top of page

En Manathai Aala Vaa! 8

Updated: Sep 29, 2022

மித்ர-விகா-8


வாகனத்தை நிறுத்திவிட்டு மின்தூக்கியை அடைந்ததும், கைப்பேசியை அழுத்திய மித்ரன், அந்த அழைப்பு ஏற்கப்படவும், "மாம். சென்னைலதான இருக்கீங்க?"


"...”


"நீங்க டூர் முடிஞ்சு வந்துட்டீங்கன்னு மெசேஜ் பண்ணியிருக்கலாம் இல்ல? வந்திருப்பேனே”


"...”


"ஐ நீட் சம் ஹோம் ஃபுட் மாம். அனுப்பி வைங்க.


ம்ம்... ரெண்டு பேருக்கு”


“...”


“ப்ச்... ஷண்முகம் லீவ்ல போயிருக்காரு, அதான்”


“...”


“ம்...ம்... முடிஞ்சா நைட் அங்க வரேன், பை!"


அதற்குள் மின்தூக்கி பதினான்காவது தளத்தை அடைந்திருக்க, அழைப்பைத் துண்டித்தவாறு அவன் வெளியேறவும், புரியாமல் அவள் அவனை ஒரு பார்வை பார்க்க, "என்ன?" என்றான் அவன் அதிகாரமாக.


'திமிரு பிடிச்சவன்' என மனதிற்குள் திட்டிக்கொண்டே, "மார்னிங் ஒரு ப்ரைஸ் லிஸ்ட் ரெடி பண்ண சொல்லியிருந்தீங்க இல்ல, அது பாதில நிக்குது"


பவ்யமாகச் சொல்வதுபோல் சொன்னாள். அதில் கொஞ்சம் எட்டிப்பார்த்த அவளது துடுக்குத்தனம் அவனுடைய மனதை இலகு நிலைக்குக் கொண்டு வர, "அதை விட முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. இப்ப என் கூட வா" என்றவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல், அந்தத் தளத்திலிருந்த பகுதியின் முக்கிய கதவை தன் 'அக்சஸ் கார்ட்' கொண்டு திறந்து, உள்ளே சென்றான்.


அதுவும் ஒரு அலுவலகப்பகுதிதான் என்ற எண்ணத்தில் அவனைத் தொடர்ந்து சென்றவள் அதிர்ந்தாள். மிகப்பெரிய கூடத்தில் ஆடம்பரமான 'சோஃபா'க்கள் போடப்பட்டிருந்தன. பெரிய திரையுடன் கூடிய ஒரு தொலைக்காட்சி மாட்டப்பட்டிருந்தது. ஒரு ஓரமாகச் சிறிய உணவு மேசைப் போடப்பட்டு, அதன் அருகில் ரெப்ரிஜிரேட்டரும் ஒரு மைக்ரோவேவ் ஓவனும் வைக்கப்பட்டிருந்தன. அது அவன் தங்குவதற்காகப் பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பகுதி என்பது புரிந்தது அவளுக்கு.


அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் போய் வாகாக அமர்ந்தவன், அனைத்தையும் கண்களால் அளந்துகொண்டு நின்றிருந்தவளிடம், "கவிக்கு கால் பண்ணி வீட்டுக்குப் போயிட்டானா கேளு" என்றான் மித்ரன்.


அவள் உடனே தன் கைப்பேசியை எடுக்க, "நீ இவ்வளவு மரியாதையெல்லாம் கொடுக்க வேணாம். இங்க வந்து உட்கார்ந்தே கால் பண்ணலாம்"


அவளைச் சீண்டும் விதமாக அவன் சொல்ல, அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவள் கவியை அழைத்து, "டாக்ட்டரைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போயிட்டிங்களா கவி அண்ணா?" எனக் கேட்டாள்.


"ஜஸ்ட் இப்பதான் வந்தேன் மா"


அவன் பதில் சொல்லவும், "பெயின் எப்படி இருக்கு?"


அவள் கேட்க, "இன்ஜக்ஷன் போட்டாங்கம்மா. இப்ப பரவாயில்ல" என்றான்.


"ஒரு செகண்ட் இருங்க" என்றவள் அழைப்பை 'ம்யூட்' செய்துவிட்டு, வீட்டுக்குப் போயிட்டாங்களாம்" என்றாள் மித்ரனிடம்.


