Kadal Va..Radha? 10
Updated: Jun 26, 2020
காதல்-10
அடுத்த இரண்டாவது நாள் தன் மூன்று வயது மகனுடன் சேஷாத்ரியின் இல்லத்தில் தரை இறங்கியிருந்தாள் அவருடைய சீமந்த புத்திரி அனுபமா.
அபிமன்யுவின் திட்டப்படி 'அணுவிந்த் பார்மா'வின் உற்பத்தி பிரிவில் வேலை செய்யும் இரண்டு பேர் தாங்கள்தான் அந்த காலாவதியான மருந்துகளை புதிய மருந்துகளுடன் கலந்து விற்பனைக்கு அனுப்பியதாக ஒப்புக்கொள்ள, அவர்கள் பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்தது.
ஆனால் அவனுடைய நிபந்தனை அப்படியே இருந்தது.
அரவிந்துக்கு அவன் சொல்வதைச் செய்துமுடிப்பதைத் தவிர வேறு வாய்ப்பே வழங்கப்படவில்லை.
மாமனாரை அந்த திட்டத்துக்குச் சம்மதிக்க வைக்கும் பொருட்டு மனைவியை நேரில் அனுப்பியிருந்தான் அவன்.
அனுபமா ராதாவிடம் தொலைப்பேசியில் சொல்லியிருந்த தகவல்கள் மட்டும் கண்ணனுக்கும் சேஷாத்ரி மற்றும் கீதாவுக்கும் தெரிந்துதான் இருந்தது.
அதற்குப் பின் அபிமன்யுதான் இருக்கக்கூடும் என்கிற புரிதல் கண்ணனுக்கு இருக்கவே சேஷாத்ரியை முன்னமே எச்சரித்து வைத்திருந்தான் கண்ணன்.
என்னதான் அவர்கள் போவது தவறான வழியில் என்றாலும் மகளை நினைத்து வேதனையாக இருந்தது சேஷாத்ரிக்கும் கீதாவுக்கும்.
அதற்குள் அந்த பிரச்சனை பிசுபிசுத்துப் போகவும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் அனைவரும்.
திருமணம் முடிந்து அவள் அமெரிக்கா சென்ற பிறகு இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் இங்கே வருவது வழக்கம்.
வந்தால் ஒரு மாதம் புக்ககத்திலும் ஒரு மாதம் பிறந்த அகத்திலும் என அட்டவணை போட்டு இருந்துவிட்டுப் போவாள்.
ஆனால் வித்தியாசமாக முன்னறிவிப்பு ஏதும் இன்றி மகள் வந்திருக்கவும் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது சேஷாத்ரிக்கு.
கீதாவால் கூட அதை இயல்பான வருகைதான் என ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பேரனை நேரில் பார்த்த மகிழ்ச்சி கூட பின்னுக்குச் சென்றுவிட்டது.
இருந்தாலும் மகள் மேல் கொண்ட பாசத்தால் கீதா மட்டும் அவளிடம் சுமுகமாகக் காட்டிக்கொண்டார்.
ஆனால் ஏற்கனவே சேஷாத்ரியுடைய மறுப்பை மீறி தன் பிடிவாதத்தில் அரவிந்தனை மணந்ததிலிருந்தே அப்பா மகள் உறவில் சிறு விரிசல் ஏற்பட்டிருந்தது.
அதுவும் அவள் பிரசவத்திற்குக் கூட பிறந்த வீட்டிற்கு வராமல் போக அந்த விரிசல் அதிகமாகிப் போனது.
ஏதோ கீதா நடுவில் இருக்கவே அந்த உறவு அறுந்து போகாமல் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்க, அவர்களது இந்த செயலால் அவர் கோபத்தின் எல்லையிலிருந்தார்.
மகளைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லை.
'வந்தியா வா; போறியா போ!' என்ற ரீதியில் அவளைக் கண்டும் காணாமல் இருந்தார் அவர்.
அவளுக்கு எதிரில் பேரனைக்கூடக் கொஞ்சவில்லை. அவ்வளவு வீம்பாக இருந்தார்.
அவரது அந்த பாராமுகம் அனுவுக்கு பயத்தைக் கொடுக்க அபிமன்யுவின் நிபந்தனைகளைப் பற்றி அவரிடம் பேச நா எழ வில்லை அவளுக்கு.
ராதா மட்டுமே த