En Manathai Aala Vaa! 6
Updated: Sep 27, 2022
மித்ர-விகா 6
சவாலாக சொல்லவில்லைதான், ஆனாலும் கோபத்தில் மாளவிகாவின் குரல் சற்று உயர்ந்து ஒலித்துவிட, "என்ன இந்த ஜென்மத்துல நடக்காதா. ஆர் யூ சேலஞ்சிங் மீ? நடத்திக் காட்டிட்டேன்..னா என்ன பண்ணுவ?” - அவன்தான் அதைச் சவாலாக மாற்றிக்கொண்டிருந்தான் வேண்டுமென்றே!
"ப்ச்.. இது என்ன வம்பா போச்சு. நான் எதார்த்தமாத்தான் சொன்னேன். நீங்க இப்படி பேசினா உடனே உணர்ச்சிவசப்பட்டு சேலஞ்ச்லாம் பண்ணற ஆள் நானில்ல. எனக்குன்னு வாழ்க்கைல சில லட்சியங்கள் இருக்கு அமித். நான் இந்த செகண்ட் வரைக்கும் அதை நோக்கித்தான் போயிட்டு இருக்கேன். ஸோ என்னை என் வழில விட்ருங்க”
அவள் தெளிவாகப் பதில் சொல்ல, "எங்க இவன் எண்ணத்துக்கு பணிஞ்சிருவோமோன்னு பயப்படற இல்ல. உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்ல. அதனாலதான் இப்படி பின்வாங்கற" கிண்டலாகச் சொன்னான் மித்ரன்.
அவன் கண்களை நேராகச் சந்தித்தவள், "பயமா? என் மேல எனக்கே நம்பிக்கை இல்லையா? ஜோக் ஆஃப் தி இயர்”
"ஸோ எந்த ஒரு சந்தர்பத்துலயும் நீ என் கிட்ட மயங்க மாட்ட? உனக்கு அவ்வளவு தன்னம்பிக்கை அப்படித்தான” தன் நோக்கத்தில் முன்னேறிக் கொண்டிருந்தான் மித்ரன்.
"எஸ். அதுல உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்” அழுத்தம் திருத்தமாக வந்தது அவளுடைய பதில். "மயங்கவே போறதில்லனா, தென் அடுத்த ஸ்டெப் போறத பத்தின பேச்சே இல்லையே. அப்பறம் என்ன?
ஒய் காண்ட் யூ டேக் இட் அஸ் எ த்ரீ மந்த்ஸ் சேலஞ். கம்ப்ளீட் மூணு மாசம் நீ என் கூட ஒர்க் பண்ணு. அதுக்கு பிறகும் நீ அட்ராக்ட் அகலன்னா நான் உன்னை இந்த வேலைல இருந்து ரிலீவ் பண்றேன். நீ உன் வழிய பார்த்துட்டு போயிட்டே இருக்கலாம்” இலகுவாகச் சொன்னான் அவன். அவளுடைய மனதை தன் பக்கம் திருப்ப அந்த மூன்று மாதமே அதிகமாகப்பட்டது அவனுக்கு.
அவளிடமிருந்து துரிதமான பதில் இல்லை என்றதும் அவளைத் திரும்பிப் பார்க்க கண்கள் மூடி உட்கார்ந்திருந்தாள். ஏதோ தீவிரமாக யோசிக்கிறாள் என்றுதான் எண்ணினான் அவன். ஆனால் உண்மையில் அவள் தன்னை நிலைப் படுத்திக்கொண்டிருந்தாள்.
“உன் முன்னால எத்தனை பேர் நின்னுட்டு இருக்காங்கங்கறது முக்கியமில்ல மாலும்மா. அது ஒருத்தனே ஒருத்தனா இருந்தாலும், பத்து பேரா இருந்தாலும், ஏன் நூறு பேரா இருந்தக்கூட நீ அதை பத்தி கவலை படாத. உன்னோட பலம், பலவீனம் ரெண்டுமே நீதான். அதனால நீ கவனம் செலுத்த வேண்டியது உன் கிட்ட மட்டும்தான். உன் மேல நம்பிக்கை வை. அதுதான் முக்கியம். அதனால நீ வேற யாரை பத்தியும் கவலை பட வேண்டாம்”
முந்தைய தினம், அவளுடைய குருவான 'சாமிக்கண்ணு' அய்யாவைச் சந்திக்கச் சென்றிருந்த பொழுது, அவர் சொன்ன அறிவுரைகள் நினைவுக்கு வந்தது. ‘இவனை ஜெயிக்கறது ஒண்ணும் அவ்வளவு கஷ்டம் இல்ல மாளவிகா. இவனை ஜெயிக்கறது மூலமா ஒரு சிறப்பான பாடத்தை இவனுக்குக் கத்துக்கொடுக்கறது ரொம்ப முக்கியம். இவன் கசாப்புக் கடைகளைத் தானாகத் தேடி வரும் ஆட்டு மந்தைகளையே பார்த்து பழக்கப்பட்டவன். சிங்கம்னா எப்படி இருக்கும்னு இவனுக்குக் காண்பிக்க வேண்டாமா? இந்த சவாலை ஒத்துக்கோ!'
