Nee Sonna Oor Vaarthaikaga! 7
Updated: Mar 17
பகுதி - 7
"அவளைப் பார்த்தியா ஹரி!! இன்னும் ஒரு குழந்தை மாதிரியே இருக்கா. அவ நல்லா இருந்தா அதுவே எங்களுக்குப் போதும்! இப்ப இருக்குற இதே மன நிலையோட காலம் முழுக்க இவளை நீ சந்தோஷமா வச்சுப்பன்னா, நான் உன் காதலுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணுவேன்!
அவ படிச்சு முடிக்கற வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையாய் இரு. அதுக்குள்ள நீயும் செட்டில் ஆயிட்டன்னா, நானே நந்தாகிட்ட சொல்லி அவங்க வீட்டுல பேசி உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கறேன்" என்றான் பாலு ஸ்வேதாவைப் பார்த்தபடியே.
"நிச்சயமாடா மச்சான்" என்று நண்பன் தன்னைப் புரிந்து கொண்ட மகிழ்ச்சியில் அவனை அணைத்துக் கொண்டான் ஹரி.
அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வரவே பெண்கள் இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் சாப்பிடத் தொடங்க, "பாலுண்ணா இந்த ஹரி அண்ணாவைப் பார்த்தீங்களா? ஸ்வேதாவுக்கு என்னலாம் பிடிக்கும்ணு தெரிஞ்சு வச்சிருக்காங்க" என்று வர்ஷினி சொல்ல, அதே நேரம், ஒரு வேகத்தில் மிகவும் சூடாக இருந்த சூப்பை ஸ்வேதா சாப்பிட்டுவிட அது அவள் நாக்கை நன்று பதம் பார்த்தது.
"ஸ்ஸ்ஸ்!" என்றவள் சூடு தாங்காமல் தவிக்க, அருகிலிருந்த குளிர் நீரை அவளிடம் நீட்டிய பாலு, "நீ என்ன சின்னக் குழந்தையா ஸ்வேதா? கொஞ்சம் பார்த்து சாப்பிடக்கூடாது?" என்று அவளைக் கடிந்து கொள்ள,
"டேய் மச்சான் இப்பதானடா நீ அவளை குழந்தைன்னு சொல்லிட்டு இருந்த, அதுக்குள்ள இப்படி மாத்தி மாத்திப் பேசற?" என்று ஹரி அவன் காதில் கிசுகிசுத்தான். வந்த சிரிப்பை அடக்க முடியாமல் பாலுதான் தவிக்க வேண்டியதாயிற்று.
மறுபடியும் வர்ஷினி ஏதோ பேச வர, பேசாதே என பாலு ஜாடை செய்ததில் அவள் வாயை மூடிக்கொண்டாள்.
பிறகு உணவு உண்டு முடித்து அதற்கான பணத்தைச் செலுத்திவிட்டு, கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஓய்வாக அமர்ந்தவாறு கதை பேசத் தொடங்கினர் நண்பர்கள் நால்வரும்.
கடல் அலைகள் எழுப்பிய ஓசையைத் தவிர வேறு சப்தங்கள் இல்லாமல் அந்த இடமே ஆள் அரவமற்று மிக அமைதியாக இருந்தது. "நீ நல்லா பாடுவ இல்ல, இப்ப ஒரே ஒரு பாட்டுப் பாடேன், ஸ்வேத்" என்று ஹரி கேட்க,
“நீங்களும் பாடுவீங்கதான? முதல்ல நீங்க ஒரு பாட்டு பாடுங்க, அதுதான் உண்மைல நீங்க எனக்குக் கொடுக்கற பர்த் டே கிஃப்ட், அப்பறம் நான் பாட ட்ரை பண்ணறேன்!" என்று அவனை மடக்கினாள் ஸ்வேதா.
‘பர்த் டே கிஃப்ட்’ என்று அவள் கேட்டதனால் மறுக்கத் தோன்றாமல் ஹரியும் பாடத் தொடங்கினான் அந்தப் பாரதியின் பாடலை.
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்;
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்… என்று.
அவன் பாடி முடிக்கும் வரை ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாய் இரசித்திருந்தனர் மற்ற மூவரும். ஸ்வேதா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.
"அப்பா... என்னமா படறீங்க ஹரி! இந்தப் பாட்டு எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியாது!” என்று அவள் சொல்லவும், ‘எனக்கா தெரியாது’ என்று மனதிற்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டான் ஹரி.
"எல்லாத்தையும் விட, த பெஸ்ட் பர்த் டே கிஃப்ட் எனக்கு இதுதான்" என்று குதூகலித்தாள் ஸ்வேதா. அதே நேரம் சற்றுத் தொலைவில் போய் நின்று கடலை வெறிக்கத் தொடங்கினாள் வர்ஷினி.
அவள் எழுந்து போவதைப் பார்த்து பாலு அவளின் அருகில் வர, "ஸ்வேதா ரொம்ப லக்கி இல்ல பாலுண்ணா? ஹரி அண்ணா அவளை லவ் பண்றாங்கன்னு நினைக்கறேன்! இந்தப் பாட்டு அவளுக்கு ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? உண்ணி கிருஷ்ணன் வாய்ஸ்ல இதை அவ ஃபோன்ல சேவ் பண்ணி வச்சிருக்காண்ணா. ரிப்பீட்ல போட்டுக் கேட்டுட்டே இருப்பா! இதெல்லாம் எப்படி ஹரி அண்ணா நோட் பண்ணி வச்சிருக்காங்க பாருங்களேன்!”
”அவளோட இஷ்ட தெய்