top of page

Nee Enbathe Naanaga - 16

16 - இணக்கம்


விடியற்காலையிலேயே எழுந்து எப்போதும் போல் பள்ளிக்கு ஆயுத்தமானான் செழியன்.


ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு அவன் மனம் ஜானவியிடம் தடுமாறியதை இப்போது எண்ணும் போதே வலித்தது. அதை ஏற்க முடியாமல் அவன் ரொம்பவும் மனதளவில் அவதியுற்றான்.


இரு வாரங்கள் இப்படியே கடந்து சென்றுவிட்டன.


அப்போதும் செழியனுக்கு ஏனோ அவள் முகம் பார்த்து பேச சஞ்சலமாக இருந்தது.


அவளின் நட்பை தான் கலங்கப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வா அல்லது அவளை மீண்டும் ஒரு தடவை அப்படி ஒரு கோணத்தில் பார்த்துவிடுவோமா என்ற பயமா?


ஏதோ ஒன்று அவனிடமிருந்து அவளை விலகி நிற்க செய்தது. நேருக்கு நேராக முகம் பார்த்து பேசாமல் முடிந்தவரை அவளை தவிர்த்தான்.


அதுவும் இரவு நேரங்களில் குழந்தைகளை அவர்களோடு உறங்க வைத்து கொள்வதில் கறாராக இருந்தான். ஏதேனும் ஒரு காரணம் சொல்லி மீனாவையும் அன்புவையும் அவர்களோடே படுக்க வைத்துகொண்டான்.


அவன் மீதே அவனுக்கு உண்டான அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான் அது.


ஆனால் ஜானவி தான் சங்கடப்படுகிறோம் என்பதால் அவன் அப்படி செய்கிறான் போலும் என்று எண்ணி கொண்டாள்.


செழியனின் மனநிலை ஜானவிக்கு தெரியவில்லை. அவன் விலகி நிற்க முயன்றாலும் அவள் அவனிடம் எப்போதும் போலவே இயல்பாக நடந்து கொண்டாள். பேசினாள்.


இந்த இரண்டு வாரத்தில் ஜானவி செழியன் வீட்டில் ரொம்பவும் இயல்பாக பழகிவிட்டிருந்தாள். பாண்டியனும் சந்தானலட்சுமியும் அந்தளவுக்கு அவளிடம் நெருக்கமானதும் கூட ஒரு காரணம்.


அதேநேரம் அவள் அலுவலக வேலைகள் செய்ய எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டி, அவள் முன்பு குடியிருந்த எதிர்வீட்டில் சரவணனையும் ரேஷ்மாவையும் வைத்து தம் அலுவல்களை பார்த்து கொண்டாள்.


அன்று சனிக்கிழமை செழியன் பள்ளிக்கு போய்விட்டு திரும்ப, கதவு திறந்திருந்தது. வீட்டின் வாசல் கேட் மட்டும் பூட்டியிருந்தது.


அதுவும் வீட்டில் ஆள்அரவமே இல்லை.


"அன்புக்குட்டி.... மீனும்மா..." என்று அவன் அழைக்க பதில் குரலே இல்லை.


செழியன் புரியாமல், 'என்ன? வந்ததும் இரண்டு பேரும் எகிறிட்டு ஓடி வருவாங்க... எங்கே போனாங்க? என்று யோசித்து கொண்டே அவன்,


"ம்மா" என்று அழைத்தான்.


ஜானவி சமையலறையிலிருந்து, "இதோ வரேன்" என்று குரல் கொடுத்துவிட்டு சாவியை எடுத்து வந்து பூட்டை திறக்க,


"எங்க? வீட்டில யாரையும் காணோம்" என்று வினவினான்.


"எல்லோரும் பக்கத்தில பெருமாள் கோவில் போயிருக்காங்க... அவங்க தாத்தா பாட்டி கிளம்பினதை பார்த்ததும் இந்த வாலுங்களும் கூடவே கிளம்பிடுச்சு" என்று சொல்லி கதவை திறந்துவிட்டு அவள் உள்ளே செல்ல பின்னோடு வந்தவன்,


"அப்போ வீட்டில யாருமே இல்லையா?" என்று அழுத்தமாக கேட்டான்.


"என்னை பார்த்தா ஆளா தெரியலயா உங்களுக்கு?" என்று ஜானவி திரும்பி நின்று புருவத்தை உயர்த்த,


அவள் முகம் பார்க்காமல் தவிர்த்தபடி, "சேச்சே.... அப்படி இல்ல.... பசங்க இல்லையான்னுதான்... அவங்க இல்லாம வீடே அமைதியா இருக்கே" என்று சமாளித்தான்.


"அதென்னவோ உண்மைதான்... அவங்க இரண்டு பேரும் கிளம்பனதும்... எனக்கே இது நம்ம வீடான்னு சந்தேகம் வந்திருச்சு" என்று அவள் முறுவலித்து சொல்ல,


செழியன் முகத்திலும் புன்னகை அரும்பியது.


"டீதான்