TIK - 3
இதயம் - 3
வியர்க்க விறுவிறுக்க, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து பட்டனை அழுத்திவிட்டு லிப்ட்டிற்காக காத்திருந்தாள் மல்லி.
அங்கே தெளிக்கப்பட்டிருந்த ரூம் பிரெஷ்னரின் நெடி வேறு அவளது நாசியில் எரிச்சலை உண்டாக்கித் தும்மலை வரவழைத்துக் கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அவள் அருகில் வந்து நின்றான் அந்தப் புதியவன். அதற்குள் லிஃப்ட் கீழே வந்துவிட, மல்லியுடனேயே அதன் உள்ளே நுழைந்தான்.
லிஃப்ட்டிற்குள்ளும் அந்த ரூம் பிரெஷ்னர் மணம் அதிகமாக இருக்கவே, மல்லிக்கு அடுத்தடுத்து தும்மலாக வந்து கொண்டே இருக்க கண்களில் நீர் வடியத்தொடங்கியது. அவளது இதழிகளிலிருந்து, ‘சாரி’, ‘எக்ஸ்க்யூஸ் மீ’ இரண்டும் அனிச்சையாக, மீண்டும் மீண்டும் உதிர்ந்து கொண்டே இருந்தது.
தினமும் அங்கே உபயோகிக்கும் ஸ்பிரேதான் அது. ஏனோ அந்த மணம் அவளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். தினமும் கொஞ்சம் தும்மலுடன்தான் அலுவலகத்தின் உள்ளேயே நுழைவாள். அதுவும் இன்று அந்த ஸ்பிரேவும் அதிகம். அவளது தும்மலும் அதிகம்.
கண்களத் துடைத்துக்கொண்டு தனது துப்பட்டாவின் நுனியால் மூக்கை மூடிக்கொண்டாள். பிறகுதான் அவனைக் கவனித்தாள் அவள்.
ஆறடிக்குக் கொஞ்சமே கொஞ்சம் குறைவான உயரம். மாநிறத்திற்கும் கொஞ்சம் அதிகமான நிறம். சதுரமான முக அமைப்பு சுத்தமாக ஷேவ் செய்திருந்தான். அகலமான நெற்றி! கூர்மையானக் கண்கள்! அவனுடைய அழுத்தமான தாடைகள் அவன் பிடிவாதக்காரன்! என்பதைப் பறைசாற்றியது. அலை அலையான கருமையான கேசம், அடங்காமல் பறந்துகொண்டே இருக்க, அதை தன்னுடைய நீண்ட விரல்களால் கோதிக்கொண்டே இருந்தான்.
அவனது முகமும், அந்த வசீகரக் கண்களும் முன்பே எங்கேயோ பார்த்து நீண்ட காலம் பழகிய ஒரு உணர்வை தோற்றுவிக்க, அவனது முகத்தையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி.
‘என்ன?’ என்பதுபோல் அவன் தனது புருவத்தை ஏற்றி தலை அசைத்துக் கேட்க, ஒன்றுமில்லை என்பதாக அவளது தலை தானாகவே ஆடியது. அப்பொழுதுதான் தன்னை மறந்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் உணர, முன்பே அதிகத் தும்மலினால் சிவந்து போயிருந்த அவளது முகம் மேலும் ரத்தமெனச் சிவந்து போனது.
மின் தூக்கி, அவள் இறங்க வேண்டிய இரண்டாவது தளத்தைத் தாண்டிவிட்டதையே பிறகுதான் உணர்ந்த மல்லி. அவள் அதற்கான பட்டனை அழுத்த மறந்ததை நினைத்து மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள்.
கடைசியாக இருந்த, ஐந்தாவது தளத்தில் அவன் இறங்க அவள் லிப்ட்டின் உள்ளேயே இருக்கவும், ஒரு அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் சென்றதை பார்த்தவள் நொந்தே போனாள்.
மணி, ஐஸ்வர்யா மற்றும் பயிற்சியிலிருக்கும் பெண்கள் மூவர் என்று இவர்கள் வேலை செய்வதற்கான காபின் ஒரு ஹால் போல் சற்று பெரியதாக இருக்கும். அதில் மணிக்கு என்று தனியாக ஒரு சிறு கேபின் இருக்கும். டிசைன்கள் செய்வதற்கான கணினிகள், வரைவு மேசை என வசதிகள் செய்யப்பட்டிருக்கும். தையல் வேலைகளுக்கான பிரிவு தனியே இருந்தது.
மல்லி ஒருவழியாக அங்கே வந்து சேர, அந்த இடமே பெரும் அமைதியாக இருந்தது. அங்கே ஒருவரையும் காணவில்லை. பிறகு ஓய்வறைக்குச் சென்று முகம் கழுவி வந்த மல்லி, வெளியில் இருக்கும் சுகுணா என்ற அட்டெண்டர் பெண்ணை அழைத்து, “அக்கா! எங்க யாரையும் காணும்?” என்று கேட்க,
“உனக்கு தெரியாதாம்மா? மேல ஏதோ மீட்டிங்காம் எல்லாம் அங்கதான் போயிருக்காங்க!” என்று அவள் பதிலளிக்கவும், மறுபடியும் மின் தூக்கியை நோக்கி ஓடினாள்.
இரண்டு நாட்களில் அவ்வளவு ஓய்ந்து போயிருந்தாள் மல்லி. யார் சுமதி என்று அறிய, கைப்பேசியில் மணிக்கும் ஐஷுவிற்கும் மறுபடி மறுபடி முயற்சித்துக் கொண்டே இருந்தாள். ஒரு முறை கூட அவளது அழைப்பு எடுக்கப்படவில்லை. வேறு வழியே இல்லாமல் திங்கள் அன்று நேரில் விசாரித்துக்கொள்ளாம் என்று முடிவு செய்தாள்.
ஆனால் திங்கள் காலையிலேயே தீபன் படிக்கும் பள்ளியிலிருந்து, அவனது வகுப்பு ஆசிரியரை வந்து சந்திக்குமாறு அழைத்திருந்தனர். பரிமளாவால் போகமுடியாத சூழல் ஏற்படவே மல்லி போகவேண்டியதாக ஆகிப்போனது. பிறகு மின்னஞ்சல் மூலம் அலுவலகத்தில் பதினோரு மணிவரை நேர அனுமதிபெற்று, அங்கே சென்றுவிட்டாள் மல்லி.
அவன் படிப்பதுஅரசுப்பள்ளி. அவளும் அங்குதான் படித்தாள். படிக்கும் காலத்தில் அத்தனை ஆசிரியருக்கும் செல்ல மாணவி அவள்.
தீபனும் நன்கு படிக்கக் கூடியவன் என்பதால் பெற்றோருக்குப் பதில் அவள் போனால் யாரும் மறுப்பு சொல்வதில்லை. பெரும்பாலும் தீபனுக்காக மல்லிதான் போவாள்.
பள்ளியில் எதிர்பார்த்ததை விடத் தாமதம் ஆகிவிட, பேருந்து பிடித்து அவள் அலுவலகம் வந்துசேரவே மணி பதினொன்றரையைத் தாண்டியிருந்தது. இன்னும் அவளது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நேரம் வரவில்லை போலும்.
அந்தப் புதியவனிடம் வாங்கிய பல்பு வேறு அவளை இம்சித்தது. அடுத்து இந்த திடீர் மீட்டிங் வேறு! அங்கே இன்னும் வேறு என்னவெல்லாம் காத்திருக்கிறதோ?
நம்ம ராசிக்கு, ‘இந்த நாள் இம்ச