அந்தக் கைப்பேசியை அவனிடம் கொடுக்குமாறு அவன் கையை நீட்டவும், அவள் அதனைக் கொடுக்க, "கவி. அந்த கதிர்வேலன் அண்ட் ஹிஸ் சன்... வாட்ஸ் ஹிஸ் நேம்? ம்ம். கைலாஷ், அவங்க ட்ரான்ஸாக்ஷன் டீடெயில்ஸ் எல்லாம் இப்ப எனக்கு வேணுமே. உன் லேப்டாப்ல இருக்கு இல்ல" என மித்ரன் கேட்க, "ம்ம்... வாட்ஸ்ஆப்ல பீ டி எஃபா ஷேர் பண்ணவா பாஸ்" என்று கேட்கவும், "ம்ம்... வேணாம் மாள்விக்கு மெயில் பண்ணிடு" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


அங்கே இருந்த ப்ரிண்டரை சுட்டிக்காட்டியவன், "கவி அனுப்பற டாகுமெண்ட்ஸ் எல்லாத்தையும் கொஞ்சம் பிரிண்ட் எடுத்துரு” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்த ஃப்ரிட்ஜிலிருந்து குளிர்பான டின்களை எடுத்து ஒன்றை அவளிடம் நீட்டினான்.


ஏதோ ஒரு இறக்குமதி செய்யப்பட்ட பழரசமாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவள் அதை உடைத்து இயல்பாக வாயில் கவிழ்த்துக்கொள்ள, "நீ வைன்லாம் குடிப்பியா? வேண்டாம்னு சீன் போடுவேன்னு நினைச்சேன்" என்று தீவிரமாகக் கேட்டான் அவன்.


சட்டெனப் புரை ஏறியது அவளுக்கு. அதில் லிச்சியின் சுவை நன்றாகவே தெரிந்தது. இருந்தாலும் கண்களில் நீர் வர அவள் அந்த டின்னில் இருந்த அதன் உட்பொருட்களை ஆராய அது தூய்மையான பழரசம் என்றே காட்டியது.


அவனைக் கோபமாக முறைத்துக்கொண்டே, "குடி நாட்டுக்கு... வீட்டுக்கு... உடலுக்குக் கேடு! அந்தப் பழக்கமெல்லாம் எனக்கு இல்ல" என்று நக்கலாகச் சொல்லிவிட்டு, அதைப் பருகி முடித்தவள் அந்த மின்னஞ்சலில் கவி அனுப்பியிருந்த ஆவணங்களையெல்லாம் பிரிண்ட் எடுக்கத் தொடங்கினாள்.


விரிந்த அவளது கண்களையும், கோபத்தில் சிவந்த அவளது கூர் நாசியையும் பார்க்க, அவ்வளவு பிடித்தது அவனுக்கு. அவளை ரசித்துக்கொண்டே, "ரொம்ப தெளிவுதான் போ" என்று அவன் சிரிக்க, அதற்குள் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் ஒரு நெடியவன். அவன்தான் மித்ரனுடன் கைப்பேசியில் பேசியவன் போலும்.


நினைத்தவளுக்கு அவனை எங்கோ பார்த்தது போன்ற எண்ணம் தோன்றியது. அதுவரை கொஞ்சம் இளகியிருந்தவன் அவனைப் பார்த்ததும் மறுபடியும் இறுகிப்போனான்.


"வா மணி” என்றவன், "எங்க அவங்க ரெண்டு பேரும்" வன்மம் தெரித்தது அவனது குரலில்.


"வெளிய நிக்கறானுங்க தம்பி. உள்ள கூட்டிட்டு வரவா?" எனக் கேட்டான் அந்த மணி.


"யா.. யா.. அதுக்குத்தானே வெயிட் பண்ணிட்டு இருக்கேன்"


அவன் சொல்லவும் வெளியே சென்றவன் இரண்டு பேருடன் உள்ளே நுழைந்தான். அவர்களைப் பார்த்ததும் அவனது வன்மம் கூடியது.


'அந்த கதிர்வேலும் அவரது மகனும் போலும்' என எண்ணிக்கொண்டாள். அந்த இருவர் முகத்திலும் அவ்வளவு பீதி. அவரது மகனின் உதட்டின் ஓரம் காயம் பட்டு லேசாக ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. அந்த நெடியவன் யார் என்ற நினைவு வரவும் லேசான அச்சம் பரவியது அவளுக்குள்ளே.


