top of page

Nee Sonna Orr Vaarthaikaaga! 6

Updated: 6 days ago

பகுதி - 6


தன்னவளின் பிறந்தநாளின் முதல் வாழ்த்து தன்னுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பிடிவாதத்துடன், சரியாக இரவு பன்னிரண்டாக சில நொடிகளே இருக்கும் நேரம் ஸ்வேதாவின் எண்ணிற்கு அழைத்தான் ஹரி.


எதிர்முனையிலோ, "தேங்க் யூ டா என் செல்ல அண்ணா" மிக மகிழ்ச்சியுடன் ஒலித்தது அவளது குரல்.


‘மற்றவர்களைப் போலவே தன்னையும் ஒரு நண்பனாக மட்டுமே நினைக்கிறாளே, அதுவும் முதன் முதலாக வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று ஆசையுடன் அழைத்த இந்த நேரத்திலும், கைப்பேசியின் திரையைக் கூட பார்க்காமல் இப்படியா பேசுவாள் இவள்?’ என்று அவளது கவனக்குறைவை எண்ணி மனதுக்குள்ளேயே அவளை வறுத்தெடுத்தவாறு சில நொடிகள் மௌனமாகவே இருந்தவனை,


"ஹலோ! ஹலோ!" என்ற அவளுடைய அழைப்பு கலைக்க,


"பிறந்தநாள் வாழ்த்துகள்! ஹாப்பி பர்த்டே ஸ்வேதா!! ஹரி ஹியர்" என்றான் அவன்.


"நன்றி! நன்றி! நன்றி ஹரி! ஃபர்ஸ்ட் விஷ் உங்களோடதுதான், ரொம்பவே சந்தோஷமா இருக்கு" என்றவளின் குரலில் மகிழ்ச்சியுடன் கொஞ்சம் ஆச்சர்யமும் கலந்திருந்ததோ?


"எப்பவும் அண்ணாதான் முதல்ல விஷ் பண்ணுவான், அவன் இல்லாம நான் ஒரு பிறந்தநாள் கொண்டாடறதே இதுதான் ஃபர்ஸ்ட் டைம், அவன்தான் கூப்பிட்டான்னு நினைச்சுட்டேன், சாரி" என்றாள் தொடர்ந்து.


"சரி விடு, பிறந்தநாளும் அதுவுமா நீ சாரி எல்லாம் கேட்க வேண்டாம், காலைல ஏழு மணிக்கு ரெடியாகி காலேஜ் பஸ் நிற்கற இடத்துக்கு வந்திடு போதும். நாளைக்குப் பார்க்கலாம் பை" என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவனிடம் அவசரமாக, "நீங்க கிஃப்ட் பண்ண புடவை ரொம்ப சூப்பரா இருக்கு, இந்தக் கலர் எனக்கு ரொம்பப் பிடிக்கும், மத்த நெக்லெஸ் செட், வளையல் எல்லாமே செம்மயா இருக்கு தேங்க்ஸ்" என்று சொல்ல,


"இட்ஸ் ஓகே ஸ்வேதா! புடவைய அம்மா செலக்ட் பண்ணாங்க, மத்ததெல்லாம் வர்ஷியும் பாலுவும்தான் வாங்கினாங்க, உனக்குப் பிடிச்சிருந்தா ரொம்ப சந்தோஷம், பை" என்ற ஹரியிடம்,


"ஒரே ஒரு நிமிஷ்ம் ஹரி! நாளைக்கு எங்கதான் போகப் போறோம்? இப்பவாவது சொல்லுங்களேன் ப்ளீஸ்" என்று, ஸ்வேதா கெஞ்சலாகக் கேட்க,


"அது சஸ்பென்ஸ், நாளைக்குத் தானாகவே உனக்குத் தெரியத்தான் போகுது, இப்பவே என்ன அவசரம்” என்று அழைப்பைத் துண்டித்தான் ஹரி.


‘பரவாயில்ல, அவ கொஞ்சம் சொதப்பினாலும் நாம முதல்ல விஷ் பண்ணதுல அவ ஹாப்பிதான், நாம வாங்கிக் கொடுத்த புடவையும் அவளுக்குப் பிடிச்சிருக்கு. உஃப்... அவ ஜாலியாதான் இருக்கா, மனசல இருக்கற ஃபீலிங்ஸை மறைக்க முடியாம இவ படிப்பு முடியறதுக்குள்ள நாமதான் ஒரு வழி ஆயிடுவோம் போலிருக்கு’ என மனதிற்குள்ளேயே புலம்பித் தவித்தபடி உறங்கிப் போனான் ஹரி.


அடுத்த நாள் அவர்களுக்காய் அழகாக விடிந்தது


***


அவன் பரிசளித்த புடவையில், வர்ஷினி தேர்வு செய்திருந்த அணிகலன்களை அணிந்து அழகுற, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஸ்வேதாவை தன் விழிகளால் பருகியவாறு அவனது காரை ஓட்டி வந்து அவளுக்கு அருகில் நிறுத்தினான் ஹரி.


பாலுவை எதிர்பார்த்திருந்த ஸ்வேதாவோ, அருகில் வந்து நின்ற காரைக் கண்டு, ஒரு நொடி திடுக்கிட்டுப்போனாள்.


"பிறந்தநாள் வாழ்த்துகள் சுவீட்டா" என்றவாறே காரிலிருந்து இறங்கிய பாலுவைக் கண்டதும் நிம்மதியுற்றவள்,


"தேங்ஸ் பாலுண்ணா! நீங்க என்ன கார்ல வந்து இறங்கறீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்க,


காரின் பின் கதவைத் திறந்தவாறே, "நீ முதல்ல உள்ள வந்து உட்கார்ந்துட்டு மத்த கேள்விலாம் கேளு பர்த்டே பேபி" என்றான் பாலு.


உள்ளே அமர்ந்த ஸ்வேதா வண்டியை ஓட்டி வந்த ஹரியைக் கண்டு புன்னகைத்தவாறே, ‘ஓஹோ, ஹரியோட கார்தானா இது’ என்று மனதிற்குள் நினைத்தவள் எப்பொழுதும்போல் விளையாட்டாக,


"ஆஹான்!! எப்படியோ என்னால, வீக் எண்ட்ல கூட நம்ம ஹரியோட காத்து இந்தப் பக்கம் அடிச்சிருக்கு" என்று கிண்டலுடன் சொல்ல,


"அஃப்கொர்ஸ் நோ டௌவ்ட், ஒன்லி ஃபார் யூ ப்ரின்ஸ்ஸ்!" என்று புன்னகையுடன் அவனும் தன்னை மறந்து உல்லாசமாகச் சொல்லி வைக்க,


வியப்பு மேலிட விழி விரித்து அவனைப் பார்த்து, "வாவ