Mathini - Yamini 10
மாயா-10
"ப்ளீஸ்! சொன்னா புரிஞ்சிக்கோங்க; நெக்ஸ்ட் மந்த் எனக்கு கல்யாணம்.
அதனால இந்த மாதிரியெல்லாம் பேசாதீங்க!" என மூச்சை இழுத்துப்பிடித்து யாமினி சொல்ல வீராவின் முகம் விகாரமாக மாறிப்போனது.
அதற்குள் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த நரேன், அங்கே அவர்கள் இருவர் மட்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு கேவலமான சிரிப்பு சிரிக்க, அதில் தடுமாறினான் வீரா.
தோன்றிய அருவருப்புடன் கிடைத்த அந்த சிறு இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு அந்த அலுவலக அறையை விட்டு வெளியில் வந்த யாமினி வேகமாக அவளுடைய வகுப்பறை நோக்கிப் போனாள்.
அப்பொழுதுதான் ஒவ்வொரு மாணவர்களாக அங்கே வந்துகொண்டிருந்தனர்.
அதைக் கவனித்தவாறே முதல் வரிசையில் மாணவர்கள் அமரும் இருக்கையில் போய் அமர்ந்தவள் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயன்று தோற்றாள்.
அவளுக்குள் கிளம்பிய பயமும் அதனால் ஏற்பட்ட படபடப்பும் அடங்கவே இல்லை அவளுக்கு.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்றுகொண்டே அவள் பாடம் எடுக்கவேண்டும்.
அது முடியாது என மனம் சொல்ல, உடல்நிலை சரி இல்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போய்விடலாம் என்று தோன்றியது அவளுக்கு.
அவளுடைய வகுப்பை ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தது.
இப்பொழுதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவள் எழ, திடீரென்று அங்கே இருந்த பெண்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
அவள் அருகில் சென்று பார்க்கவும் அங்கே ஒரு மாணவி அரை மயக்கத்தில் இருக்க அவள் மூக்கில் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.
'ஐயோ! இது வேறா?' என்று ஆயாசமாக இருந்தது அவளுக்கு.
ஆனாலும் அவளை அப்படியே விட்டுவிட்டுப் போகவும் யாமினியின் மனம் இடம் கொடுக்கவில்லை.
எப்படியும் தானும் கிளம்பத்தானே போகிறோம் என்ற எண்ணத்தில் அந்த பெண்ணை கைதாங்கலாக முதல் உதவி அறை நோக்கி அழைத்துச்சென்றாள்.
அங்கே இருந்த செவிலியர் அவளுடைய ரத்தத்தைத் துடைத்துவிட்டு அவளை மேலோட்டமாக பரிசோதனை செய்த பின், "இவங்கள உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது நல்லது.
அட்மிஷன் போட வேண்டியதா இருக்கலாம்!" எனப் பயத்தைக் கிளப்பி விட்டுவிட்டு, அவளுடைய கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையை எடுத்துப் பார்த்து, "சுனிதாதான உங்களோட நேம்! நீங்க ஹாஸ்டல் ஸ்டுடென்ட்டா இல்ல டே ஸ்காலரா?" என்று அந்த செவிலியர் கேட்க, 'ஹாஸ்டல் ஸ்டூடெண்ட் சிஸ்டர்" என மிக முயன்று பதிலளித்தாள் அவள்.
யாமினியின் நிலை புரியாமல், "சரி பிரின்சிபல் சார் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு வரேன்! நீங்க அதுவரைக்கும் கொஞ்சம் கூட இருங்க மேம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அந்த செவிலியர்.
முள்ளின் மேல் நிற்பதுபோல் யாமினி நின்றுகொண்டிருக்க, கிடைத்த அந்த தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு, "மேம்! ப்ளீஸ் என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க!
இங்க இருந்தால் ட்ரீட்மெண்ட் குடுக்காம என்னை கொன்னுடுவாங்க" என்றாள் அந்த பெண் பீதியுடன்!
ஏற்கனவே படபடப்பிலிருந்தவள் மேலும் பதறிப்போனாள்.
"ஐயோ! என்ன சொல்ற நீ!" என யாமினி நடுங்கும் குரலில் கேட்க, "எஸ் மேம்! ப்ளீஸ்! இப்ப எதுவும் கேக்காதீங்க! என