top of page

Nilamangai 9(2)

Updated: 3 days ago

நிலமங்கை 9 (2)


கல்யாண கனவுகளுடன் சேர்த்து பகடிப் பேச்சின் குதூகலத்தில் தேன் குடித்த நரியின் கிறக்கத்தில் இருந்ததாலோ என்னவோ, தாமோதரனைப் பார்த்ததும் தேவியைப் போல தயங்கியெல்லாம் நிற்கவில்லை வனா. நொடி கூட தாமதிக்காமல், "தாமுத்தான், மத்தவங்க பேசறத சத்தமில்லாம ஒட்டு கேட்டுட்டு நிக்கறவங்க, அடுத்த ஜென்மத்துல பல்லியா பொறந்து செவுத்துல ஒட்டிட்டே அலைவாங்களாம்" எனத் துடுக்காகச் சொல்லிவிட, நிலமங்கையின் நிலையோ இன்னும் சங்கடமாகிப்போக, சத்தமில்லா சிரிப்பில் குலுங்கினாள் தேவி.


'மங்கையோட தங்கையா இருந்துட்டு இவ இந்த பேச்சு கூட பேசலன்னாதான் அதிசயம்!' என அவளை ஒரு கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவன், "ஓய் ஒழக்கு, யாரப் பார்த்து ஒட்டு கேக்கறேன்னு சொன்ன, நடு கூடத்துல ஒக்காந்து நீங்க பேசற பேச்சு, மைக் செட் இல்லாமையே எங்க வூட்டு பேக்கட வரைக்கும் கேக்குதாங்காட்டியும், போற வரவங்கல்லாம் காதை பொத்திட்டு போறாங்க! அதான் உங்கள தடுத்து நிறுத்த இங்க ஓடியாந்தேன்" என அவளைப் பதிலுக்கு வாரினான்.


"இந்த கதையெல்லாம் என் கிட்ட உடாத அத்தான். காலைல இருந்து உன் பொண்டாட்டிய பாக்காம உன் தலையே வெடிச்சி போயிருக்கும், அத நேரடியா சொல்ல முடியாம வேற சாக்குபோக்கு சொல்லிட்டு இங்க ஓடியாந்திருக்க" என அவள் விடாமல் வாயாட, தன்னை நேரடியாக இழுக்கவும் ஒரு மாதிரியாக ஆகிப்போனது மங்கைக்கு.


தேவி வேறு சத்தமாகவே சிரித்து வைக்க, பட்டென தங்கையின் முதுகில் ஒரு அடி போட்டவள், "கல்யாணம் ஆகி வேற வூட்டுக்கு போகப் போறவ, யார் என்னன்னு பார்த்து பேசவேணாம். வாய அடக்கு வனா" என்றாள் காட்டமாக.


"ஆவ்" என எட்ட முடியாமல் எட்டி தன் முதுகைத் தேய்த்தபடி, "பாரு ஆத்தான் உம்பொண்டாட்டிய, கல்யாண பொண்ணுன்னு கூட பாக்காம என்ன அடி அடிக்குது" என மூக்கால் அழுதபடி வனா அதற்கும் அவனிடமே பஞ்சாயத்துக்குப் போக, 'இவனிடம் இப்படியெல்லாம் கூட பேசுவாளா இவள்' என அதிர்ந்து மங்கை தேவியின் முகத்தை ஏறிட, "இதுங்க ரெண்டும் இப்படித்தான் மங்க, கண்டுக்காத! தாமுண்ணன் இதுக்கு ஃபுல் சப்போர்ட்டு. இல்லாம போனா அசலூர் காரன லவ் பண்றேன்னு வூட்டுல வந்து தெகிரியமா சொல்லியிருக்குமா? இல்ல உங்க தாத்தாவுந்தான் அதுக்கு சுளுவா ஒத்துக்கினிருப்பாரா?" என்றாள் கிசுகிசுப்பாக.


'என்னாது, வனாவோடது லவ் மேரேஜா' என உள்ளுக்குள் வியந்தவள், அதற்கு மேல் அங்கே இருக்க தயங்கி, விசுக்கென்று எழுந்து அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அதுவும் அவன் அங்கே நிற்பதால் மற்றொரு தூணின் பக்கமாக அவள் ஒதுங்கி நடக்க, வேகமாக வந்து வழி மறித்தவன், "தேவி, எம்பொண்டாட்டிக்கு எடுக்க வேண்டிய அளவெல்லாம் எடுத்து முடிச்சிட்டியா" எனக்கேட்டான் பார்வையை மங்கையின் முகத்தில் பதித்தபடி.


"ஆங், ஆயிடுச்சு அண்ணே" என அவள் பதில் கொடுக்க, "அவசரத்துல தெக்கறேன் பேர்வழியேன்னு போனதும் வந்ததுமா தெச்சு வெச்சிட போற. அளவெல்லாம் கச்சிதமா இருக்கனும் ஆமாம், அத விட முக்கியம், நாளைக்கு காலைல எல்லாம் ரெடியா இருக்கணும்" எனக் கிண்டலாகவே சொன்னவன், அவளது முகம் முகம்போன போக்கை ரசித்தபடி, "உன்கூட முக்கியமா பேசணும், மங்க. எங்கூட நம்ம வூட்டுக்கு வா" என்று குரலைத் தழைத்து சொல்ல, அதைக் கண்டுகொள்ளாத பாவனையில் தூணுக்கும் சுவற்றுக்கும் நடுவிலிருந்த சிறு இடைவெளியில் புகுந்து இலாவகமாக அவனைக் கடந்து செல்ல அவள் எத்தனிக்கவும், "தோ பாரு மங்க, நீ இப்படி சும்மா சும்மா ஓடி புடிச்சு விளையாடிகினு இருந்தயின்னா எனக்கு எந்த கவலையும் இல்ல. மெய்யாலுமே இதை எனக்கு சாதகமா மாத்திப்பேன் புரிஞ்சிக்க" என்று கிசுகிசுக்க, புரியாத பாவனையில் அவள் அவனைப் பார்க்கவும், "உன்ன அப்படியே அலேக்கா தூக்கி ஆட்டுக்குட்டி கணக்கா தோள்ள போட்டுகினு போயினே இருப்பேன், எவனும் என்னை தடுக்கவும் மாட்டான் சொல்லிட்டேன்" என அவன் கொடுத்த எச்சரிச்சையில் கடுப்புடன் அவனை ஏறிட்டவள், "ரொம்பவே ஓவரா போற தாமு" என்று சீறினாள்.


