Valasai Pogum Paravaikalaai - 17
17.குயில் குஞ்சு
பொங்கிப் பாயும் புதுவெள்ளம் போல குயிலியுடன் திருமணத்திற்குப் பின்னதான அவனது நாட்கள் எப்படித்தான் அவ்வளவு அதி வேகமாக ஓடியதோ! அதற்கு நேர்மாறாக வறண்ட பாலைவனத்தில் தாகத்துடன் தண்ணீரைத் தேடித் தவிக்கும் ஒருவனுடைய ஒரே ஒரு நாளைப் போல மிக நீண்டு கொண்டே போனது அவளைப் பிரிந்து கனடா சென்றதுக்குப் பிறகான நாட்கள்.
அந்த மிகச்சிறிய பிரிவைக் கூட அவனால் பொறுக்க முடியவில்லை. பட்டாசு வெடிக்க தீபாவளி நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சிறுவனைப் போல நாட்களை எண்ணி எண்ணி தன் மனைவிக்காகக் காத்திருந்தான்.
அதுவரைக் குடியிருந்த ஒற்றைப் படுக்கை அறை வீட்டிலிருந்து இரட்டைப் படுக்கையறைக் கொண்ட இன்னும் வசதியான ஒரு வீட்டை ஏற்பாடு செய்து, அவள் அங்கே வந்து சேருவதற்கு முன்பாக கச்சிதமாகத் தயார் செய்துவிடும் முனைப்புடன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் அலங்கரித்துக் கொண்டிருந்தான்.
அவள் அங்கே வர இன்னும் ஒரே ஒரு வாரம்தான் இருக்கிறது என்கிற நிலையில் அவனுடைய புதிய முகவரியைக் கண்டுபிடித்து அவனைத் தேடி அங்கேயே வந்தாள் மமதி.
அவளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது, ஆறு மாதங்களுக்குப் பிறகு திருமணம் என்பது வரை அவன் அறிந்தே வைத்திருந்தான்.
அதனால் அவள் அங்கே வந்ததில் அவனுக்கு எந்த ஒரு அதிர்ச்சியும் ஏற்படவில்லை.
அவ்வளவு தூரம் பேசியவள் எந்தப் பிரச்சனையும் கிளப்பமாட்டாள் என்றே முற்றிலும் நம்பினான்.
இருந்தாலும் அன்றைய அவமானத்தின் மிச்சம் இன்னும்கூட இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் குத்திக்கொண்டிருக்க, “வா மமதி, அன்னைக்கு நீ நடந்துட்ட விதத்துக்கு என்னை சுத்தமா அவாய்ட் பண்ணிடுவன்னு நினைச்சேன். மறுபடியும் என்னைத் தேடி வந்திருக்க?” என இகழ்ச்சியாகக் கேட்டான்.
ஒரு கோணல் சிரிப்புடன் அவனை எறிட்டவள், “ஐம் பிரக்னன்ட்!” என்றாள் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல்.
அவள் என்ன சொல்கிறாள் என்பதே விளங்காமல், “கம் அகைன்... ஐ கான்ட் கெட் யூ” என்றான்.
“ப்ச்... நான் கன்சீவா இருக்கேன், ஐ மீன் உன் குழந்தைக்கு அம்மா ஆகப்போறேன், இப்ப புரியுதா’ என ஆத்திரமும் இயலாமையும் கலந்து அவள் குரலை உயர்த்த, “நான்சன்ஸ்... உளறாத” என அதிர்ந்தான் அவன்.
“இல்ல சூர்யா, என்னால இதை அபார்ட் பண்ண முடியல. எல்லாமே கை மீறிப் போயிடுச்சு. இந்த சனியனால என் கல்யாணம் நின்னு போய் என்னோட ஃப்யூச்சரே டோட்டலா கெட்டுக் குட்டிச்சுவராகிப் போச்சு” என்றபடி கோபத்தில் முகம் சிவந்து கண்களில் நீர் கோர்க்க அப்படியே சோஃபாவில் சரிந்தாள்.
