top of page

Kaadhal Va..raathaa! 1*

காதல்-1


கார்த்திகை மாதத்து கார்மேகம், மெல்லிய தூறல்கள் எனும் அட்சதையை, பச்சை பசேல் என்ற நெற் பயிர்களை தன் மடியில் சுமந்திருந்த பூ மகள் மீது மென்மையாகத் தூவி அவளை ஆசிர்வதிக்க, அதில் மனம் குளிர்ந்து உடல் சிலிர்த்துப் போகவே, அந்த குளுமையை மற்றவருக்கும் உணர்த்தும் பொருட்டு, அதை அனைவருக்கும் அள்ளிக் கொடுத்துக்கொண்டிருந்தாள் அந்த இயற்கை அன்னை அவளது தோழியான வாடை காற்றின் துணையுடன்.


காஞ்சிபுரத்துக்கும் வந்தவாசிக்கும் இடையில் உள்ள 'தேத்துறை' என்ற கிராமத்திலிருக்கும் அந்த அழகிய இரண்டு கட்டு வீடு, அன்று அதிகாலை முதலே பரபரப்புக்களாகி இருந்தது! ஆனந்தி-ராகவன் தம்பதியினரின் அருமை மகள் மைத்ரேயியின் பூச்சூட்டல் வைபம்தான் காரணம்.


சடசடவென முற்றத்தில் வேகமாக வந்து விழுந்த தூறல்களைப் பார்த்து, மனதில் பதட்டம் குடிகொள்ள, 'பெருமாளே! சம்பந்தி ஆத்து மனுஷா எல்லாரும் வந்துட்டு போற வரைக்கும் இந்த மழை வலுக்காமல் இருக்கணுமே!' என எண்ணியவராக,


“டீ! சின்னு! வெத்தல பாக்கு தட்டை எடுத்து வச்சியாடி?


டீ! மரப்பாச்சி பொம்மையை எங்கடீ வெச்ச!


சோழி கிடைச்சுதா?" தனது சின்ன மகள் சின்மயியை ஓட ஓட விரட்டிக்கொண்டிருந்தார் ஆனந்தி அடுக்களையில் (சமையலை) தளிகையைக் கவனித்துக்கொண்டே.


"மன்னி! அக்காரை அடிசிலுக்கு (பாயசம்) வெல்லம் நறுக்கச் சொன்னேனே எங்க?" என்று அவரது மைத்துனர் வரதன் கேட்க, முந்திக்கொண்டு, "தோ இருக்கு... இந்தாங்கோ சித்யா(சித்தப்பா)!" என்றவாறு அதை அவருக்கு அருகில் கொண்டு வைத்தாள் சின்மயீ, அவளுடைய தாயார் சொன்ன அனைத்தையும் செய்து முடித்த கையோடு.


"சின்னு! நீ இங்கயே இருந்து சித்தியாவுக்கு ஹெல்ப் பண்ணு! நான் மைத்து என்ன பண்றானு பார்த்துட்டு வந்துடறேன்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் ஆனந்தி.


அரக்கு நிற பட்டுப்புடவையில் மடிசார் உடுத்தி, மேடிட்ட வயிற்றுடன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கூடத்து அறையில் தயாராகிக்கொண்டிருந்த மூத்த மகள் மைத்ரேயியை கண்களில் நிறைத்துக்கொண்டு, அவளுடைய புடவையின் கால் பகுதியை இழுத்துச் சரி செய்தவாறே, "மைத்து, தலை முடியை ஃபேன்ல காய வை!" என்று சொல்லிவிட்டு, "டீ! லதா! அவளுக்கு தலையைப் பின்னி பூவை சுத்து!" என அவரது தங்கையைப் பணித்தவர்,


நம்மாத்து பிள்ளை இன்னைக்கு இங்க இல்லன்னா உங்காத்து மனுஷால்லாம் என்ன நினைப்பா? என்ன சொல்லுவா?


அவனுக்கு எதாவது இருக்கா பாரு! எப்பப்பாரு ஹாஸ்பிடல், சர்ஜரின்னு எதாவது சொல்லிண்டு இருக்கான்!" என ஆனந்தி குறை பட,


"ம்மா.. எல்லாருக்கும் அண்ணாவை பத்தியும் தெரியும் அவனோட வேலையை பதியும் தெரியும். அவனை யாரும் ஒரு குறையும் சொல்ல மாட்டா.


அப்படியே மனசுல நினைச்சாலும் அத்த வெளில சொல்ற தைரியம் அவா யாருக்கும் கிடையாது.


அவன் அக்ஷய