"ஹேய், நான் உன்ன ஒண்ணுமே செய்யலியேடி, இதுக்கேவா? எங்க என் மொகத்த பார்த்து சொல்லு, நானா ஓவரா போறேன்? ஏழு வருசமா உன்ன விட்டுத் தள்ளியே நிக்கறேன். தோ, நீ இப்படி கைக்கெட்டுற தூரத்துல நிக்கும் போது கூட உன்ன ஒண்ணும் செய்ய முடியாம, மிரட்டுற மாதிரி கெஞ்சிட்டு இருக்கேன், என்ன பார்த்து ஓவரா போறேன்னு சொல்ற" என, அதையும் கொஞ்சல் மொழியிலேயே அவன் சொல்ல, அதில் பொதிந்திருந்த உண்மை மனதை குழப்ப உள்ளுக்குள்ளே இறுகிப் போயிருந்த ஏதோ ஒன்று லேசாக இளகத் தொடங்க, எங்கே முழுவதுமாக கரைந்துபோய்விடுவோமோ என்ற பயம் அவளை மொத்தமாகப் பீடித்துக்கொள்ள, அப்படியே உறைந்து நின்றாள். அவளது நிலையைச் சாதகமாக்கி அவளது கைப்பற்றி அவளை தன் இழுப்புக்குச் செலுத்தியபடி தங்கள் வீடு நோக்கிச் சென்றான் தாமு.


அவனுடைய பிடியிலிருந்து ìவிடுவித்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்தவளின் கரத்தை விட்டுவிடாமல் இரங்கூன் மல்லிகை கொடிவளைலில் நுழைந்தான்.


அதில் பூத்து குலுங்கிய மலர்களை பார்த்ததும் அவளுக்கு அனைத்தும் மறந்துபோக, அலைகடலென அமைதியின்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவளது மனத்துக்குள்ளேயும் ஒரு இதம் பரவியது. அதனுடன் சேர்ந்து வீட்டிற்குள்ளிருந்து கமழ்ந்து வந்த ஜாதிப்பூவின் அழுத்தமான மணம் அவளைக் கட்டி இழுக்க, "கைய வுடு தாமு, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. வூட்டுக்குள்ள போயி அத்த, ஆயா, எல்லாரையும் பார்த்துட்டு வரேன்" என அவள் சலிப்புடன் சொல்ல, "ரொம்பதான் பண்றடீ" என அவளது விரல்களில் ஒரு அழுத்தம் கொடுத்து மெதுவாக அவளை விடுவித்தபடி, "ரொம்ப நேரம் பேசிட்டு நிக்காம, சீக்கிரமா மேல வந்து சேரு" என்றவன், எங்கே விட்டால் அவளுடைய வீட்டுக்கே திரும்பப் போய்விடுவாளோ என்கிற சந்தேகத்தில், "நீ அங்க வரல, நான் சொன்னத நிச்சயமா செய்வேன்" என அழுத்தமாக எச்சரித்துவிட்டே மேலே சென்றான்.


இவ்வளவு வருடங்கள் கடந்த பின்பும் துளி அளவு கூட மாறாத அவனுடைய இந்த பிடிவாதம் அவளை வியக்க வைத்தது, சலிக்க வைத்தது, தடுமாற வைத்து பயம் கொள்ளவும் வைத்தது.


அவள் இங்கே வந்த பிறகான இரண்டே இரண்டு தினங்கள், அவளுக்கென்னவோ இரண்டு யுகங்களை கடத்தியது போன்ற பிரமையை கொடுத்தது.


எப்படியும் ஆட்டமாக ஆடுவான் என்று தெரிந்தேதான் இங்கே வந்தாள். ஆனால் அவனது இந்த ஆட்டம் அவளையே ஆட்டம் காண வைக்கும் என அவள் கனவிலும் எண்ணவில்லை. அவனுடைய ஆதிக்கத்துக்குப் பணியவே கூடாது என்கிற அவளது வைராக்கியத்தைப் பொடிப் பொடி ஆக்கி, தான் நினைத்ததைச் சாதிக்கிறானே என ஆயாசமாக இருந்தது.


இங்கே உடனடியாக அவள் ஆற்ற வேண்டிய மிக முக்கிய கடமையைக் காரணமாக்கி, காலம் அவளை இங்கே கட்டி இழுத்து வந்திருக்கிறது. இல்லாமல் போனால் அவள் இங்கே வந்திருக்கவே மாட்டாள். உண்மையில் வனாவின் கல்யாணம் ஒரு சாக்குதான், அவள் வராமலேயே போனாலும் அது நடந்தேறும். அவளுடைய