“இதை என்ன நம்பச் சொல்றியா... இவ்வளவு தெளிவா எல்லாத்தையும் யோசிக்கற நீ அப்படி மட்டும் நடந்திருந்தா இதை ஆரம்பத்துலையே கிளீன் பண்ணியிருக்க மாட்ட?” என அவன் சீற,
“என் தலை எழுத்து உனக்கெல்லாம் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருக்க வேண்டியதா போச்சு’ என அருவருத்தவள், “பயந்து போய் ஸ்டார்டிங்லயே கிட் வெச்சு டெஸ்ட் பண்ணேன். நேகடிவ்னுதான் வந்துது. ஃபார்டி டேஸ்ல மறுபடியும் பண்ணேன். அப்பவும் நெகடிவ்ன்னு வந்துது. ஸோ, வேற ஏதோ ப்ராப்ளம்ன்னு விட்டுட்டேன். எங்கேஜ்மென்ட் பங்க்ஷன் பிசில இருந்ததால டாக்டர் கிட்டயும் போகல. அதுக்குள்ள நிறைய ஃபினான்ஷியல் ப்ராப்ளம் வேற, அதை ஹான்டில் பண்ணிட்டு இருந்தேன். இதெல்லாம் முடிச்சிட்டு டாக்டர் கிட்ட போய், அந்த டெஸ்ட் இந்த ஸ்கேனுன்னு முடிச்சி வரதுக்குள்ள காலம் கடந்து போயிருந்தது. லீகலா அபார்ஷன் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இல்லீகலா என்னால போக முடியல” என விளக்கம் கொடுத்தவள், “இப்ப ஃபைவ் மந்த்ஸ் கம்ப்ளீடட். பேபி ஃபுல் க்ரோத் வந்துடுச்சு” என முடிக்க, சற்று உற்று கவனிக்கவும் குழந்தையின் வளர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.
அவனுக்கு உலகமே இருண்டது போலத் தோன்றியது. ஆத்திரம் உச்சிக்கு ஏற, “உனக்கு என்னைப் பார்த்தால் இளிச்சவாயன் மாதிரி தோனுதா, அன்னைக்கு நீ அவ்வளவு தூரம் பேசினதுக்குப் பிறகும் நான் உன்னை நம்புவேன்னு நினைச்சியா? இதுக்கு நான்தான் அப்பாங்கறதுக்கு” என அவன் சொல்லி முடிக்கவில்லை, அவனை பளார் என அறைந்திருந்தாள் அவள்.
“இன்னும் ஒரு தடவ என்னை இன்சல்ட் பண்ற மாதிரி இப்படி பேசினா உன்னைக் கொன்னுடுவேன் ராஸ்கல்” எனச் சீறியவள், “இதுக்கு காரணம் நீதான். அதை என்னால ப்ரூவ் பண்ண முடியும். நான் நல்லபடியா இருந்த போதே என் கூட இருந்தவங்களே என்னைக் கேவலமா பார்த்தாங்க. இப்ப இப்படின்னா கேட்கவே வேண்டாம். அதனால எனக்கு இப்ப தேவை ஒரு சமூக அங்கீகாரம். ஐ மீன் ஒரு கல்யாணம்” என அவள் முடிக்க சப்த நாடியும் ஒடுங்கிப்போனது அவனுக்கு.
“ஹேய் என்ன உளறிட்டு இருக்க, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அது உனக்கு தெரியுமா இல்ல தெரியாதா” என அவன் படபடக்க, “ப்ச்... எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையே இல்ல. இப்போதைக்கு ஒரு கோவில்ல வெச்சு தாலிக் கட்டு. அப்பறம் லீகலா பார்த்துக்கலாம்” என அவள் பதில் கொடுத்த விதத்திலே அவளுக்கு எல்லாம் தெரிந்தே இருக்கிறது என்பது புரிந்தது.
அவன் ஸ்தம்பித்து நிற்க, “ஃபோட்டோவ பார்த்தே உருகிட்டு இருந்த, இப்ப கேட்கணுமா!” என இளக்காரமாகச் சொன்னவள், “இது இன்னும் வளர்ந்து என் மானத்தை வாங்கறதுக்குள்ள சீக்கிரம் எனக்கு ஒரு முடிவு சொல்லு சூர்யா, இல்லனா இதை அழிக்க நான் என்னையே அழிச்சிக்க வேண்டியதா இருக்கும். அப்படியே செத்தாலும் உன் பேரைச் சொல்லிட்டுதான் செத்துப்போவேன். நம்ம ஊரா இருந்தாலும் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து வெளியில வந்துடலாம். ஆனா இங்க ஜெயில்லயே கிடந்தது நீ சாக வேண்டியதுதான்” என அவனை