top of page

En Manathai Aala Vaa-40

Updated: Nov 6, 2022

மித்ர-விகா-40


மருத்துவமனை ஐசியுவில் மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் கண் மூடி படுத்திருந்தவளின் கையை தன் முகத்தில் புதைத்தவாறு அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தான் அக்னிமித்ரன்.


அவளிடம் சிறிதேனும் அசைவு வந்துவிடாதா என அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தன.


தொன்றுதொட்டு பெண்களை தங்களுடைய உடைமையாக மட்டுமே கருதிவரும் ஆணாதிக்க மனோபாவம்தான் தன்னிடமும் இருந்திருக்கிறது.


அவளை தன்னுடைய சொந்தமான உடைமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீவிரம் மட்டுமே இருந்ததே ஒழிய இதனால் அவளுக்கு ஏற்படும் மனஉளைச்சலைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே என்ற குற்ற உணர்ச்சி அதிகமாகவே மனதைச் சுட்டது அவனுக்கு.

அதுவும் அவள் அந்தக் காணொலியில் பேசியது அவனுடைய நினைவில் தோன்றும்போதெல்லாம் அவனது முகத்தைப் பொத்தி வைத்திருந்த அவளது அந்தக் கை அவனுடைய கண்ணீரால் நனைந்து போகும்.


'என்னதான் நான் மொத்தமா மாறிட்டேன்னு சொன்னாலும் கூட இன்னைக்கு வரைக்கும், ஆண்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு சின்ன அவநம்பிக்கை என்கிட்ட இருந்துட்டுதான் இருக்கு.


ஒரு சிலரைத் தவிர யாரையும் என்னால முழுமையா நம்ப முடியல.


சக மனுஷங்களைக் குறிப்பா பெண்களை மதிக்கறவங்கங்கற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டால் மட்டும்தான் ஒருத்தரை ஃப்ரெண்டாக்கூட என்னால முழுமையா ஏத்துக்க முடியும்' - இதை அவள் சொன்னது நினைவைச் சுடும்போதெல்லாம், தன்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்தும் அவளது இந்த மனநிலையைத் தள்ளி வைத்து அவளுடைய வாழ்க்கையில் அவள் தன்னை ஏற்றுக்கொள்ள முற்பட்டிருக்கிறாள் என்றால் அவள் எந்த அளவுக்கு தன்னை விரும்பியிருப்பாள் என்ற எண்ணம் தோன்ற, 'அவளிடம் என்ன மாதிரி நடந்துகொண்டிருக்கிறேன் நான்?' என்ற கேள்வியில் அவன் உடல் அதிரும்.


அப்பொழுதெல்லாம், "என்னை நம்பு அஜூபா. நீ வேணும்ங்கற வெறில யோசிக்காம என்னென்னவோ பண்ணிட்டேன். மத்த பொண்ணுங்கள பொறுத்தவரைக்கும் நான் எப்படியோ... உன்னை நான் ரொம்ப மதிக்கறேன் லயன்னஸ்.


அதை நீ நம்பித்தான் ஆகணும். இது வரைக்கும் நான் எந்தப் பெண்ணையும் எந்த ஒரு விதத்திலும் துன்புறுத்தி சந்தோஷப்பட்டதில்ல. யாரையும் எதுக்காகவும் கம்பல் பண்ணதில்ல.


அதே சமயம் அவங்களாவே என்னை நெருங்கி வந்த போது தவிர்த்ததும் இல்ல. இதையும் நீ நம்பிதான் ஆகணும். இப்ப கூட நீ எனக்கு வேணும்கற எண்ணத்தை என்னால மாத்திக்கவே முடியல. பிகாஸ் ஐ லவ் யூ. ஐம் இன் நீட் ஆஃப் யூ அஸ் ஆக்சிஜன் டு ப்ரீத். இதையும் நீ நம்பித்தான் ஆகணும்.


இனிமேல் உன் விஷயத்துல எந்த தப்பும் செய்ய மாட்டேன். உனக்காக மட்டுமே இனிமேல் என் வாழ்க்கை இருக்கும்.


நீ அன்னைக்குச் சொன்ன மாதிரி உன்னை என்னோட மகாராணியா வாழ வைப்பேன்னு சொல்றதவிட அப்படி உன்னை முழுமையா உணர வைப்பேன்.

வாய் வார்த்தையா சொல்லி எக்ஸ்ப்ளைன் பண்றத விட, நீ நல்லபடியா திரும்பி வா. இதையெல்லாம் நாம வாழற வாழ்க்கைல உன்னை உணர வைக்கறேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுப்பான் அவன்.


இதை ஒரு முறை இரண்டு முறை சொல்லவில்லை, இதையே ஒரு மந்திரம் போலப் பல முறை சொல்லிவிட்டான் அக்னிமித்ரன். மொத்தமாக மூன்று இரவுகள் இரண்டு பகல்கள் முடிந்துவிட்டது அவளை இங்கே கொண்டு வந்து அனுமதித்து.


எவ்வளவு பேசினாலும் கண்ணீர் சிந்தினாலும் ஒரு சிறு அசைவு கூட இல்லை அவளிடம். ஓய்ந்துதான் போனான் அக்னிமித்ரன்.


அன்று அந்த டப்பிங் ஸ்டூடியோவிலிருந்து கிளம்பியவுடன் அவன் மாளவிகாவை கைப்பேசியில் அழைக்க, அழைப்பு போய்க்கொண்டே இருந்ததே ஒழிய அதை ஏற்கவில்லை அவள்.


ஏற்கனவே இருக்கும் குழப்பம் போதாதென்று அந்தக் காணொலி வேறு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகிக் கொண்டிருக்க அதை தான் செய்யவில்லை என்ற தன்னிலை விளக்கத்தை அவளுக்குக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் நேராக அவளது வீட்டை நோக்கி