top of page

En Manathai Aala Vaa 41

Updated: Nov 6, 2022

மித்ர-விகா 41


ஒரு வழியாக அடுத்த நாள் அதிகாலை கண் விழித்த மாளவிகா அவளிருக்கும் சூழ்நிலையையும் நன்றாகவே உணர்ந்துகொண்டாள்.


முதன்முதல் அவள் பார்த்தது இருக்கையில் அமர்ந்திருந்தவாறே அவளது முகத்துக்கு அருகில் தலைசாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த அக்னிமித்ரனைதான்.


மெல்லிய புன்னகை அரும்பியது அவளுடைய முகத்தில். ஒரு கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டிருக்க மற்றொரு கை அக்னி மித்திரனுடைய முகத்திற்குக் கீழே இருந்தது. மொள்ள அந்தக் கையை உருவிக் கொண்டவள் மெதுவாக எழுந்து உட்கார முற்பட, அந்த சிறு அசைவிலேயே கண் விழித்துவிட்டான் அக்னிமித்ரன்.


அதுவரை, கண்விழித்ததும் தன்னைப் பார்த்தால் எப்படி நடந்து கொள்வாள் என்ற யோசனையே இல்லாமல் இருந்தவனுக்கு அவளது நினைவு திரும்பியதைப் பார்த்ததும் மனதில் திகில் சூழ்ந்தது.


அது அவன் கண்களில் அப்படியே பிரதிபலிக்க, ‘என்ன இவன் இப்படிப் பார்க்கிறான்?’ என்றுதான் தோன்றியது மாளவிகாவுக்கு. அவள் ஏதும் பேசுவதற்கு முன்னமே அங்கிருந்து வேகமாக வெளியே சென்றவன் அவளுக்காகப் பிரத்தியேகமாக இருந்த செவிலியரை அழைத்து அவள் கண் விழித்துவிட்டதைச் சொன்னான்.


உடனே சாத்விகாவைக் கைப்பேசியில் அழைத்தவன் அவள் கண் விழித்ததைச் சொல்ல, அங்கேயே ஒரு அறையில் தங்கியிருந்த சாத்விகா, துளசி இருவரும் அவளைக் காணும் ஆவலில் உடனே ஐசியு நோக்கி வந்துவிட, அவனே வெளியில்தான் நின்றுகொண்டிருந்தான் அவளை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்ததால்.


சில நிமிடங்களில் அவள் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாகச் சொல்லி, அவளைத் தனி அறைக்கு மாற்ற, அதற்குள் மூர்த்தியும் வந்துவிட எல்லோருமாக அவளைப் பார்க்க உள்ளே நுழைந்தனர். அவளை நேருக்குநேர் சந்திக்க அஞ்சி வெளியிலேயே நின்றுவிட்டான் அக்னிமித்ரன்.


எல்லோரையும் பார்க்கவும், அந்தக் காணொலி நினைவுக்கு வரக் கொஞ்சம் தடுமாறியவள், "அப்பா, சாரி" என்று மன்னிப்பு வேண்ட, அவளுடைய கண்கள் நீர் கோர்த்தது. அவள் அழுகையை அடக்க மிகவும் போராட, பதறிபோனவர், "பாப்பா, வேணாம் விடு. நாங்க உன்னை எந்தக் கேள்வியும் கேக்க மாட்டோம். உனக்கு என்ன விருப்பமோ அப்படியே செய்யலாம்” என்றார் அவர் அவசரமாக.


மகள்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் அவருக்கு அதிகமாகிப் போயிருப்பதை அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள முடிந்தது மாளவிகாவுக்கு. அன்னையின் முகத்திலும் வேதனை மண்டிக்கிடந்தது. கண்களை மூடி சில நிமிடங்கள் தன்னை சமன்செய்துகொண்டவள்,


"போதும் பா... ஏற்கனவே என்னால நீங்க எல்லாரும் ரொம்ப கஷ்ட பட்டுடீங்க. இனிமேலும் யாருக்கும் டென்ஷன் கொடுக்க நான் விரும்பல. குழப்பம் இல்லாம ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்" என்றவள், "மித்ரன் வீட்டுல பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க" என்று முடித்தாள்.


அவள் முகத்திலும் குரலிலும் அப்படி ஒரு தெளிவு வந்திருந்தது. மகளை உணர்ந்தவராகத் துளசி கணவரை ஒரு பார்வை பார்க்க அதைப் புரிந்து கொண்டவராக மூர்த்தி வேகமாக வெளியே சென்றார். கூடவே துளசியும் செல்ல, "அக்கா கடைசில நீதானா அந்த அஜூபா?" எனக் கேட்டாள் சாத்விகா குதூகலத்துடன்.


"ஒத வாங்க போற" என மாளவிகா சொன்ன விதத்திலேயே அவள் இயல்பிற்குத் திருப்பியிருப்பது புரிய, அதற்குள் மது சாத்விகாவைக் கைப்பேசியில் அழைக்கப் பேசிக்கொண்டே வெளியில் சென்றாள் அவள்.


சில நிமிடங்களில் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அக்னிமித்ரன் முகம் கொள்ளா புன்னகையுடன். அவளுக்கு அருகில் வந்து நின்றவன் அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தும் ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டு, "சாரி... சாரி... சாரி... அஜூபா! நான் உனக்கு செஞ்சதெல்லாம் ரொம்ப அதிகம். ரியலி வெரி சாரி" என அவன் திரும்பத் திரும்ப சொல்ல, "ஷ்... முடியல ப்ளீஸ்" என்றாள் அவள் சலிப்புடன்.


"அப்படின்னா... உங்க அப்பா என்னவோ சொல்றாரே. அது நிஜம்தானா அஜூபா? நீ என்னை அக்சப்ட் பண்ணிட்டியா?” எனக் கேட்டான் அவன் வியப்பு மேலிட.


"எஸ். ஓகே” என இரண்டே வார்த்தைகளில் அக்னிமித்ரனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள் மாளவிகா சிறு புன்னகையடன்.


"அந்த வீடியோ லீக் ஆனதாலயா?" அவன் வேதனையுடன் கேட்க, "இல்லை" என்று தலை அசைத்தாள் அவள்.


"அந்த வீடியோவ... நான்..” எனக் குற்ற உணர்ச்சியில் அவன் தடுமாற, "அது உங்க ஃபோன்ல இருந்த வீடியோ இல்லன்னு எனக்கு தெரியும். அது உங்க நேம்ல இருக்கற ஃபேக் ஐடின்னும் எனக்கு தெரியும்" என்று அவள் இயலபாகச் சொல்ல, உணர்ச்சியின் பிடியில் சிக்கியவனாக, "லவ் யூ லயன்னஸ்!" எனக் கண்கள் பணிக்கத் தழுதழுத்தான் அவன்.


மனதிலிருந்த சஞ்சலங்கள் மறைந்து இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டன நிம்மதியுடன்.


***


அக்னிமித்ரன் புதையல் வேட்டையில் தலையைக் கொடுத்திருக்க, அவனது அதிகப்படியான நேரத்தை அந்த நிகழ்ச்சியே எடுத்துக்கொண்டது. இடையில் அந்த இரண்டு காணொலிகளையும் பதிவு செய்தது யார் எ