Mathini Yamini [pre-Final]
மாயா-11
"உடம்பெல்லாம் எரிஞ்சுது ஜெய்! பத்தி எரிஞ்சுது! வலியைத் தாங்கவே முடியல ஜெய்! என்னால கொஞ்சம் கூட தாங்க முடியல!
என்னை காப்பாத்த அப்ப அங்க யாருமே இல்ல ஜெய்! யாருமே இல்ல!" அழுகையினூடே சொல்லிக்கொண்டே போனாள் மாதினிக்குள் நிரம்பியிருந்த யாமினி!
என்ன காரணம் ஏது காரணம் என அறிந்துகொள்ளாமலேயே அந்த துயரத்தை அனுபவித்தவளின் தொண்டைக் குழியிலிருந்து எழுந்த கேவல் அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜெய்யின் மனதில் வேதனையை மிகைப் படுத்தியது.
மாதினி மூலம் 'கல்லூரியில் நடத்த தீ விபத்தில் யாமினி இறந்துவிட்டாள்" என்ற செய்திதான் அவனுக்கு வந்தது.
அதைக் கேள்விப்பட்டு அவன் துடித்த துடிப்பு கொஞ்சம் நஞ்சமில்லை.
இப்போது அதைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் துடித்தான் ஜெய், அவள் அடைந்த வேதனையை தானே அனுபவித்தவன் போல!
"சாரி யாமு! சாரி யாமு! அந்த நேரத்துல நீ ரொம்ப தவிச்சு போயிருப்ப இல்ல! நான் உன் பக்கத்துல இல்லாம போயிட்டேனே!
எங்களால உனக்கு எந்த நியாயமும் செய்ய முடியலே யாமு! சாரி யாமு!" எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான் அவன்.
அதைக் கேட்டு, "ஹா! என்ன நீ எனக்கு நியாயம் தேடப்போறியா?” எனப் பெருங்குரலெடுத்துச் சிரித்தவள், எனக்கான நியாயத்தை நானே தேடிகிட்டேன்! தேடிகிட்டு இருக்கேன் ஜெய்!" என்றாள் அவள் சீற்றத்துடன்.
"யாமினி!" என அவன் அதிர்ச்சியுடன் சொல்ல, அவனது கண்களில் குடிகொண்டிருந்த மிரட்சியை அனுபவித்துக்கொண்டே, "என்னோட முதல் பலி அந்த நர்ஸ் ஜூலி!
அடுத்தது நந்தா!
மூணாவதா சதா!
இன்னும் மீதம் இருக்கறவங்களையும் பழி வாங்க பசியோட காத்துக்கிட்டு இருக்கேன் ஜெய்!" என்றாள் அவள் வன்மமாக!
அவளது முகமே களை இழந்து விகாரமாக மாறியிருப்பதுபோல் தோன்றியது ஜெய்க்கு!
"மாது!" என அவளை அழைத்தவன் உடனே மாற்றிக்கொண்டு, "சாரி யாமு! கூல் டவுன்!" என அவளைச் சமாதான படுத்த முயன்றான் அவன்.
"ஷ்.. குறுக்க பேசாத ஜெய்! எனக்கு பிடிக்கல!" என்றவள், "என்னை சமாதான படுத்த உன்னால முடியாது!
அதனால நடுவுல எந்த கேள்வியும் கேக்காம நான் சொல்றத கேளு" எனக் கட்டளையாகச் சொன்னவள், தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.
"அந்த காலேஜ்ல படிக்கறவங்க மட்டும் இல்ல, இன்னும் நிறைய பெண்களை இந்த போதை பழக்கத்துக்கு ஆளாக்கி இருந்தாங்க அந்த சதையை பிச்சி தின்னும் ஓநாய்கள்.
அந்த சதா டிவி சீரியல் எடுக்கறேன்னு சொல்லி நடிக்க சான்ஸ் தேடி வர பொண்ணுங்களை நரேன் மாதிரி ஆளுங்களுக்கு பலி கொடுக்கிறான்.
இதுதான் இவனுங்க பிழைப்பே!
வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்ல ஊனமாஞ்சேரி தாண்டி ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு!
அந்த நந்தாவும் பிரபுவும் அங்க இருந்துதான் அந்த பொண்ணுங்கள பிக் அப் பண்ணிட்டு போய் வீராவோட இன்ச்சார்ஜ்ல இருக்கற பப்ல விடுவான்!
மறுபடியும் அவங்கள அங்கேயே கொண்டுவந்து விட்டுட்டு போயிடுவான்.
நவமபர் பதினாலாம் தேதி, எங்களை அந்த ரூம் குள்ள போட்டு பூட்டிட்டு போனாளே அந்த நர்ஸ் ஜூலி அவளை அந்த இடத்துல ட்ராப் பண்ணிட்டு போனானுங்க.
மிட் நைட் வேற; யாருமே இல்லாம அந்த ரோடே வெறிச்சோடி கிடந்தது.
வெஹிகிள்ஸ் கூட அதிகம் போகல.
அப்படி இருக்கும் பொது நான் அமைதியா அவளுக்கு முன்னால போய் நின்னேன்; அவ்வளவுதான்!
என்னைப் பார்த்ததும் தலை தெறிக்க ஓட ஆரம்பிச்சா அவ!