top of page

En Manathai Aala Vaa - 48

மித்ர-விகா 48


சில தினங்களுக்குப் பின் அலுவலகம் வந்திருந்தாள் மாளவிகா மித்ரனுடன். அவளுடைய பேச்சுக்கள் கொஞ்சம் குறைந்தது போலவே தோன்றியது. நடந்து முடிந்த குழப்பங்களுக்குப் பிறகு இந்த மட்டுமாவது இருக்கிறாளே என்றுதான் தோன்றியது அவனுக்கு.


அவனும் கூட அந்த அதிர்ச்சியிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்திருக்காத காரணத்தினால் அவளிடம் அதிகம் பேச்சுக்கொடுக்கவில்லை.


மதியம் வரை அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்தவள், மதியம் சாப்பிட்ட பிறகு பால்கனியில் வந்து நின்றுகொண்டு சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள்.


வானம் லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. இடியும் மின்னலுமாக வேறு இருக்க, அவளைத் தேடி வந்தவன், "அஜூபா ஏன் இங்க நிக்கற? வா உள்ள போகலாம்" என்று அழைக்க, "எனக்கு அவங்கள பார்க்கணும்" என்றாள் அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே.


"யாரை?" என அவன் புரியாமல் கேட்க, "ரூபாவ" என அவள் சொல்லவும், "லூசா நீ" என்றான் மித்ரன் கடுமையாக. "இல்ல பாக்கணும். அப்பதான் என்னால நிம்மதியா இருக்க முடியும்?" என அவள் சொல்ல, அந்த வார்த்தை அவனை என்னவோ செய்தது.


"ஏன் அவ பேர்ல உனக்கு இவ்வளவு கரிசனம். எப்ப அவ உன்னோட சர்க்கிள் குள்ள வந்தா" எனக் கேட்டான் அவன் அவளைப் புரிந்தவனாக.


"எப்ப நீங்க அவ சர்க்கிள விட்டு வெளியில வந்தீங்களோ, இல்ல உங்க சர்கிளை விட்டு அவளை வெளியில அனுப்பினீங்களோ அப்பவே" என்றவளுக்கு அந்த ஏலத்தில் கலந்து கொண்ட அன்றைக்கு ரூபா அவளைப் பார்த்த அந்தப் பார்வை நினைவில் வந்தது.


ஏற்கனவே அன்று ரூபா சொன்னதை வைத்துப் பார்க்கும்பொழுது மாளவிகா சொல்வது உண்மையே என்று தோன்றியது மித்ரனுக்கு. இவ்வளவு நடந்த பிறகு அவளைத் தடுப்பது சரியில்லை என்று உணர்ந்தவன், "சரி நான் ஏற்பாடு செய்யறேன். நாம போயிட்டு வருவோம்" என்று சொல்ல, "இல்ல நீங்க வேண்டாம். நான் அவங்ககிட்ட தனியா பேசணும்" என்றாள் உச்சபட்ச பிடிவாதத்துடன்.


மறுவார்த்தை பேசாமல் அடுத்த நாள் மதியமே ஒரு நட்சத்திர விடுதியில் அவளைச் சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டான் மித்ரன். ரூபா வேறு உடனே சம்மதித்துவிட மாளவிகாவை எண்ணி உள்ளுக்குள்ளே அவ்வளவு பயமாக இருந்தது மித்ரனுக்கு. இருந்தாலும் தானே அழைத்துக்கொண்டு போய் அவளை அங்கே இறக்கிவிட்டுவிட்டு அலுவலகம் திரும்பினான் மித்ரன்.


அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இடத்தில் போய் உட்கார்ந்தவள் ரூபாவிற்காக காத்திருக்க, சொன்ன நேரத்தைவிட சில நிமிடங்கள் காக்க வைத்த பிறகே அங்கே வந்தாள் அவள்.


அவளைப் பார்த்ததும், "ஹை எப்படி இருக்கீங்க?” என மாளவிகா சினேகமாகப் புன்னகைக்க, ஏதோ கோபப்படுவாள், சீறுவாள் என்றெல்லாம் எண்ணி வந்தவள், அதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவளாக, "ஃபைன்" எனத் தயக்கத்துடன் கூடிய ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்தாள் ரூபா.


"என்ன சாப்பிடறீங்க? உங்களுக்கு என்ன பிடிக்கும்?" எனக் கேட்டு அவளே உணவையும் ஆரடர் செய்ய, அவளுடைய இந்த அணுகுமுறையை ரூபாவால் நம்பவே முடியவில்லை.


"எதுக்கு என்னை மீட் பண்ணனும் சொன்னீங்க" எனக் கேட்டாள் மாளவிகாவிடம். அவளையும் அறியாமல் ஒரு மரியாதை பன்மை வந்து ஒட்டிக்கொண்டது.


"இதை கேக்கறதுக்கு சாரி!” என்றவள், "ப்ராப்பர் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறீங்களா" என்று மாளவிகா கேட்க, என்ன பதில் சொல்வது என்று கூட புரியவில்லை ரூபாவுக்கு. இல்லை என்பதுதான் உண்மை. ஏதோ ஒரு விரக்தி நிலை. மருந்துகள் கூட சரியாக எடுப்பதில்லை. மாளவிகாவின் அந்தக் கரிசனத்தில் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது அவளுக்கு.


அவளுக்கு அம்மா மட்டுமே. அவருக்கோ மகள் ஒரு பணம் காய்க்கும் மரம் மட்டுமே. அதை அவள் எந்த வழியில் சம்பாதித்தாலும் பரவாயில்லை அவருக்கு. கூடவே அதை அழிக்க சில ஒட்டுண்ணிகள் வேறு. அவளிடம் அக்கறை என்பதே யாருக்கும் கிடையாது. அதனால்தானோ என்னவோ ரூபாவின் நோய் பற்றி அவள் இதுவரை யாரிடமும் சொல்லக்கூட இல்லை.


பதிலுக்காக மாளவிகா காத்திருப்பது புரியவும், "ஏதோ" என்றவள், "உங்களுக்கு எல்லாம் தெரியுமா?" என்று கேட்க, "தெரியும்" என்றவள், 'உன் நிலைக்கு காரணம் என் கணவன் இல்லை' எனும் பொருள்படும் படியாக, "எங்க ரெண்டு பேருக்குமே நெகட்டிவ்" என்றாள் மாளவிகா.


மளவிகாவைத் திரும்ப அழைத்து வந்த பிறகும்கூட அவனது பயம் விலகாமல் போக, முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்துகொண்டு, திட்டவட்டமாக அவனுக்கு நோய்த் தொற்று இல்லை என அறிந்த பின்புதான் நிம்மதி உண்டானது இருவருக்கும்.


வியந்துதான் போனாள் ரூபா. அதற்குள் சூப் வர சாப்பிடத் தொடங்கினர் இருவரும். "உங்களுக்கு மித்ரனைப் பிடிக்குமா?" என மாளவிகா வெளிப்படையாகவே கேட்க, "ரொம்ப" என்றாள் ரூபா ஒரே வார்த்தையில் மனதை மறைக்காமல்.


"எமோஷனலா அட்டாச் ஆகிட்டிங்களா?" என அடுத்த கேள்வியைக் கேட்க, "ஆப்வியஸ்லி" என்றாள் ரூபா.


அவளுக்கே கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. இருந்தாலும், "அவர் ஏதாவது கமிட் பண்ணாற... கல்யாணம்ங்கற மாதிரி" எனக் கேட்டாள் அவள் பிரச்சினையை