top of page

Mathini-Yamini 5*

மாயா-5


"ஏண்டி! பெரியவங்க சொல்றத கேக்கவே மாட்டியா! தாத்தா பாட்டி இவ்வளவு ஆசையா சொல்ராங்க இல்ல?" என ஸ்வர்ணா மாதினியிடம் கோபப்பட, "ஏன் மாது இப்படி சொல்ற!" என கிசுகிசுப்பாக அவளைக் கடிந்துகொண்டாள் யாமினி.


"ப்ச்.. என் ப்ரஃபஷன்ல இருக்கற ஒருத்தர நான் எதிர்பார்க்கறதுல தப்பு ஒண்ணும் இல்லையே யாமு?" எனக் கேட்டவள்,


"உனக்கும் அந்த ஜெய்யை பிடிக்கலன்னா வேண்டாம்னு சொல்லிடலாம்" என்றாள் மாதினி அடாவடியாக.


அதில் யாமினியின் முகம் கருத்துப்போக, அந்த சம்பந்தத்தை விட்டுவிட பெரியவர்களுக்கும் மனம் இல்லாமல் போகவே, "உன் போட்டோவைதான் அவங்களுக்கு அனுப்பி இருக்கோம் மாது!


பேசி பாக்கறேன்.


ஒத்து வந்தால் முடிக்கலாம்!" என்ற சிவராமன் தாத்தா ரத்தினம் தாத்தாவையும் பாட்டியையும் அங்கே வரச்சொல்லி அழைத்தார்.


மேலும் அவருடைய இரண்டு மகள்களும் மாப்பிள்ளைகளும் அங்கே வந்துவிட, அதற்குள் ஜெய்யின் அப்பாவுடன் பேசி இருந்தவர், "ரத்தினம்! மாதினி அந்த பையனை வேண்டாம்னு சொல்லிட்டா! நானும் அவளை கம்பெல் பண்ண விரும்பல!


அதனால நான் மாப்பிளை வீட்டுல பேசிட்டேன்; அவங்க பையன் கிட்ட நம்ம மாதுவோட போட்டோவை காமிச்சிருக்காங்க!


அவரும் பிடிச்சிருக்குனு சொல்லியிருக்கார்.


இப்ப யாமினிக்கு பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு, 'இன்னும் பெண்ணை நேரில் கூட பார்க்கல இல்ல; மோர் ஓவர் ரெண்டு பேரோட ஜாதக அமைப்பும் ஒண்ணுதானே! அதுவும் ரெண்டு பேரும் பார்க்கவும் ஒரே மாதிரி இருக்கறதால பரவாயில்லைன்னு சொல்லிட்டார் பையனோட அப்பா ஸ்ரீதர்.


நம்ம குடும்பத்துமேல அவங்களுக்கு இருக்கற மரியாதையும் ஒரு காரணம்!" என்றவர், "அந்த பையனை நம்ம யாமினிக்கே முடிச்சிடலாம்! உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே?" எனக் கேட்டார்.


"எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம். இதுல வேண்டாம்னு சொல்ல என்ன இருக்கு?" என்ற ரத்தினம், "நீ என்ன சொல்ற கனகம்?' என்று மனைவியிடம் கேட்க,


உடனே கனகவல்லி பாட்டி யாமினியின் முகத்தைப் பார்க்க, அவள் பதட்டத்துடன் மாதினியைப் நோக்கவும், "அவளை என்ன பார்க்கற யாமு! உனக்கு ஓகேவா; அதை சொல்லு!" என்றார் சந்தா.


"உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு யாமு! எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல!" என மாதினி சொல்ல, மகிழ்ச்சி பூக்கள் முகத்தில் பூக்கச் சம்மதமாகத் தலையை அசைத்தாள் யாமினி.


***