பிரபல ரௌடி கண்டைனர் மணிதான் அவன். கட்டப் பஞ்சாயத்துகள் செய்துகொண்டு ஊரை மிரட்டுபவன். இங்கேயும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது போலும். அனைத்தையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தாள்.


"மாளவிகா. பிரிண்ட் அவுட் ரெடியா இருந்தா எடுத்துட்டு வாங்க"


மித்ரனிடம் புதிதாக முளைத்திருந்த மரியாதை பன்மையை மனதில் குறித்துக்கொண்டு அதனை அவனிடம் கொண்டுவந்து கொடுத்தாள்.


அவற்றை மேலோட்டமாகப் படித்தவன் அப்படியே அவனுக்கு முன் இருந்த டீபாய் மீது அதை வீசினான். அவர்கள் இருவரும் தலை கவிழ்ந்து நிற்க, "சோ பார் நீங்க என் அண்ணனுக்கு செட்டில் பண்ண வேண்டிய அமௌன்ட். ஒன் நாட் ஒன் க்ரோர்ஸ் தர்டி செவன் லேக்ஸ் நயன் ஹண்ட்ரட் அண்ட் தர்ட்டி சிக்ஸ் ருபீஸ்.


ஞாபகம் இருக்கா இல்ல, தியேட்டர் காம்ப்ளக்ஸை சேல் பண்ற டெசிஷன்க்கு வந்தா உனக்குத்தான் கொடுப்பேன்'னு சொன்னதை மறந்துடீங்களே அத மாதிரி மறந்துடீங்களா" கூர்மையாக வந்தன அவனது வார்த்தைகள்.


"தம்பி, அது வந்து" பெரியவர் தவிப்புடன் வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் தடுமாற, "எங்க ஃபைனான்ஸ் கம்பெனிக்குக் கொடுக்க வேண்டிய அமௌண்ட்டுக்கு அதை எழுதி வாங்கியிருக்கணுமோ. டேட் உங்களுக்கு சப்போர்ட் பண்ணதால பேசாம விட்டேன். அதனாலதான் பேச்சு மாறறீங்களோ" உறுமலாகக் கேட்டான்.


"அது இல்ல, நல்ல ரேட்காகப் பார்த்தோம் சார். மிஸ்டர் கௌதம் வாலண்ட்ரியா வந்து அதுக்கு ஹண்ட்ரட் அண்ட் ஃபிஃப்ட்டி க்ரோர்ஸ் ஆஃப்பர் பண்ணார். அதான் கொடுக்க சம்மதிச்சோம்"


பயத்தில் எச்சிலை விழுங்கியவாறு திக்கித் திணறிச் சொன்னான் கைலாஷ், கதிர்வேலின் மகன்.


"நீங்க அதை என் கிட்ட சொல்லியிருந்தா, நானே பெட்டெர் ப்ரைஸ் கொடுத்திருப்பேன். முதுகுல குத்தற வேலை செஞ்சுட்டிங்க இல்ல? நான் இப்ப என்ன செய்யணுமோ அதைச் செய்யப்போறேன். முதல்ல அந்த ப்ராப்பர்டி மேல ஸ்டே வாங்கப் போறேன். நீங்க அதை எப்படி சேல் பண்றீங்க பாக்கறேன்”


அவன் சவாலாகச் சொல்ல, "ப்ளீஸ் அப்படி செஞ்சுடாதீங்க. அதை ரெஜிஸ்டர் பண்ணி கொடுத்தா ஃபுல் செட்டில்மென்ட் வந்துடும். உங்க கடன் மொத்தத்தையும் கொடுத்திடுவோம்"


கைலாஷ் கெஞ்சலில் இறங்க, "ஸோ, நான் நினைச்ச மாதிரி இது உங்க மகனோட டெசிஷன் ரைட். எனக்குப் பணம் தேவையே இல்ல. நீங்க கொடுத்த வாக்கு. அதைக் காப்பாத்துங்க போதும். அந்த ப்ராப்பர்டியை எங்களுக்குக் கொடுக்கிறதா நீங்கதான சொன்னீங்க. இப்ப பேச்சு மாறக்கூடாது கதிர் அங்கிள்” அவன் அதிலேயே நிற்க,


"இப்ப என்ன செய்யணும் சொல்லுங்க தம்பி" இறங்கி வந்தார் அவர்.


