. அதுவும் அவள் அன்றைய நிலையை எண்ணி பரிதாபத்துடன் இருவரும், ‘ம்ப்ச் பாவம் சூர்யா சார்! ம்ப்ச்... பாவம் அவரோட அப்பா அம்மாவுக்கு இந்த வயசான காலத்துல இவ்வளவு கஷ்டம் வேண்டாம்’ என அதிகமாக உச்சுக் கொட்ட, ‘இருப்பவர்கள் போதாது இனி இவர்கள் இருவரையும் வேறு சமாளிக்க வேண்டி வருமோ?’ என்ற எண்ணத்தில் ‘ஷ்... அப்பா’ என குயிலிக்குக் கண்களைக் கட்டியது.
அறைக்குள் சென்று சூர்யாவைப் பார்த்துவிட்டு வந்த பிறகு அஞ்சுவும் சரி தங்கமும் சரி கண் கலங்கிவிட்டனர். குயிலியாகட்டும் சூர்யாவாகட்டும் இருவரைப் பற்றியுமே நன்றாகத் தெரியும் என்பதால் இருவரும் இணைந்து வாழவில்லையே எனக் கழுத்து மட்டும் குறையாகிப் போனது இருவருக்குமே.
இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதும், அலுவலக வேலையை அப்படியே பாதியில் விட்டுவிட்டு வந்திருந்தாள் தங்கம். அதனால் அவள் உடனே கிளம்பிவிட, பின்னோடே குயிலியும் கிளம்பிவிட ருக்மணிக்குத் துணையாக அஞ்சு மட்டும் அங்கேயே இருந்தாள்.
அஞ்சுவும் தங்கமும் குயிலியின் உயிர்த்தோழிகள் எனத் தெரிந்த பிறகு ருக்மணி நடந்து முடிந்த அனைத்தையும் தன்னுடைய பார்வையிலிருந்து குயிலியிடம் புலம்பித் தீ