En Manathai aala Vaa! 5
Updated: Sep 27, 2022
மித்ர-விகா-5
மாளவிகா அவனைப் பெயர் சொல்லி அழைத்த விதத்தில் மித்ரனுக்குக் கோபம் வந்தாலும் கூடவே மெல்லியதாய் சிரிப்பும் வர, அதை மறைக்க முயன்று "ஹேய். அது என்ன இப்படி பேர் சொல்ற" எனக் கண்டனமாகக் கேட்டான் அவன்.
"கார்ப்பரேட் கல்ச்சர்ல ஒருத்தரை ஒருத்தர் பேர் சொல்லி கூப்பிடறதுல ஒண்ணும் சர்ப்ரைஸ் இல்லையே மிஸ்டர் அக்னிமித்ரன்" என வேண்டுமென்றே இன்னுமொருமுறை அவனுடைய பெயரைச் சொல்லியே அவள் மனதில் பட்டதை அப்படியே கேட்க, "பட் எங்களோடது ஒரு ட்ரெடிஷனல் கம்பெனி. தாத்தா காலத்துல இருந்து வேலை செய்யறவங்க சிலபேர் இன்னும் கூட இங்க இருகாங்க. உன்னை மாதிரி யாரும் என்னைப் பேர் சொல்லி இது வரைக்கும் கூப்பிட்டதில்ல. பெட்டெர் அவாய்ட் திஸ்” எரிச்சலுடன் மொழிந்தான் அவன்.
"அதுக்காக சார்.. பாஸ்.. இப்படியல்லாம் நான் கூப்பிட மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஏன்னா சார்னா 'ஸ்லேவ் ஐ ரிமைன்' அப்படின்னு அர்த்தம். பாஸ்னு சொல்றதுக்கும் மொதராளின்னு சொல்றதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல. இங்கதான் கார்ப்பரேட் கல்ச்சர் ஃபாலோ பண்றதில்லன்னு சொல்லிடீங்களே. நான் வேணா மரியாதையா ‘ப்ரோ’ன்னு கூப்பிடட்டுமா?" பேசிக்கொண்டே போனாள் அவள். 'ப்ரோ' என்ற வார்த்தையைக் கேட்டதும் இதயத்தில் ஏதோ பட் பட் என வெடிப்பது போல் இருந்தது மித்ரனுக்கு.
‘ஏய் அஜூபா! என்னைப் பார்த்து ப்ரோன்னு சொன்ன முதல் பொண்ணு நீதான். ஆனாலும் இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?’ மனதில் தோன்றினாலும் அதை அவளுக்கு முன் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவா முடியும்!? அவள் பேசும் விதத்தைப் பார்க்கும்பொழுது அவள் விளையாட்டாக கிண்டலுடன் அப்படிப் பேசுவதாகவும் தோன்றவில்லை அவனுக்கு.
அவள் இயல்பே அதுதான் போலும் என்றுதான் எண்ணிக்கொண்டான். அதில் அவளிடம் வெளிப்பட்ட நிமிர்வு அவனையும் அறியாமல், அவனைச் சற்று அதிகமாகக் கவர்ந்தது.
தலை சாய்த்து வியப்புடன் அவளைப் பார்த்தான் மித்ரன். அவள் இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகு 'சார்' 'பாஸ்' என அவள் அழைப்பது ஏனோ அவனுக்குமே உவப்பில்லாமல் போக சிறு யோசனைக்கு பிறகு, "ஒண்ணு பண்ணு, இந்த மிஸ்டர் சிஸ்டர்லாம் வேண்டாம். ஜஸ்ட் கால் மீ அமித். ஜஸ்ட் அமித். என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல எல்லாரும் என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க. ஸோ இது வித்யாசமா தெரியாது" என்றான் அவன் ஒரு விஷம புன்னகையுடன். அந்த புன்னகையின் பொருள் புரியாமல், ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள் அவள்.
அவன் ஏன் அப்படி விளிக்கச்சொன்னான் என்பது மட்டும் தெரிந்திருந்தால் அவனைக் கிழித்து தோரணமாகத் தொங்கவிட்டிருப்பாள். அவளைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறான் அவன். தெரிய வரும்போது அவனை எரிக்கும் அவள் மீதான காமம் காதலாகக் கசிந்துருகுமோ என்னவோ?
