top of page

kadhal Va..Radha-13

காதல்-13


அடுத்து வந்த நாட்களில் ராதா எல்லோரிடமும் இயல்பாக இருப்பது போல் தோன்றினாலும் அவனிடமிருந்து அவள் விலகிச்செல்வது போன்ற எண்ணம் உருவானது கண்ணனுக்கு.


பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்த பிறகு கீதாவிடம் அடம் பிடித்து மின்சாரத்தில் ஓடும் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி அதிலேயே பள்ளி செல்ல தொடங்கியிருந்தாள்.


எனவே அதற்கும் கூட அவனது உதவி தேவைப்படவில்லை அவளுக்கு.


கூர்மையாகக் கவனிக்க, அவள் வேண்டுமென்றே அவனைத் தவிர்ப்பது புரிந்தது.


அவனை நேருக்கு நேர் பார்ப்பதே இல்லை அவள். தவறி எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் ரத்தம் மொத்தமும் முகத்தில் பாய்வதுபோல் அவள் முகம் செக்கச்சிவந்து போகும்.


அந்த அளவுக்கு அவனிடம் கோபமாக இருக்கிறாள் என்றே நினைத்தான் கண்ணன்.


அன்று அதிகப்படியாக அவளிடம் கோபத்தைக் காண்பித்ததாலோ என்னவோ என்ற எண்ணம் தோன்றினாலும் இறங்கி வந்து அவளிடம் விளக்கம் கொடுக்கவோ அவளைச் சமாதான படுத்தவோ விரும்பவில்லை அவன்.


'அப்படி என்ன தப்பா சொல்லிட்டோம்?" என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.


நீண்ட விடுமுறை வந்ததால் அப்படியே ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டான் கண்ணன்.


ஆனால் அவளது மாற்றத்திற்கு காரணம் கோபமில்லை அது அவளது வயதுக்கோளாறு என்பது புரிந்தபோது அதாவது பின்னொரு நாளில் அவள் தன் காதலை அவனிடம் சொல்லிக்கொண்டு வந்து நின்ற பொழுது சற்று தடுமாறித்தான் போனான் கண்ணன்.


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அன்றுதான் அங்கே திரும்ப வந்திருந்தான் கண்ணன்.


அடுத்த நாள் முக்கிய பரீட்சை இருந்ததால் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான் அவன்.


மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவள் அவன் வந்திருப்பது தெரிந்து அவனைக் காணும் ஆவலில் அங்கே வந்தாள் ராதா.


அவனது கவனம் மொத்தமும் புத்தகத்திலிருக்க அவனது அருகில் அவள் வந்து நின்றதை கூட கவனிக்கவில்லை கண்ணன்.


அவனது கவனத்தை தன் புறம் திருப்ப 'ம்க்கும்' என அவள் தொண்டையை செரும, நிமிர்த்து அவளைப் பார்த்தவன் மெலிதாக புன்னகைத்தவாறு, "ஹை ராதா! எப்படி இருக்க?" என்று கேட்டுவிட்டு அவளது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் புத்தகத்திற்குள் தன்னை புதைத்துக்கொண்டான்.


அதில் கொஞ்சம் எரிச்சல் உண்டானாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், "நான் நன்னா இருக்கேன் கண்ணன்! நீங்க எப்படி இருக்கீங்கோ?" என்று அவள் கேட்க, "பிரமாதம்" என்றான் புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பாமல்.


"நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் கண்ணன்! நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்தது" என்றாள் அவள் ஒரு தீவிர பாவத்துடன்.


எப்பொழுதுமே அவன் ஊருக்குச் சென்று வந்தால் அவள் சொல்வதுதான்.


வழக்கமாக, "நீங்க இல்லாம எனக்கு ரொம்ப போர் அடிச்சுது கண்ணன்" என்று சொல்லுவாள், அதையே வேறுவிதமாகச் சொல்கிறாள் என்றே எண்ணினான் அவன்.


அவனது கவனம் மொத்தமும் அடுத்த நாள் நடக்கவிருக்கும் பரிட்சையிலேயே இருக்க அவள் குரலிலிருந்த மாற்றத்தை உணரவில்லை கண்ணன்.


எப்படியும் அவன் தன்னை கண்டுகொள்ளமாட்டான் என்பதை உணர்ந்தவள், "என் ஃப்ரெண்ஸ்லாம் 'கண்ணன் உன்னோட பாய் ஃப்ரண்ட்டா'ன்னு கேக்கறாங்க" என்றாள் அவள் தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடும் ஆவலுடன்.


புத்தகம் கையிலிருந்து கழன்று கீழே விழ விதிர் விதிர்த்துப் போனான் கண்ணன்.


"என்ன ராதா இப்படியெல்லாம் பேசற? லூசா நீ!" என அவன் பதட்டத்துடன் கேட்க,


"ஐயோ கண்ணன்! நான் அப்படி சொல்லல!


உங்களைப் பத்தி என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிண்டே இருப்பேனா!


அதனால அவா எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்.


அதனால அவா எல்லாரும்தான் அப்ப