"நாளன்னிக்கு ரெஜிஸ்ட்ரேஷன். மேற்கொண்டு நயா பைசா தரமாட்டேன். ரிஜிஸ்டர் ஆஃபிஸ் வந்து சைன் பண்ணிட்டுப் போங்க. இல்லனா அதோட கான்ஸீக்வன்சஸ நீங்கதான் பேர் பண்ண வேண்டி வரும்"


அவன் கறாராகச் சொல்ல வேறு வழி இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டு அங்கிருந்து சென்றனர் இருவரும்.


"வரட்டா தம்பி” மணி பவ்யமாகக் கேட்க, "செய்ங்க மணி. இவனுங்க மேல ஒரு கண்ணு வெச்சுக்கோங்க. தென் அந்த கௌதமுக்கு ஏதாவது பெருசா செய்யனும். மறுபடியும் உங்கள கூப்பிடறேன்" என அவன் சொல்லவும் அங்கிருந்து சென்றான் மணி.


உடனே ஒருவர் அவனுக்கான மதிய உணவுடன் உள்ளே நுழைய, "ஓகே நான் போய் லஞ்ச் சாப்பிட்டுட்டு அந்த பெண்டிங் வேலையைப் பார்க்கட்டுமா?"


அங்கே நடந்த விஷயங்கள் அவளைப் பாதித்திருந்தாலும் அதை வெளி காண்பிக்காமல் அவள் இயல்பாகப் பேச, "உனக்கும் சேர்த்துதான் லஞ்ச் கொண்டுவர சொல்லியிருக்கேன். எனக்கு தனியா சாப்பிட பிடிக்காது. ஸோ, கம்பெனி கொடு" என அவன் அதையும் கட்டளையாகவே சொல்ல, "நான் லஞ்ச் எடுத்துட்டு வந்திருக்கேன். அது வேஸ்ட்டா போகும்" அங்கிருந்து நழுவுவதிலேயே குறியாய் இருந்தாள்.


"அதை யாருக்காவது கொடுத்துடு. இப்ப என்கூட இந்த ஃபுட்டை ஷேர் பண்ணிக்கோ. ப்ளீஸ்” என அவள் குணமறிந்து இறங்கி வந்தான் மித்ரன்.


அந்த ஒரே ஒரு 'ப்ளீஸ்'ஸில் இறங்கியவள் அவனுடன் உணவு மேசையை நோக்கிப் போனாள். உணவை எடுத்து வந்த பணியாளர் பரிமாறுவதற்காக உடன் வர, "நாங்களே சர்வ் பண்ணிக்கறோம் ராமு. அப்பறமா வந்து இதையெல்லாம் க்ளியர் பண்ணிக்கோங்க" என அவன் சொல்லவும் அங்கிருந்து அகன்றார் அவர்.


எதையும் முகத்திற்கு நேராகப் பேசிவிடுவதுதான் மாளவிகாவின் குணம். மேற்கொண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தால் வாக்குவாதம் வளரும் என்ற எண்ணத்தில் அவள் அமைதியாகச் சாப்பிட, அவளைப் பார்த்தும் பார்க்காமலும் தன் உணவில் கவனத்தைச் செலுத்தியவன், "இந்த சாலட் ட்ரை பண்ணி பாரு. மை ஃபேவரைட் ஒன்” என்று சொல்ல, "இல்ல இனஃப். எனக்கு ஃபுல். இனிமேல் சாப்பிட முடியாது"


அவள் மறுக்கவும், "ஜஸ்ட் டேஸ்ட் பார்க்கலாம் இல்ல" என அவன் வற்புறுத்துவது போல் சொல்ல, அது வரை அடக்கி வைத்திருந்த அவளது கோபம் பட்டெனத் தெறித்துக்கொண்டு வெளியில் எட்டிப்பார்க்க, “இந்த உலகத்துல எல்லாமே நீங்க சொல்ற மாதிரியே நடக்கணும்னு எதிர்பார்க்காதீங்க அமித்” எனச் சீறினாள்.