அவளது அறிவு அவளைத் தூண்டிவிட அந்த வாகனம் நின்றது கூட கவனமில்லாமல் உட்கார்ந்திருந்தாள்.
"ஹேய், அஜூபா. இப்படியே ஏதாவது லாங் ட்ரைவ் போலாமா? எனக்கு ஓகேதான்” அவன் கேலி போல் சொல்ல, சட்டென்று கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள்.
மறுபக்கத்தில் அவனும் இறங்கவும் வேகமாக அவர்களை நோக்கி வந்த காவலாளி ஒருவர் அந்த வாகனத்தை அதை நிறுத்துமிடம் நோக்கிச் செலுத்த, உள்ளே நுழைந்து இருவருயும் மின்தூக்கியை அடைந்தனர்.
அவளுடைய கண்களை ஆழமாகப் பார்த்துக்கொண்டே, "ஸோ... உண்மையிலேயே நீ பயப்படற. அதை ஒத்துக்கோ. அந்த கான்ட்ராக்ட கேன்சல் பண்ணிட்டு உன்னை இன்னைக்கே ரிலீவ் பண்ணிடறேன்” வேண்டுமென்றே அவளைச் சீண்டுவது போல் சொன்னான் அவன்.
அவனுடைய நோக்கம் நன்றாகவே புரிந்தாலும், "அதுக்கு அவசியம் இல்ல மிஸ்டர் அக்னிமித்ரன். நான் உங்க சேலஞ்சை அக்சப்ட் பண்ணிக்கறேன். நான் தான் ஜெயிப்பேன். அதுல சந்தேகமே இல்ல. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது எந்த நிபந்தனையும் இல்லாம நான் சொல்றத அப்படியை நீஈஈஈஈங்க கேட்கத்தான் போறீங்க. எனக்கு அதுல எந்த செகண்ட் தாட்டும் இல்ல” கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் தெளிவாக மொழிந்தாள்.
"கான்ஃபிடன்ஸ் இருக்கலாம். அதுக்காக ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்கக் கூடாது மேடம்” அவன் சற்றுக் கிண்டலுடன் மொழிய, "எப்படி வேணா எடுத்துக்கோங்க. இது செல்ஃப் கான்ஃபிடன்ஸா இல்ல ஓவர் கான்ஃபிடன்ஸான்னு மூணு மாசம் முடியும்போது தெரியும். மத்த படி உங்க உடல் பலத்தை காமிச்சு என்னை ஜெயிக்க ட்ரை பண்ண மாட்டீங்கன்னு நம்பறேன்... அப்படி ஏதாவது" அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாக இடை புகுந்தவன், "ஒரு விஷயத்தை ஃபோர்ஸ்ஃபுல்லி அடையறதுல எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை டார்லிங். அது இன்னுமா உனக்குப் புரியல. நீயாவே என்னை அக்ஸப்ட் பண்ணிட்டு என்னைத் தேடி வரணும். அதுதான் எனக்கு தேவை. மத்தபடி நான் என் பலத்தை... ஐ மீன் உடல் பலத்தை உன் கிட்ட காமிக்க மாட்டேன்! நீ நம்பலாம்”
அவன் கிண்டலாகவே சொல்ல, பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசாமல், ஏளனம் கலந்த சிறு புன்னகையைச் சிந்திவிட்டு அவர்கள் இறங்க வேண்டிய தளத்தில் நின்ற மின்தூக்கியிலிருந்து வெளியேறினாள் மாளவிகா. அந்தப் புன்னகையின் பொருளைப் புரிந்துகொள்ள இயலாமல் தன் அலுவலக அறை நோக்கிப் போனான் அக்னிமித்ரன்.
அவன் அறிவு மங்கி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அதன் அர்த்தம் அவனுக்குப் புரிந்திருந்தாலும், அவன் அதை உணர்ந்திருக்க மாட்டான் என்பதே உண்மை. அனுபவப் பூர்வமாக உ