***
அதன் பின் அன்றைய வேலைகள் செம்மையாகத் தொடங்கின. அவளுக்கு அது உண்மையிலேயே அனுபவப்பூர்வமாக நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்புள்ள வேலையாகத்தான் இருத்தது.
ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து வாங்குவது முதல் அதை அவர்களுடைய ஒவ்வொரு அங்காடிக்கும் கொண்டு போய் சேர்ப்பதுவரை கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டி இருக்கும் என்பதை அந்த ஒரு நாளிலேயே புரிந்துகொண்டாள் அவள்.
ஒரு 'ஃப்ரஷ்ஷர்' போன்று இல்லாமல் வேலையில் அவள் காட்டும் ஈடுபாடும் அதில் அவளது வேகமும் அவனைக் கொஞ்சம் பிரமிக்கத்தான் வைத்தது.
அதே சமயம் தேவை இல்லாத பேச்சோ அல்லது ஒரு பார்வையைக் கூட அவனை நோக்கி வீசவில்லை அவள். தன் தோற்றம் குறித்தும், ஆளுமை குறித்தும் கொஞ்சம் அதீத கர்வம் கொண்ட மித்ரன், அதில் சிறிது அடி வாங்கித்தான் போனான்.
அதனால்தானோ என்னவோ அவளது கவனத்தை எப்படி தன்னை நோக்கித் திருப்புவது என்ற வன்மமான யோசனை மட்டுமே அவனது மண்டைக்குள் சுழன்று கொண்டிருந்தது. கொஞ்சம் காரசாரமான விவாதத்துடன் தொடங்கிய வேலைகள் விறுவிறுப்பாகவே செல்ல, கடைசியாக அவன் சொன்ன ஒரு மின்னஞ்சலையும் அனுப்பி முடித்திருந்தாள் அவள்.
அடுத்த வேலைக்காக அவள் காத்திருக்க, "ஹெச்.ஆர்ல போய் மத்த பார்மாலிடீஸ்லாம் முடிச்சிட்டு நீ வீட்டுக்குக் கிளம்பலாம்” அவன் சொல்லவும் அடுத்த நொடி அங்கிருந்து பறந்தவள் அவன் சொன்னது போல் 'ஹெச் ஆர்' பிரிவிலிருந்தாள் மாளவிகா.
அடுத்து வந்த அரைமணி நேரம் அங்கே கழிந்தது. அவள் வேலைகள் முடிந்து வெளியில் வரவும் அவளைக் கைப்பேசியில் அழைத்த கவி, "ஆஃபிஸ் பிக் அப் ட்ராப்க்கு உங்களுக்கு கார் அனுப்பச் சொல்லி பாஸ் சொல்லியிருக்கார். ஸோ ஒரு டென் மினிட்ஸ் ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டுத் துண்டித்தான்.
அங்கே வரவேற்பிலிருந்த இருக்கையில் அவள் உட்கார்ந்திருக்க, சில நிமிடங்களில் சீருடை அணிந்த ஓட்டுநர் ஒருவர் அவளை நெருங்கி வந்து, "மேடம்! கவி சார் உங்களை வீட்டுல ட்ராப் பண்ண சொன்னாரு. போகலாமா?" என்று கேட்க, 'கேப்' வாகனமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் அவரை தொடர்ந்து அவள் வெளியில் வரவும் அங்கே நின்றிருந்த உயர் ரக காரை பார்த்ததும் அதிர்ந்து, "ஆஃபிஸ் கேப் இல்லையா? பிரைவேட் வெஹிகிள் மாதிரி இருக்கே" எனத் தயக்கத்துடன் அவள் அந்த ஓட்டுநரிடம் கேட்க, "இது கவி சாருக்கு கம்பெனில கொடுத்திருக்க கார்ங்கம்மா” என்றார் அவர்.
அதில் செல்ல சற்றுத் தயக்கமாக இருந்தது அவளுக்கு. "பரவாயில்ல அண்ணா. எனக்குக் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணனும். அதனால நீங்க போங்க. நான் பஸ்லேயே போய்க்கறேன்" என்றவள் அவரது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் மாளவிகா.
சில நிமிடங்களில் அவளது கைப்பேசி ஒலி