Kadhal Va..Radha 5
காதல்-5
எந்த வித உணர்ச்சிகளையும் முகத்தில் வெளிக்காண்பிக்காமல், 'நீ சொன்ன விஷயம் என் செவிகளிலேயே ஏறவில்லை; அது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை' என்பதுபோல தன் கைப்பேசியை குடைய ஆரம்பித்துவிட்டான் கண்ணன்.
அவனது அந்த அலட்சியப் போக்கில் கடுப்பான ராதாவால் கோபத்தில் பற்களை மட்டுமே கடிக்க முடிந்தது.
அதே கோபத்துடன் மருத்துவமனையின் வாயிலில் அவனை இறக்கிவிட்டவளின் வாகனம் சீற்றத்துடன் பறந்தே போனது.
பின் உள்ளே நுழைந்தவன் நேராக சேஷாத்ரியிடம் சென்றான்.
அவனைப் பார்த்ததும், "வாடா கண்ணா!" என்றவர், "ஒரு சர்ஜரி இருக்கு; இன்னைக்கு என் கூட இருக்கியா?" என அவர் கேட்க, "ஓகே குரு!" என்றவன், அவன் அன்று பரிசோதித்த அந்த சிறுவனைப் பற்றி விளக்கிவிட்டு, "அவனோட பேரன்ட்ஸ் உங்களை மீட் பண்ண வருவா! உங்களுக்கு ஓகேன்னா சர்ஜரி ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்" என்றான் அவன்.
"நீ சொன்னா சரிதான்!" என்று தன் சம்மதத்தை ஒரே வரியில் சொல்லிவிட்டார் அவர்.
அதற்கு புன்னகைத்தவன், "நாளைக்கு கேஸ் எதுவும் இல்ல; அதனால ஆஃப் எடுத்தாகலாமான்னு பாக்கறேன் குரு!" என்றான் கண்ணன்.
"என்ன அம்மா அப்பா ஊர்ல இருந்து வாறாளா?" என அவர் கேட்க, "ஆமாம் குரு! மைத்ரேயீ சீமந்தம் வறதில்ல? அதுக்கு வரிசை சாமானெல்லாம் வாங்கணும்" என அவன் சொல்ல, "அப்ப கண்டிப்பா நீ போய்ட்டு வா" என்றார் அவர்.
"அவா கிளம்பறது தெரிஞ்சதும் சின்ன தாத்தாவும் கூடவே வரேன்னு சொன்னாராம்!
தகவலை உங்க கிட்ட சொல்லிட்டேன்!
அப்பறம், 'தாத்தா வந்திருக்கார்; நீ என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா'ன்னு நீங்க என்மேல கோப படக்கூடாது" என அவன் சொல்ல, "ஓஹ்! தாத்தாவும் வாறாரா?
அப்ப அவசியம் அவரை வந்து பார்க்கணுமே!" என்றவர், "எவ்வளவு பெரிய விஷய ஞானிடா அவர்; 'நல்லாரைக் காண்பதுவும் நன்றே'ன்னு சொல்லி இருக்காளோல்லியோ.
பெரியவாளை தரிசனம் பண்றதே நல்லதுடா கண்ணா!" என்றார் அவர் மனதிலிருந்து.
அதற்குள் அவர்களுடைய கடமை அவர்களை அழைக்க, அதை நோக்கிப் போனார்கள் இருவரும்.
***
அறுவை சிகிச்சை முடிய அதிக நேரம் எடுக்க, அனைத்தும் முடிந்து கிளம்ப நேரம் ஒன்பதைக் கடந்திருந்தது.
சேஷாத்திரியுடைய வாகனத்தைச் செலுத்திக்கொண்டு அவருக்குத் துணையாக அவருடைய அகத்திற்கு (வீட்டிற்கு) வந்தான் கண்ணன்.
வரவேற்பறை 'சோஃபாவில்' தாடையில் கையை முட்டுக்கொடுத்தவாறே 'உர்ர்'ரென உட்கார்ந்திருந்தாள் ராதா. அருகில் உட்கார்ந்து கைப்பேசியில் எதையோ குடைந்தவண்ணம் இருந்தார் கீதா.
உள்ளே நுழையவும் மகளுடைய அந்த கோலத்தைக் கண்டவர், "ராதா! இப்ப எந்த கப்பல் கவுந்துபோச்சுன்னு இப்படி கன்னத்துல கை வெச்சிண்டு உக்காந்திருக்க!" எனச் சற்று கடிவதுபோல் கேட்டார் சேஷாத்திரி.
"ப்ச்... நானும் இதையேதான் சொல்லிண்டு இருக்கேன்னா! எங்க காதுல வாங்கறா" என்ற கீதா, "நாளைக்கு யாரோ ஃப்ரண்ட்டோட கல்யாணமாம்; ஏதோ தீம் ட்ரெஸ்சிங்காம்; இப்பதான் அந்த மீரா மெஸேஜ் பண்ணியிருக்கா; புடைவைக்கு மேட்சிங்கா ஃபேஷன் ஜூவல்லரிலாம் ஏதோ வாங்கணுமாம்!
நம்மது பக்கத்துலன்னா இந்த விஜய் கலெக்ஷன்ஸ் இருக்கில்ல? அங்கதான் கிடைக்கும்.
இப்பவே