top of page

Kadhal Va..Radha!

காதல்-4


கண்ணனின் குரலில் பக்கென்று ஆனது ராதாவுக்கு. தான் இங்கே இருப்பதை தெரிந்துகொண்டுதான் கேட்கிறானோ என்ற ஐயம் தலை தூக்க, "ம்.. என்ன கேக்கறீங்கோ; புரியல" என்றாள் அவள் உள்ளே போன குரலில்.


'என்ன இப்படி பம்மறா நம்ம ஆட்டம் பாம்' என்ற எண்ணம் தோன்ற, "ப்ச்... நான் இங்க வந்து பத்து நிமிஷம் ஆச்சு; குழந்தைகள்லாம் வேற உனக்காக வெயிட் பண்ணிண்டு இருக்கா? இப்ப எங்க வந்துண்டு இருக்க நீ" என்றான் கண்ணன் விளக்கமாக. அவன் குரல் மென்மையாக மாறியிருந்தது.


அரவிந்தனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, "நான் உங்களைத் தாண்டி எங்கேயும் போகமாட்டேன் கண்ணன். இப்ப கூட உங்க பக்கத்துலயேதான் இருக்கேன் கண்ணன்! இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துடுவேன்! நீங்க கோவிச்சுக்காதீங்கோ கண்ணன்!


பசங்க கிட்ட நான் சாரி சொன்னேன்னு சொல்லுங்கோ கண்ணன்!" என வார்த்தைக்கு வார்த்தை வேண்டுமென்றே 'கண்ணன்' போட்டு ராதா அவனுக்குப் பதில் சொல்ல, முதல் படரும் கடுமையை மிக முயன்று மறைத்தான் அரவிந்தன்.


'யார் அது!' என்பது போல் கேள்வியாக அபிமன்யு அவனைப் பார்க்க, ராதாவை அருகில் வைத்துக்கொண்டு எதுவும் சொல்லத் தயங்கியவாறு சலனமில்லாமல் முகத்தை வைத்திருந்தான் அரவிந்தன்.


பின்பு தன் பார்வையை அபிமன்யுவிடம் திரும்பியவள், "சாரி மிஸ்டர் அபிமன்யு!" என்று சொல்லிவிட்டு, "நைஸ் டு மீட் யு" என்றாள் ராதா.


"ஹை; ஹலோ; நைஸ்னு ஆரம்பிக்கவேண்டிய நம்ம கான்வர்சேஷன் உனக்கு வந்த போன் காலால சாரில ஸ்டார்ட் ஆயிடுச்சு இல்ல!" என அவன் புன்னகைக்க, "சாரி! நான் பேசறதுக்கு முன்னாடியே நீங்க பேச ஆரம்பிச்சுடீங்க இல்ல" என அவள் தீவிரமாய் கேட்க, "பட் நீ சாரீல தான ஆரம்பிச்ச! இப்ப மறுபடியும் ஒரு சாரி!" என அவன் விடாமல் பதில்கொடுக்க, அவன் அவளை ஒருமையில் அழைத்ததில் எரிச்சலுற்றவள், "சாரி! நீங்க ஏன் இப்படி பீல் பண்றீங்கன்னு எனக்கு உண்மையாவே புரியல" என்றாள் அவள் வேண்டுமென்றே மற்றுமொரு 'சாரியை' சேர்த்து.


உடனே அபிமன்யுவின் முகம் இருண்டு போக, அதை உணர்ந்து உள்ளுக்குள்ளேயே குமுறினான் அரவிந்தன்.


அவை எதையும் கண்டுகொள்ளாமல் "ஓகே அத்திம்பேர்! நான் உடனே கிளம்பனும். உங்களுக்கு டைம் கிடைக்கும்போது ஆத்துக்கு வாங்கோ!" என்று சொல்லிவிட்டு, "சாரி மிஸ்டர் அபிமன்யு! நாம இன்னொருநாள் ஃப்ரீயா மீட் பண்ணலாம்! பை!" என அவனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் ராதா!


மறுபடியும் வந்து விழுந்த அந்த 'சாரி'யில் அரவிந்தன் சங்கடமாக அபிமன்யுவை பார்க்க, "இவளை பார்த்தால் நீ சொல்ற அளவுக்கெல்லாம் இன்னசண்டா தெரியல!


நீ சொன்னதால அவ மைக்ரோ பயாலஜி படிப்பை வேணா சூஸ் பண்ணியிருக்கலாம்; அதுவும் விவரம் புரியாத வயசுலதான்;


அதுக்காக நீ சொல்றங்கற ஒரே காரணத்துக்காக அவ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான்னு எனக்கு தோணல.


ஏன்! உன் மாமனார் எடுத்த எடுப்பிலேயே வேண்டாம்னு சொல்லலையா என்ன?" என அபிமன்யு கேட்க,