top of page

Kadal Va..Radha? 6

காதல்-6


சேஷாத்ரியின் முகக்குறிப்பை படித்தவர், "தோ பாரு சேஷா! இந்த கிழம் என்ன இப்படி கேட்டுடுத்தேன்னு தப்பா நினைக்காத.


இல்ல மரியாதைப் பட்ட மனுஷர் இப்படி கேட்டுட்டாரே! வேண்டாம்னு எப்படி சொல்றதுன்னு சங்கடப் படாத!


நான் கிராமத்தான்! மனசுல பட்டத பட்டுனு பேசிடுவேன்! ஏன்னா நாம இப்படி கேட்டிருந்தால் நடந்திருக்குமோன்னு நினைக்கக் கூடாது பாரு. அதான்.


அதனால நீ எனக்கு சாதகமாத்தான் பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல.


உன் மனசுக்கு சரின்னு பட்டத்தை சொல்லு; எதுவா இருந்தாலும் எனக்குச் சந்தோஷம்தான்!" என்றார் சின்னத்தாத்தா எதார்த்தமாக.


அதில் முகம் தெளிவுற, "அப்படி இல்ல ஸ்வாமின்! உங்காத்துல நித்ய அனுஷ்டானமெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி இல்லையா!


நம்மாத்துல அந்த அளவுக்கு பாக்கறதில்ல!


கீதாதான் இவா ரெண்டுபேரையும் அதை பண்ணாத இதை பண்ணாதன்னு வெஸ்ஸுண்டே (திட்டிக்கொண்டே) இருப்பா!


அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு!


இவளுக்கும் செவ்வாதோஷ ஜாதகம்.


அதனாலதான் கல்யாணம் தள்ளிபோயிண்டே இருக்கு!


இன்னும் அஞ்சாறு மாசத்துல படிப்பு முடிஞ்சிடும்.


அப்பறமா இதை பத்தி ஒரு முடிவு எடுக்கலாம்னு!" என சேஷாத்ரி இழுக்கவே, "நோ ப்ராப்ளம்! ஆத்துல போய் கீதாவோடவும் பேசிட்டு; பொண்ணோட விருப்பத்தையும் தெரிஞ்சுண்டு நிதானமா பதில் சொல்லு!


சுபஸ்ய சீக்ரம்னு சொல்லுவா!


இப்பலாம் ஆறு மாசம்ங்கறதே சீக்கிரம்தான்!


நல்ல முடிவா சொல்லு!" என முடித்தார் பெரியவர்.


சேஷாத்ரி கீதாவின் முகத்தைப் பார்க்க, அங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது.


அதற்குள் அவர்கள் புறப்படுவதை அறிந்து மைத்ரேயி பெண்கள் இருவருக்கும் தாம்பூலம் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு அவர்கள் மூவரும் விடைபெற்று கிளம்பினர்.


அவர்களை வழி அனுப்ப அந்த குடியிருப்பின் வாயில் வரை வந்தனர் கண்ணன் ஆனந்தி மற்றும் ராகவனும்.


"சித்தியா அப்படி பேசுவார்னு நாங்க நினைச்சே பாக்கல!


எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்கோ!" என்றார் ராகவன் தயக்கத்துடன், பொதுப்படையாக.


"இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு! பொண்ணுன்னு இருந்தா இப்படி கல்யாணத்துக்காக கேக்கத்தான் செய்வா! நம்ம மனசுக்கு சரின்னு பட்டா மேற்கொண்டு பேசி முடிவு பண்ணப்போறோம்!" என்றார் கீதா கணவரின் முகத்தைப் பார்த்தவாறே!


யோசனையுடன் சேஷாத்ரி கண்ணனைப் பார்க்க அவன் முகம் உணர்ச்சி துடைத்து சலனமற்று இருந்தது.


அவனை முறைத்துக்கொண்டே, "அம்மா எனக்கு இப்ப ட்ரைவ் பண்ற மூட் இல்ல! என் காரை நாளைக்கு உங்க கண்ணனையே கொண்டுவந்து விடச்சொல்லுங்கோ!" என்று சொல்லிவிட்டு சேஷாத்ரியுடைய காருக்குள் போய் உட்கார்ந்தாள் ராதா.


மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மனைவி மற்றும் மகளுடன் அங்கிருந்து கிளம்பினார் அவர்.


உடனே, "என்னடா கண்ணா தாத்தா இப்படி பட்டுன்னு கேட்டுட்டார்!" என்றார் ராகவன் மனதில் அடக்கிவைத்திருந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக.


"பா! அவரோட ஸ்வபாவமே அதுதானே! இந்த பேச்சை இத்தோட விடுங்கோ! தாத்தா கிட்ட எதுவும் கேக்க வேண்டாம்!' என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான் கண்ணன்.


"சரி... நாளைக்கு துவாதசி; நான் இப்படியே ஒரு வாக்கிங் போயிட்டு ஆத்திக்கீரை கிடைச்சா வாங்கிண்டு வந்துடறேன்!