Nee Sonna Oor Vaarthaikaaga! 16 (FINAL)
Updated: 6 days ago
பகுதி - 16
பெண் பார்க்க வந்த எல்லோரும் அமர்ந்திருப்பது தெரியவும் அவளால் எதையும் சொல்லக்கூட முடியவில்லை.
சத்தம் செய்யாமல் பூனை நடையுடன் அவளை முதல் தளத்தில் இருந்த அவளது அறைக்கு அழைத்து வந்த தரணி, "சீக்கிரமா நல்ல புடவையா கட்டிட்டு ரெடியா இரு, இதோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டுச் செல்ல எத்தனிக்க,
அவளைத் தடுத்த ஸ்வேதா, "அண்ணி! நான் அவ்வளவு சொன்ன பிறகும் நீங்க எல்லாரும் ஏன் இப்படி செய்யறீங்க?" என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்கவும்,
"என்னனு தெரியல ஸ்வேதா, உன் அண்ணாதான் திடீர்னு இந்த ஏற்பாட்டைச் செய்துட்டார். நீ எது கேக்கறதுன்னாலும் எல்லாரும் போன பிறகு அவர் கிட்டயே கேட்டுக்கோ!! பொண்ணு பார்க்கத்தான வந்திருக்காங்க, மாப்பிளை கூட இன்னும் வரல தெரியுமா? உனக்குப் பிடிக்கலைன்னா உன்னை யாரும் கட்டாயப்படுத்தப் போறதில்ல. அதனால நோ ஒரீஸ்" என்று சொல்லிவிட்டுப் போனாள்.
"வெளியில் சென்று அனைத்தையும் சொல்லிவிடலாம்!" என்று எண்ணியவாறு ஒரு முடிவுக்கு வந்தவளாக அவளது பிறந்தநாளன்று ஹரி அவளுக்குப் பரிசளித்த புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள் ஸ்வேதா.
கதவைத் தட்டிவிட்டு அவளுடைய அம்மா லதாவுடன் உள்ளே நுழைந்த தரணி அவள் சொல்வது எதையும் காதில் வாங்காமல் சில நகைகளை அணிவித்து எளிமையான ஒப்பனைகளையும் செய்துவிட்டு மல்லிகை சரத்தையும் கூந்தலில் சூட்டினாள்.
பிறகு அவளைக் கீழே வருமாறு அழைக்கவும் சில நிமிடங்களில் தானே வருவதாகச் சொல்லி அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு கைப்பேசியை எடுத்து ஹரிக்கு அழைக்க, அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை. அதில் கொஞ்சம் பதட்டமானவள் வாட்ஸ்ஆப்பில் குறுந்தகவல் அனுப்பவும் அதையும் அவன் பார்க்கவில்லை.
வேறு வழியில்லாமல் அவள் கீழே இறங்கி வரவும் மாடிப் படியின் அருகிலேயே நின்றிருந்த தரணி அவளை அழைத்துச் சென்று வெங்கட் மற்றும் நந்தாவுடன் பேசிக்கொண்டிருந்த அந்தப் புதியவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.
"இவங்கதான் மாப்பிள்ளையோட அப்பா! மாப்பிள்ளையோட அம்மா! அவரோட அக்கா மாமா!" என அனைவரையும் இவளுக்கு அறிமுகப்படுத்த, மரியாதை நிமித்தம் இரு கரம் குவித்து தலை அசைத்தாளேத் தவிர மாப்பிள்ளை என்ற வார்த்தையே அவளுக்கு அத்தனைக் கசப்பாக இருந்தது.
ஆனால் அனைவருமே ஸ்வேதாவைப் பார்த்த பார்வையில் அதீத அன்பும் நட்புணர்வும் கலந்திருந்தது அவளுக்குப் புரிந்தது.
அவர்களது பார்வையே அவர்களுக்கு இவளைப் பிடித்திருப்பதை சொல்லாமல் சொல்ல, அதுவேறு இவளைக் கொல்லாமல் கொன்றது.
செய்வதறியாமல் தவித்துப்போய் அவள் நின்றிருக்க, அன்றைய காலை முதலே அவளுடன் கலந்திருந்த ஹரி உபயோகிக்கும் வாசனைத் திரவியத்தின் மணம் அவளது நாசியைத் தீண்ட, "ஹரி!" என்று மெல்லிய குரலில் சொல்லியவாறு அவசரமாகத் திருப்பினாள் ஸ்வேதா.
கைகளில் சிவப்பு நிற ரோஜாக்கள் நிறைந்த மிகப் பெரிய பூங்கொத்து ஒன்றை ஏந்தியவாறு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஹரி. மூச்சு விட மறந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வேதா.
அவனைக் கண்ட அந்த நொடி அவளது மனதில் இருந்த அனைத்துக் குழப்பங்களும் நீங்கி தெளிவடைந்தது.
அதற்குள் ‘ஹரிப்பா!’ என்றவாறு அவனை வந்து அணைத்துக்கொண்ட விஜயா, "இவன்தான் எங்க ஹரி கிருஷ்ணா!" என்று அனைவருக்கும் அவனை அறிமுகப்படுத்தினார்.
நந்தா, "வெல்க்கம் மாப்ள" என்றவாறு, அவனுடன் கைக் குலுக்க, வெங்கட்டும் கை குலுக்கி பின்பு அவனை அணைத்துக்கொண்டார்.
அந்த மலர் கொத்தை தன் அக்கா கபிலாவிடம் கொடுத்து அதை ஸ்வேதாவிற்குக் கொடுக்கச் சொல்லவும், இளையவர்கள், "ஓஹோ!" என்று குரல் எழுப்ப, அந்த இடமே மகிழ்ச்சியால் நிறைந்தது.
ஆச்சரியத்தில் விழி விரித்து கண்களே தெரித்துவிடும்போல் அவர்களைப் பார்த்த ஸ்வேதாவை நோக்கி யாரும் அறியாதவாறு கண்களைச் சிமிட்டி எப்பொழுதும்போல் புருவத்தைத் தூக்கி என்ன? என்று ஹரி பார்க்க,
சிறிது நேரத்திற்குள் அவளைப் படுத்தி எடுத்தக் கோபத்தில் கண்களில் கணலைத் தேக்கி நோக்கு வர்மத்தில் அவனைத் தாக்கியவள் பிறகு அனைவரிடமும் இயல்பாகப் பேசத் தொடங்கினாள் ஸ்வேதா
"இவர்தான் ஆக்ஸிடன்ட் நடந்த சமயம் நம்ம ஸ்வேதாவ அடையாளம் கண்டு பிடிச்சு நமக்கெல்லம் தகவல் சொன்னவர்!" என்று இரகசியமாக வெங்கட்டிடம் சொன்னார் லதா. அதைக் கேள்விப்பட்டதும் மேலும் மகிழ்ச்சிதான் ஏற்பட்டது வெங்கட்டிற்கு.
பிறகு ஹரியின் அப்பா ராதாகிருஷ்ணனுடன் கலந்து பேசி, மறுநாள் எளிமையாகத் திருமணத்தை நிச்சயம் செய்துகொள்ளலாம் என்றும் ஸ்வேதாவின் படிப்பு முடிந்து அ