top of page

En Manathai Aala Vaa-27

Updated: Oct 20, 2022

மித்ர-விகா-27


வேறெதையும் சிந்திக்க விடாமல் நாள் முழுவதும் அவளைத் தன்னுடனேயே வைத்திருப்பதே மித்ரனுக்கு அவ்வளவு இனிமையைக் கொடுத்தது. அதுவும் உண்மையிலேயே நட்பு முகமாக அவள் பழகுவதே போதுமானதாக இருந்தது.


அவளுடைய இயல்பான பேச்சும், சின்ன சின்ன புன்னகைகளும், கைக்கெட்டும் அவளுடைய அருகாமையும் அவனை இன்னும் இன்னும் பித்தாக்கிக் கொண்டிருந்தது.


கட்டாயம் இதற்கு அடுத்த நிலை காதல்தான் என்பது புரிய, ஒரே ஒரு நொடியேனும் அவளுடைய கண்கள் அந்தக் காதலை காட்டிக்கொடுத்துவிடாதா என ஏக்கத்துடன் காத்திருந்தான்.


அப்படி மட்டும் நடந்துவிட்டால் தன் மனதை அவளிடம் சுலபமாகப் புரிய வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு மலையளவு இருந்தது. அவனைப் பொறுத்தவரை அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அதே போல் அவளுக்கும் அவனைப் பிடித்தே ஆக வேண்டும்.


அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறானே ஒழிய அவளுடைய மனநிலையைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அவனுடைய பார்வையிலிருந்து மட்டுமே அவளைப் பார்ப்பவன் அவளுடைய இடத்திலிருந்தும் கொஞ்சம் அவளை எண்ணிப் பார்த்திருக்கலாம்.


முன்பு உண்டான காயத்தின் ஒரு துளி இன்னும் கூட ஆறாமல் அவளுடைய மனதில் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதை அவளே அறியாதபொழுது, அவளுடைய அடிப்படையே அறியாத அக்னிமித்ரனால் எங்கே அதைப் புரிந்துகொள்ள முடியும்?


அந்தக் காயத்தை இவனே கிளறிவிடப் போகிறான் என்பதை அறியாமல் அவள் மட்டும் அவனுடைய காதலை அங்கீகரித்துவிட்டாள் என்றால் இந்த ஆயுள் முழுவதும் அவளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவன் கொண்டிருப்பதால் ஒரு நன்மையையும் அவளுக்கு விளையப்போவதில்லை.


காலை அலுவலகம் செல்ல தயாராகிக் காத்திருந்த மாளவிகா, வாகன ஒலிப்பானின் சத்தத்தில். "அம்மா பை" என்று சொல்லிவிட்டு வெளியில் வர, வழக்கமாக வரும் அலுவலக வாகனம் இல்லாமல் மித்ரனின் வாகனம் அவளுக்காகக் காத்திருந்தது.


'திக்' என்று ஆனது அவளுக்கு.


இரவு வீடு திரும்பும்பொழுது அவர்களுடைய கடைக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு மூர்த்தியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துவிடுவாள். அலுவலக வாகனம் என்றால் 'பிக்-அப்' அவளுடைய வீட்டிலிருந்தே இருக்கும்.


இதுவரை அவளை 'பிக்-அப்' செய்யவென்று அவன் வந்ததில்லை என்பதால், இப்படி வீடு வரைக்கும் அவன் வருவது என்பது இதுவே முதன்முறை. அனிச்சையாக வீட்டிற்குள் எட்டிப்பார்க்க, கல்லூரிக்குக் கிளம்ப சாத்விகா செய்துகொண்டிருந்த அலப்பறையில் துளசி அவளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். நல்லவேளையாக இவளைக் கவனிக்கவில்லை.


ஒரு பெருமூச்சுடன் வேகமாக வந்து காரில் ஏறியவளுக்கு 'ஏற்கனவே இருப்பதெல்லாம் போதாதா, இது வேறா?' என்றுதான் இருந்தது.


அந்த எண்ணத்தைப் பிரதிபலிக்குமாறு சற்று அலுப்பான குரலில், "என்ன மித்ரன் இது. என்னை பிக் அப் பண்ண நீங்க இங்க வரணுமா? ஆஃபீஸ் கேப்லயே வந்திருப்பேனே” என 'வீடு வரைக்குமெல்லம் ஏன் வந்தாய்?' என்பதை அவள் சுற்றி வளைத்துக் கேட்க, "உன்னை பிக் அப் பண்றதுல எனக்கு என்ன கஷ்டம். நீ என்னை இன்னும் ஃப்ரெண்டா கன்சிடர் பண்ணல இல்ல மாள்வி. அன்புவா இருந்தா இப்படி கேட்பியா?" எனக் கேட்டு, "என்ன மித்ரன் இப்படி சொல்றீங்க” எனக் குற்ற உணர்ச்சியுடன் அவளைக் கொஞ்சம் வருந்த வைத்தவன், "லீவ் இட்” என்று சொல்லிவிட்டு, "நம்ம வேர் ஹாவ்ஸ்ல ஸ்டாக் வெரிஃபிகேஷன்காக இன்டர்னல் ஆடிட்டர்ஸ் வராங்க. ஒரு ஹாப் அன் அவர் அங்க போய் எட்டிப்பார்த்தது வந்துடலாம். நீயும் அங்க வந்தது இல்ல...ல" என்றான்.


அவளுக்கும் அவர்களுடைய முக்கிய கிடங்கைப் பார்க்கும் ஆவல் இருக்க அதை ஆமோதிப்பது போல் மௌனமாகிப்போனாள் மாளவிகா.


காலை 'பீக் அவர்' என்பதினால் வாகனத்தை மெதுவாக நிறுத்தி நிறுத்தி ஓட்டவேண்டியதாக இருக்க, அதில் கடுப்பானவன், அந்த எரிச்சலைத் தணிக்க, 'ஆடியோ சிஸ்ட'த்தின் ஒலியைக் கூட்டவும் ஆங்கில பாட