Kadal Va.Radha? 7
காதல்-7
அகத்துக்குள் நுழைந்ததும் சேஷாத்ரியை பிடி பிடி எனப் பிடித்துக்கொண்டார் கீதா!
"நீங்க சிட்டிலேயே பெரிய டாக்டர் இல்ல; அதான் இப்படி பட்டும்படாம பேசிட்டு வந்திருக்கீங்கோ!
நம்ம கண்ணன் மட்டும் நமக்கு மாப்பிள்ளையா வந்தா; அவன் மாப்பிள்ளையா இருக்க மாட்டான்; நமக்கு பிள்ளையாவே இருப்பான்!
என்ன அவன் சாதாரண டாக்டர் தான! அதுவும் அவனோட திறமையை பணம் பண்ண தெரியாத டாக்டர்!
அதான் அவளுக்கு ரொம்ப பெரிய இடமா பாக்கற உத்தேசத்துல இருக்கீங்கோ போல இருக்கு!
அதனாலதான ஆறுமாசம் ஒரு வருஷம்னு சாக்கு சொல்லிட்டு வந்திருக்கீங்கோ!
ஏன்னா! உங்களுக்கு கூடவா பணம் பிரதானமா போச்சு!" எனப் பொரிந்து தள்ளினார் அவர்.
அவரது பொறுமை காற்றில் பறக்க, "கீதா!" என்றார் அவர் அதட்டலாக.
அவரது கண்டன பார்வையில் கீதா மவுனமாகிவிட, "நீயே இப்படி பேசினா மத்தவா என்ன பேசுவா?” என்றார் அவர் மனைவியின் முத்தை பார்த்து சற்று தணிந்தவராக.
"இல்லன்னா!" என கீதா ஏதோ சொல்ல வர, "ப்ச்! நம்ம ராதவை கொஞ்சம் ஓவர் டோசா செல்லம் கொடுத்து வளர்த்து வெச்சிருக்க!
உடம்பு வணங்கி எந்த வேலையாவது செஞ்சு பழக்கம் இருக்கா அவளுக்கு!
நம்மாத்துல எல்லா வேலைக்கும் ஆள் போட்டிருக்கோம்! தினப்படி தளிகைக்கு கூட குக் வெச்சிருக்கோம்!
ஆனா அவாத்துல அப்படியா?
கண்ணனோட அப்பா சித்தப்பான்னு எல்லாரும் இன்னும் கூட்டு குடும்பமா இருக்கா!
பக்கத்துலயே அவரோட சித்தியா இருக்கார்!
அவா எல்லாரும் பழைய பழவழக்கத்துலேயே ஊறி போனவா!
கண்ணனுக்கு ஆம்படையாளா வரவளை தினபடிக்கே மடிசார் கட்டிக்க சொன்னாலும் சொல்லுவா!
இவளால அவா கூடலாம் அட்ஜஸ்ட் பண்ணிண்டு போக முடியுமா!" என தன் செய்கைக்குப் பொறுமையாக விளக்கமளித்தார் அவர்.
சேஷாத்ரி தீவிரமாய் பேசிக்கொண்டே போகச் சிரிப்பே வந்துவிட்டது கீதாவுக்கு.
"அட ராமா! இதுதான் உங்களோட ப்ராப்ளமா?
அவ என்ன சின்ன குழந்தையா! அதெல்லாம் சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி சமயோசிதமா நடந்துப்பா உங்க சின்ன பொண்ணு!
அதோட அவ என்ன அவாளோட கிராமத்து ஆத்துலேயேவா இருக்க போறா?
பெரும்பாலும் இங்கதான் இருப்பா?
அவாளுக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு.
அன்னைக்கு அவாத்து ஃபங்க்ஷன்ல பார்த்தேனே!