top of page

Mathini-yamini 7

மாயா-7


சொன்னது போலவே அவர்கள் வழக்கமாக சந்திக்கும், வண்டலூர் உயிரியல் பூங்காவின் எதிர் முனையில் அமைத்திருக்கும் நட்சத்திர விடுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மதுபான அருந்தகத்தில் அதாவது 'பார்'ரில் செல்வம் காத்துக் கொண்டிருக்க தன் அடியாள் பிரபுவுடன் அங்கே வந்து சேர்ந்தான் வீரா.


உடனே தன் பணியைச் சிரமேற்கொண்டு நெருங்கி வந்த 'பேரர்'ரிடம் உணவுக்கு ஆவண செய்தபின் செல்வம், “உணர்ச்சி வசப்பட்டு போனில் இந்த விஷயமெல்லாம் பேசாதீங்க வீரா.


ஏற்கனவே அந்த பொண்ணு கேஸ்ல எல்லாரும் கேக்கற கேள்விக்கே என்னால பதில் சொல்ல முடியாம தவிச்சேன்.


ஒரு வழியா இப்பதான் அடங்கி இருக்கு” எனச் சலிப்பாகக் கூற, வீராவோ, “அதை மறைக்கத்தானே லட்ச லட்சமா கொட்டினோம்.


எப்படி பதில் சொல்லுவீங்களோ அது உங்க பாடு.


ஏற்கனவே என் ஃப்ரண்ட்ஸ் இரண்டு பேர ஆக்சிடண்டுங்கற பேர்ல யாரோ போட்டுத் தள்ளிட்டாங்க.


இப்படியே போனா எங்க இரண்டு பேருக்கும் என்ன ஆகுமோன்னு பயந்து பயந்தே சாக வேண்டியதுதான்.


என்னால சுத்தமா முடியால.


இதுக்கு பின்னால் இருக்கும் நபர் யாருன்னு நீங்க உடனே கண்டுபிடிக்கணும்" என்றான் காரமான குரலில்.


"நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்ல வீரா" என அழுத்தி சொன்ன செல்வம், "பழி வாங்கற அளவுக்கு அந்த பொண்ணுக்கு அரசியல் பேக்கிரௌண்டோ இல்ல பைனான்ஷியல் பேக்கிரௌண்டோ எதுவும் கிடையாது.


அவங்க ஒரு சாதாரண விவசாய குடும்பம்தான்.


அப்பா கூட ப்ரைவேட்ல நல்ல சம்பளத்துல எதோ வேலைல இருந்தாரு.


அவரும் அந்த யாமினி இறந்த பிறகு வேலையை விட்டுட்டு ஊரோட போயிட்டாரு.


அவளோட தாத்தா அந்த காலத்து தேங்கா மூடி வக்கீலு. அவரே நேர வந்து வாதாடினா கூட யாமினிக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்ல கொலைதான்னு அவரால நிரூபிக்க முடியாது.


கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா அந்த மாதினி மட்டும்தான்!


ஆனா அந்த பொண்ணு கூட சட்டம் படிச்சு முடிச்சிட்டு இப்ப கொஞ்ச நாளாத்தான் கே.ஆர் சார் கிட்ட ஜூனியரா இருக்கு.


ஆனா அந்த பொண்ணு கூட இதுவரைக்கும் எந்த கேள்வியும் கேக்கல.


இந்த மீடியாலதான் கிளப்பி விட்டுட்டே இருந்தாங்க! வேற வேற சென்சேஷனல் இஷ்யூஸ் வரவே இப்ப இதை மறந்திருக்காங்க!” எனக் கூற அதைக்கேட்ட வீரா, “ஆமா நீங்க அந்த வக்கீல் பொண்ணைப் பார்திருக்கீங்க இல்ல? என்று கேட்க, "அமாம்பா பார்க்க அச்சு அசல் அந்த செத்துப்போன பொண்ணு மாதிரியே இருக்கும் அந்த மாதினி” என்று முடித்தார் செல்வம்.


"இத்தனை நாள் இதைப் பத்தி என் கிட்ட எதுவுமே நீங்க சொல்லல! சதா சொல்லித்தான் எனக்கே தெரியும்!" என்று கடிந்துகொண்ட வீரா இனிமே நானே கவனிசிக்கறேன் என்று சொல்ல, செல்வமோ, "நீங்க ஏற்கனவே செஞ்சதே போதும். மறுபடியும் ஏதையாவதை செஞ்சு ஏழரைய கூட்டாதீங்க.


இனி உங்க சின்னவருக்காகன்னாலும் சரி; எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி; என்னால ஒண்ணும் செய்ய முடியாது வேணா மேலிடத்துல பார்த்துக்கோங்க!" என்று கிளம்பி விட இயலாமையால் எழுந்த ஆத்திரத்துடன் உணவு மேசையை ஓங்கி அடிக்க மட்டுமே முடிந்தது வீராவால்.


"நீ வுடு தல; அந்த ஆளு அப்படித்தான் சொல்லுவான்.


நீ என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு; நம்மளே பார்த்துக்கலாம்" என்று அனைத்தையும் உடனிருந்