Kadhal va..Radha?! 22
காதல்-22
கடைக்காப்பு
வெளியில் அதுவும் தூரத்திலிருந்து பார்க்கும்போதே அவனைப் பதைபதைக்க வைத்த அந்த நெருப்பு நெருக்கி வர வர அவனைத் தீண்டாமலேயே சுட்டெரித்தது.
அவன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த பொழுதே சிறு கூட்டம் கூடிவிட்டிருந்தது.
அதில் ஒருவர் தீ அணைப்பு வாகன உதவிக்கு அழைப்பு விடுதிருப்பது தெரியவும் அவனுடைய இரு சக்கர வாகனத்தை வேகமாகச் செலுத்திக்கொண்டு உள்ளே வந்தான் கண்ணன்.
அங்கே யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் போக அவனது இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறிக்கொண்டிருந்தது.
அவன் அருகில் நெருங்க நெருங்க அங்கே இருந்த ஜன்னல் வழியாக ஏதேதோ வந்து விழவும் ஒரு நம்பிக்கை துளிர்த்தது அவனுக்கு.
அதற்குள் அவன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அந்த இடத்தை நெருங்கிவிடக் கடைசியாக வந்து விழுந்த பேனாவைத் துல்லியமாக 'கேட்ச்' பிடித்தவன் உள்ளே இருப்பது ராதாதான் என்பதை உறுதியாக நம்பினான்.
ஆனாலும் அவள் நிலை அச்சத்தை மட்டுமே கொடுக்க, அந்த அறையை ஆராய்ந்தவன் அந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் கண்ணன்.
வள்ளலார் பாடியது போல் 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தரு'வாக அவளைத் தேடி வந்தவனைக் கொடியாகப் பற்றிக்கொண்டாள் ராதா.
நொடியும் தாமதிக்காமல் அவன் அவளை வெளியே இழுத்துக்கொண்டு வர, அவனுடைய கையை உதறிவிட்டு வேகமாக ஓடியவள் தான் தூக்கி எறிந்த ஆவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேகரிக்க அவனும் தன் கரங்களை அவளுக்குக் கொடுக்க, கூடுமான வரையில் அனைத்தையும் பத்திரமாக மீட்டெடுத்தனர் இருவரும்.
அங்கே எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஜுவாலையில் கிளம்பிய தீ பொறிகளும் சிறு சிறு கங்குகளும் அதற்குள்ளாகவே அவர்களைக் கொஞ்சம் பதம்பார்த்திருந்தன.
அதுவரை அசராமல் அனைத்தையும் சேர்த்தெடுத்தவள் எதையோ தேட, அது கிடைக்காத ஏமாற்றத்தில் அவளது கண்களில் நீர் கோர்த்தது.
"என்ன ராதா! இன்னும் என்ன பிரச்சனை" என் பதறினான் அவளது நாயகன்.
"இல்லன்னா! அந்த பென் கேமரா! அறிவுகெட்டத்தனமா அதையும் தூக்கி எறிஞ்சுட்டேன்! காணும்!" என்றாள் அவள் துயரமும் ஏமாற்றமும் கலந்த குரலில்.
அடுத்த நொடித் தன் சட்டைப் பையில் வைத்திருந்த அந்த கருவியை எடுத்த கண்ணன் அதை அவளது முகத்திற்கு நேராக ஆட்ட, ஓ மை பெருமாளே!" என்றவாறு அவனை வந்து அணைத்துக்கொண்டாள் ராதா.
அவன் இதயம் பட படவென அடித்துக்கொள்ள, அதை உணர்ந்தவள், அவனிடமிருந்து சற்று விலகி அவன் கையை அவன் மார்பினில் வைத்து அழுத்தியவாறு, "இதுக்கு பேர் என்ன கண்ணன்!
இது எந்த ஹார்மோன் செஞ்ச வேல" என்று கேட்க, அந்த நேரத்திலும் அவள் இப்படி குறும்பாக அதே சமயம் ஆவலும் எதிர்பார்ப்புமாக பேசவும் மெல்லிய புன்னகை படர்ந்தது அவன் முகத்தில்.
"இதுதான் கண்ணன் அன்பு!
எந்த வித ரத்த சம்பந்தமும் இல்லாத நமக்குள்ள உண்டாகியிருக்கற இந்த அன்புக்குப் பேர்...
காதலில்லாமல் என்னவாம்!
இங்க எரியற இந்த அக்னி சாட்சியா சொல்லுங்கோ" என அவள் விடாப்பிடியாகக் கேட்க, "காதல்...தான்! ராதா! கதலேதான்" என்றான் அவன் கிண்டல் தொனிக்க!
அதில் காதலும் கலந்திருக்க!
அந்தத் தீ காயங்கள் கூட அவர்களைப் பாதிக்கவில்லை இருவரின் மனமும் மகிழ்ந்து குளிர்ந்திருந்ததால்.
அந்த ஆவணங்கள் அனைத்தையும் அவளது துப்பட்டாவில் கட்டி பத்திரமாக தன் 'பைக்'கின் முன்பக்கத்தில் வைத்துக்கொண்டு அவன் அதைக் கிளப்ப, காற்றுக்கும் இடம் கொடுக்காமல் அவனை அணைத்