"ஹேய்... நல்லா இருக்கு சாப்பிட்டு பாருன்னு சொன்னது ஒரு குத்தமா?" என்று அவன் இலகுவாகவே கேட்க, எழுந்து போய் கைகளை அலம்பியவாறு, "உங்களுக்கு எதுதான் தப்பில்ல. ஒருத்தரைக் கூட்டிட்டு வந்து மிரட்டி ப்ராப்பர்டியை எழுதி வாங்கறீங்க. இன்னொருத்தருக்கு வேணும்னே நஷ்டம் பண்றீங்க”


அவள் அடுக்கிக்கொண்டே போக, அவள் புரியாமல் பேசுகிறாள் என்பதை உணர்ந்து பதில் பேசாமல் எழுந்து போய் கைகளை அலம்பியவன், அருகிலிருந்த அறையின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.


அது அவனது பிரத்தரயேக ஓய்வறையாக இருக்கக்கூடும் என்ற யோசனை இல்லாமல், "உங்களால பதில் சொல்ல முடியல இல்ல. நியாயத்தைச் சொன்னா வலிக்கத்...தான்" என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தவளின் பேச்சு தேய்ந்து போய் நின்றது.


அப்பொழுதும் கூட அவளது தைரியத்தை ரசித்தவனின் மனதில் காலை கருப்பில் சிவப்பு பூக்கள் போட்ட அழகிய புடவையில் அவளைப் பார்த்ததும் பொங்கி எழுந்த உணர்வு மீண்டும் தலைதூக்க, மேலும் அவளது பார்வைகளும் அவளது கைப்பேசியை வாங்கிப் பேசும் பொழுது அதில் அவன் உணர்த்த அவளது நறுமணமும் அவளைத் தீண்டிப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. ஆனாலும் கூட எல்லை மீற எண்ணவில்லைதான். அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆவல் மட்டுமே மேலோங்க, "இங்க என் கூட தனியா இருக்கும்போது கூட உனக்கு இவ்வளவு தைரியம் இல்ல?" என அவளை மிரட்டுவது போல் கேட்டான்.


"நான் எதுக்கு உங்கள பார்த்து பயப்படணும்" தயக்கத்துடன்தான் ஒலித்தது அவளது குரல்.


சமயோசிதம் இல்லாமல் ஒருவரின் அறைக்குள் நுழைந்த குற்ற உணர்ச்சி மட்டுமே அதற்குக் காரணம். அதை உணராமல் அவளை நெருங்கியவன், "நான் இப்படியே உன்னை கிஸ் பண்ணா என்ன பண்ணுவ?” சொல்லிக்கொண்டே அவளது கையைப் பற்றியவன் சுவரில் சரித்து அவளை நகரவிடாமல் சிறைச் செய்ய, அவளது ஒரு கரம் பின்னால் சிக்கியிருக்க மறு கரம் இருவருக்கும் தடுப்பாய் இருந்தது.


அப்பொழுது, பட்டென்ற மெல்லிய சப்தம் மட்டுமே கேட்டது அவனுக்கு. அது என்னவென்று அவன் உணரும் முன்னமே அவளது உடல் கொஞ்சம் தளர, அதைச் சாதகமாகக் கொண்டு தன் பிடியை அவன் தளர்த்திய நொடி, அவள் இருந்த இடத்தில் நின்றிருந்தான் அவன். அவனுக்கு முன்னால் இடம் பெயர்த்திருந்தாள் மாளவிகா. அவள் கையிலிருந்த அரைவட்ட வடிவிலிருந்த கூர்மையான ஏதோ ஒன்று அவனது குரல்வளையை அழுத்திக்கொண்டிருந்தது.


அவள் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள் என்றால் குறைந்தபட்சம் ஒரு இஞ்ச் அளவிலாவது அது அவனது தொண்டையைப் பதம் பார்த்துவிடும்.


"உன் பலத்த என் கிட்ட காண்பிக்க முயற்சி செய்யாதன்னு சொன்னேன் இல்ல" கர்ஜித்தாள் மாளவிகா. அவளது உடலில் தளர்ச்சி இல்லை. கைகளில் நடுக்கமில்லை. முகத்தில் சிறிதளவு தயக்கம் கூட தென்படவில்லை. கண்களில் அச்சத்தின் சாயல் என்பதே கொஞ்சம் கூடதென்படவில்லை. அதாவது ரௌத்திரம் பழகிக்கொண்டிருந்தாள்.


காலை மாளவிகா சிரித்த கோணல் சிரிப்பின் அர்த்தத்தை நேரடியாக உணர்ந்து கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.


{ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்;


அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்;


பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்


போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;


நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;


ஞான நல்லறம் வீர சுதந்திரம்


பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;


பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ.


(மஹாகவி பாரதியார்)}

4 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page