top of page

Valasai Pogum Paravaikalaai - 1

Updated: Aug 22, 2022

Hi Friends!


'வலசை போகும் பறவைகளாய்...' என்ற எனது இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இங்கே வாசகர் அனைவரும் விரும்பி கேட்கும், 'ஹீரோ ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகி பிரிஞ்சிருக்கணும், அவங்களுக்கு குழந்தை இருக்கணும்... ஆனா ஹீரோவுக்கு தெரியக் கூடாது' என்கிற one Line... சரியாகச் சொன்னாள் ஒரு ஏடாகூட Template அடங்கியுள்ள ஒரு கதைதான், ஆனால் எனது பாணியில்.


இப்படி ஒரு டெம்ப்ளேட்டில் எழுதவேண்டும் என முடிவு செய்தெல்லாம் எழுதவில்லை. எழுதும்போது இப்படி வந்துவிட்டது. ஆனாலும் இந்தக்கதை நிச்சயம் வாசகர்களைக் கவரும் என நம்புகிறேன்.


படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்ய மறக்காதீர்கள்.


நட்புடன்,

KPN



வலசை போகும் பறவைகளாய்...


1-அஞ்சுகம்


தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்


செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!


அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்


இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!


எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே


அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!


“அம்மாம்மா ப்ளீஸ் மா… இன்னும் ஒரே ஒரு தடவ இந்தப் பாட்டைப் படிச்சுக் காட்டும்மா” என மகள் சலுகையாகக் கேட்க, சலிக்காமல் ‘பராபரக் கண்ணி’ வகையைச் சார்ந்த தாயுமானவரின் அந்தப் பாடலை மறுபடியும் ஒருமுறை படித்துக் காண்பித்தாள் அஞ்சு.


“மா... இந்தப் பாட்ட ஒரே ஒரு தடவ எக்ஸ்ப்ளைன் பண்றியா”


அவளை நகர