top of page

Nee Sonna Oor Vaarthaikaaga! 15

Updated: Mar 17

பகுதி - 15


ஹரியின் அணைப்பும் விரல்களின் அழுத்தமும் கூடிக்கொண்டே போக, அவன் மனதை உணர்ந்தவள், "பழசையெல்லாம் மறந்திடுவோம் ஹரி! இப்படி இறுகிப்போயிருக்கற உங்களோட முகத்தைப் பார்க்க எனக்கு ரொம்பவே வேதனையா இருக்கு. அன்னைக்கு இருந்த நிலமைல நம்ம ரெண்டு பேருக்குமே சூழ்நிலையை சரியா ஹான்டில் பண்ற அளவுக்கு முதிர்ச்சியும் பக்குவமும் இல்லங்கறதுதான் உண்மை.”


”கல்யாணம் ஆனப் பிறகும் கூட ஒருத்தருக்கு ஒருத்தர் சரியான புரிதல் இல்லாம சகிப்புத்தன்மை இல்லாம பொறுமை இல்லாம விவகாரத்துக்காக கோர்ட்டுக்குப் படையெடுத்துட்டு இருக்குற மக்களைப் பார்த்துட்டுதானே இருக்கோம்.


அன்னைக்கு இருந்த சூழ்நிலைல நாம கல்யாணம் பண்ணிட்டு இருந்தாலும் நிறைய மிஸ் அன்டர்ஸ்டேன்டிங் ஏற்பட்டிருக்கும். ஆனா இந்த தெனிவான மனநிலைல இப்ப நாம கல்யாணம் செய்துகிட்டா வாழ்க்கை நிச்சயம் ஹாப்பியாத்தான் இருக்கும்!


அதனால முதல்ல எங்க அப்பாகிட்ட வந்து பேசுங்க" என்று முடித்தாள் ஸ்வேதா.


அப்படியுமே அவன் முகம் தெளிவடையாமல் இருக்கவும், "ப்ச்சு நீங்க இப்படியே இருந்தா நான் பாட்டுக்கு அமெரிக்கா போய் அங்கயே வேலைல ஜாயின் பண்ணிடுவேன். இன்னும் மூணு வருஷத்துக்கு என்னால இங்க வர முடியாது! பரவாயில்லையா?" என மிரட்டுவது போல் கேட்க, கோவத்தில் அவனது முகம் ஜிவு ஜிவு எனச் சிவந்து போனது.


"போவடி போவ! என்ன திமிரா? இவ்வளவு நாள் உன்னை, உன் போக்கிலேயே விட்டு வெச்சதால என்னை கேனையன்னு நினைச்சுட்டியா? நானும் பாக்கறேன் நீ எப்படி யூ.எஸ். போறேன்னு!" எனக் கோபத்தின் உச்சியில் உண்மையிலேயே சிங்கம் போல கர்ஜித்தவனை நன்றாக முறைத்தாள்.


எரிச்சலுடன் அவன் முகத்தைத் திருப்ப, "என்ன இப்படிலாம் மிரட்டினா நான் போகமாட்டேன்னு நினைச்சீங்களா, யாராலயும் என்னைத் தடுக்க முடியாது மிஸ்டர் ஹரி கிருஷ்ணா!" என சவால் விடுவதுபோல் அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுக்குச் சிரிப்பு வந்துவிட,


அவள் கிண்டல் செய்கிறாள் என்பதே புரியாத பாவத்தில், "என்னடீ? என்னால தடுக்க முடியாதா? நான் நினச்சா உன்னை என்ன வேணாலும் செய்ய முடியும் தெரியுமா?" எனக் கோபத்துடனே வந்தன அவனது வார்த்தைகள்.


"ஐயோ! இவனை ரொம்பவே டென்ஷன் பண்ணிட்டோமோ?" என்று எண்ணிய ஸ்வேதா பயத்துடனே அவனது முகத்தைப் பார்க்க, அடக்கப்பட்ட சிரிப்பில் அவனது உதடுகள் துடித்துக் கொண்டிருக்க கோபத்திற்குப் பதில் அவனது முகம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.


உஃப்! என்ற நீண்ட பெருமூச்சு எழ, "அப்படினா எப்பவும் இப்படி சிரிச்ச முகமாவே இருக்கணும் மிஸ்டர் ஹரி" என்றாள் ஸ்வேதா அவன் முகம் பிரதிபலித்த மகிழ்ச்சியைக் கண்களின் வழியே தன் மனதில் நிரப்பியவாறு.


"நீங்க என் கூட இருந்தா நான் இப்படியே இருப்பேன் என் ஸ்வீட் ஹார்ட் மேடம்" என்றான் ஹரி புன்னகை மாறாமல்.


அதற்குள் முகம் வாடியவள், "ப்ச்சு ஆனாலும், நான் இன்னும் ரெண்டு மூணு நாள்ல யூ.எஸ். போய்தான ஆகணும்!" என்று வருத்தத்துடன் சொல்லவும்,


“ஜஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ்தான? கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள ஓடிப்போயிடும்! யாம் இருக்க பயம் ஏன்!" என்றான் ஹரி ஒரு மர்ம புன்னகையுடன்.


அதற்குள் நினைவு வந்தவளாக நேரத்தைப் பார்க்கவென ஹரியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த, அவனது கைப்பேசியை உரிமையுடன் அவள் எடுக்க அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.


அதைத் திறந்து பார்த்த ஒரு நொடியில் இன்பமாய் மலர்ந்தாள் ஸ்வேதா. அதில் முகப்புப் படமாக அவள்தான் புன்னகை சிந்திக்கொண்டிருந்தாள்.


அவள் அந்தப் படத்தை ஆராய அது அமெரிக்காவில் உள்ள வர்ஷினியின் வீட்டில் எடுக்கப்பட்டதெனத் தெரியவும், "அடப்பாவிகளா! அத்தனைப் பேரும் சரியான கூட்டுக் களவாணிங்க! இருக்கு அந்த மாரியம்மாவுக்கு!" என ஸ்வேதா எகிற,


வாய் விட்டுச் சிரித்த ஹரி, “இதுக்கே இப்படின்னா? மொத்தத்தையும் பார்த்தன்னு வை... அவள நீ என்னதான் செய்ய மாட்ட?!" என்றவன் அவளது கையைப் பிடித்து இழுத்தவாறு வீட