top of page

Poovum Naanum Veru - 18

இதழ்-18


சரிகா தன் கால்களைக் கீழே ஊன்றி எழுந்திருக்க முயல, தலை சுற்றி விழப்போனவள் தானே முயன்று கட்டிலைப் பிடித்துக்கொண்டு அதிலேயே மெள்ள உட்கார்ந்து கொண்டாள்.


வசந்த் மனது வைத்தால் மட்டுமே அவளால் பத்திரமாக வீடு போய்ச் சேர முடியும் என்பதை உணர்ந்தவள், "வசந்த் ப்ளீஸ்! என்னை எங்க வீட்டுல விட்டுடு;


நான் இதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்! ப்ளிஸ்!" எனக் கெஞ்சலாகக் கேட்டாள் சரிகா.


அவள் கண்களில் பெருகிக் கொண்டிருந்த கண்ணீரைக் கண்டும் இளகாமல், "வேணா சொல்லித்தான் பாரேன்!


உங்க குடும்பம் மொத்தமும் விஷத்தை குடிச்சு சாக வேண்டியதுதான்!" என அகங்காரத்துடன் அவன் சொல்ல, பயத்தில் தொண்டை வறண்டு போக மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள் சரிகா!


"என்ன அப்படி பாக்கற! என்றவன் இந்த ஒரு வீடியோவுக்கே இந்த பொங்கு பொங்குறியே; இதுபோல இன்னும் நாலஞ்சு வீடியோ இருக்கு! என்ன பண்ணுவ!


அதுவும் , உன் கூட வெரைட்டி வெரைட்டியா ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு ஹீரோ இருப்பான்!


இது எல்லாத்தையும் சோஷியல் மீடியாஸ்ல போட்டேன் வை; பெருமை அடிச்சுப்பியே உங்கொண்ணன்; அந்த சூப்பர் ஹீ...ரோ; அவனையும் கூட சேர்த்துகிட்டு குடும்பத்தோட நீங்க தற்கொலைதான் செஞ்சுக்கணும்"


சொல்லிக்கொண்டே போனவன் ஒரு பையை அவள்மீது விட்டெறிந்து, "போட்டுட்டு வா! வீட்டுல விடறேன்! ஆனா நாங்க எப்ப எங்க கூப்பிட்டாலும் மறுப்பு சொல்லாம வரணும்; இல்லன்னா என்ன நடக்கும்னு நான் சொல்லவே தேவையில்லை" என அவளை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் வசந்த்.


அவனுடைய தள்ளாட்டத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது அவன் முழுவதுமாக போதையில் இருக்கிறான் என்பது.


எதிர்காலத்தைப் பற்றிய பயம் அடிவயிற்றில் பந்தாக உருள; முதலில் எப்படியாவது வெயியே சென்றால் போதும் என்ற மனநிலையில் அவன் கொடுத்த புதிய உடைகளை அணிந்து வெளியே வந்தவள், அங்கே இருந்த வரவேற்பறை முழுதும் சூழ்ந்திருந்த சிகரெட் புகையிலும், அத்துடன் கலந்து வந்த மதுவின் வாடையிலும் குடலை புரட்டிக்கொண்டு வர, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் சரிகா.


அந்த புகை மண்டலத்துக்கு நடுவே அந்த இடத்தின் ஆடம்பரத்தையும் அங்கே வசந்துடன் சேர்த்து ரத்தம் குடிக்கும் ஓநாய் போன்று தோன்றிய ஐந்து மனித மிருகங்களையும் பார்த்து அச்சத்துடன், அறுவறுத்து போனாள் அவள்.


"வசந்தா; காத்திருந்தது வீண் போகல; நீ இன்னைக்கு கொடுத்தது செம்ம ஹாட் ட்ரீட்தான்டா" என அவர்களில் ஒருவன் சொல்வது தெளிவாக அவளது செவிகளில் விழ, மேற்கொண்டு அவர்களுடைய கோரச் சிரிப்பொலியும் பேச்சும் காற்றில் தேய்ந்து போகும்படி ஒரே ஒட்டமாக, புஷ்பநாதனுக்கு சொந்தமான அந்த 'ஃபார்ம் ஹௌசின்' வாயிற்பகுதிக்கு அவள் வந்துவிட, அவளைத் தொடர்ந்து வந்த வசந்த் அவளை முந்திக்கொண்டு போய் காரை உயிர்ப்பித்தான்.


முன் பக்கக் கதவைத் திறந்து கொண்டு சரிகா உட்கார எத்தனிக்க, "பின்னால போய் உட்கார்!" என அவன் எறிந்து விழவும், அந்த காரிலேயே இருந்த அவளது கைப்பையை எடுத்துக்கொண்டு, மௌனமாகப் போய் பின் புறம் சன்னலோரமாக உட்கார்ந்து கொண்டாள் சரிகா.


ஏனோ அவன் வாகனத்தைக் கிளப்ப சற்று தாமதம் செய்ய, அந்த ஒவ்வொரு நொடியும் அவளது பயத்தைக் கூட்டிக்கொண்டே போனது.


உள்ளே இருந்த மற்ற நால்வரும் தள்ளாடியபடி ஒருவர் பின் ஒருவராக வந்து காரின் பின்பகுதியில் அவளுக்கு அருகில் உட்கார, இடம் இல்லாமல் ஒருவன் மட்டும் முன்னால் போய் உட்கார்ந்து கொண்டான்.


அடுத்த நொடி வசந்துடைய கையில் அந்த வாகனம் அவனைப்போலவே தறிகெட்டுப் பறந்தது.


சில நிமிடங்கள் அமைதியுடன் கடக்க, போதையின் உச்சத்தில், ஒருவன் அவள் இருக்கும் சில காணொளிகளை வக்கிரமாக கைப்பேசியில் ஓட விட்டுப் பார்க்கவும், அறுவறுப்புடனும் இயலாமையுடனும் காதுகளை கைகளால் பொத்திக் கொண்டு கண்க