top of page

kadhal Va..Radha? 15

காதல்-15


காலாவதியான மருந்துகளை மறு புழக்கத்தில் விட்ட மோசடிக்குப் பின் அபிமன்யு தான் இருக்கிறான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து வைத்திருந்தான் கண்ணன்.


அதில் அவன் வேண்டுமென்றே சிக்க வைத்திருந்த அரவிந்தனையும் அனுபமாவையும் அவனாகவே காப்பாற்றியதில் கட்டாயம் ஏதோ உள்நோக்கம் இருக்கும் எனத் திட்டவட்டமாக நம்பினான் கண்ணன்.


அதில் அவர்களே அறியாமல் அவர்களை அவன் சிக்க வைத்திருக்கிறான் எனும்போது அவர்களை எளிதாக விடுவித்ததற்குப் பின் மிக ஆழமான நோக்கம் இருக்கவேண்டும் என்பதும் அது என்னவாக இருக்கும் என்பதும் அவனால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிந்தது.


அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் அனுபமா குழந்தையுடன் வந்து இறங்கவும் அவன் அனுமானம் மேலும் உறுதியானது.


அனுபமா அங்கே வந்திருப்பது கீதா மூலமாகத் தெரியவரவும், அவள் வந்த அன்று, 'உடனே என்னோட பிளாட்டுக்கு வா; முக்கியமா பேசணும்' என்ற ஒரு குறுஞ்செய்தியை ராதாவுக்கு அனுப்பினான் கண்ணன்.


கண்ணனிடமிருந்து அப்படி ஒரு செய்தி வரவும் வியப்பு மேலிட அவனைக் காண அங்கே வந்தாள் ராதா.


அவளுக்காகவே காத்திருந்தவன், "வா ராதா!" என அவளை அழைக்க, இயல்பாக வரவேற்பறை 'சோபா'வில் போய் உட்கார்ந்தாள் அவள்.


"நீ இங்க வந்திருக்கிறது உங்க அக்காவுக்கு தெரியாதில்ல" என அவன் சிறு பதற்றத்துடன் கேட்க, அதை மனதிற்குள் குறித்துக்கொண்டவள், அவனுடைய அந்த வித்தியாசமான செய்கையில் குழம்பியவளாக, "அக்காவுக்கு மட்டும் இல்ல; அம்மாவுக்குக் கூட தெரியாது.


அவளை ஏர்போர்ட்ல இருந்து ஆத்துக்கு அழைச்சிண்டு வந்து விட்டுட்டு மீராவை பார்க்கலாம்னு கிளம்பினேன்.


உங்க மெசேஜை பார்த்துட்டு இங்க வந்துட்டேன்" என்றாள் ராதா.


"நல்லதா போச்சு" என்றவன், "ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! நீ இதை எப்படி எடுத்துப்பேன்னு புரியல' என்ற பீடிகையுடன் தொடங்க, இடை புகுந்தவள்


"அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை; நீங்க சொல்லவந்ததை சொல்லுங்கோ" என்றாள் அவள் வெடுக்கென்று.


"நீ எப்ப ராதா என்னை புரிஞ்சிக்க போற? நான் எது பேசினாலும் இப்படி குதர்க்கமா பதில் சொல்ற" எனக் அவன் ஆயாசத்துடன் கேட்க,


"நான் ஏன் கண்ணன் உங்களை புரிஞ்சிக்கணும்.


தினமும் எத்தனையோ பேஷண்ட்ஸை பாக்கரீங்கோ.


தனக்கு என்ன பிரச்சனைன்னு கூட சொல்லத் தெரியாத சின்ன சின்ன குழந்தைகளுக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் குடுக்கறீங்கோ.


எல்லாரோட சைக்காலஜியும் அனலைஸ் பண்ண தெரிஞ்சவாளாலதான் ஒரு சக்ஸஸ்ஃபுல் டாக்டரா இருக்க முடியும்.


அப்படி இருக்கும்போது என் மனசுல என்ன இருக்குன்னு மட்டும் புரியாத மாதிரி நீங்க நடந்துண்டா நான் அதை நம்பணும் இல்ல?" என அவள் பொரிய,


"உன் மனசைப் பத்தி மட்டும் வக்கணையா பேசரியே; நீ யாரோட மனசையாவது பார்த்தியா ராதா" எனக் கேட்டான் அவன்.


"நான் யார் மனசை பார்க்கணும்?


நான் ஆசைபட்டேன்னு சொன்னா அப்பா அம்மா என்ன வேண்டாம்னா சொல்ல போறா?


கட்டாயம் சம்மதிப்பா!


அதுவும் உங்களை எப்படி வேண்டாம்னு சொல்லுவா? என அவள் அலட்டிக்கொள்ளாமல் கேட்க,


"நீ பிடிவாதம் பிடிச்சா கட்டாயம் சம்மதிப்பா! இல்லனு நான் சொல்லவே இல்லையே!


வெட்டறேன் குத்தறேன்னு கிளம்பாம தானே முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தியும் வெப்பா!


ஆனா மனசு நொந்துபோய் அதை செய்வா!


புரிஞ்சிக்கோ!


என்ன கேட்ட; 'உங்