En Manathai Aala Vaa-24
Updated: Oct 17, 2022
மித்ர-விகா-24
அடுத்த நாள் காலை, உறக்கமோ மயக்கமோ ஏதோ ஒன்றிலிருந்து தெளிந்து கண் விழித்தான் மித்ரன்.
கைகளை ஊன்றி அவன் படுத்திருந்த கட்டிலிலிருந்து அவன் எழுந்திருக்க முயலவும், வலது கையில் சுருக்கென்ற வலி எழ, பார்த்தால் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டு ஐ.வி கதீட்டர் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.
அவர்களுக்குச் சொந்தமான மருத்துவமனையில் அவர்களுடைய குடும்பத்திற்கான பிரத்தியேக அறையில்தான் இருக்கிறான் என்பது விளங்க நிமிர்ந்து பார்த்தால் அவனை முறைத்தபடி அருகிலிருந்த கௌச்சில் உட்கார்ந்திருந்தான் விக்ரம்.
"டேய் அண்ணா. இதெல்லாம் அந்த ஷண்முகம் பார்த்த வேலைதான? எனக்கு இப்ப என்ன ஆச்சுன்னு இங்க கொண்டுவந்து அட்மிட் பண்ணி வெச்சிருக்க" என அவன் சீற, "அடங்குடா, இல்லன்னா அம்மாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவேன்" எனத் தம்பியின் பலவீனம் அறிந்து அதில் அடித்தவன், "பின்ன கேக்க மாட்ட நீ. ஏதோ பார்ட்டி ட்ரிங்தான பண்றன்னு கொஞ்சம் கண்டுக்காம விட்டா, இப்படி மொடா குடிகாரன் மாதிரி குடிச்சிட்டு விழுந்து கிடக்க. ஷண்முகண்ணா மட்டும் கவனிச்சிட்டு ஃபோன் பண்ணலேன்னா என்ன ஆகியிருக்கும் தெரியுமா?" எனப் பதிலுக்கு எகிறிய விக்ரம், "இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல ஆனந்த் அங்கிள் வருவாரு. மிச்சம் மீதிக்கு அவர்கிட்ட வாங்கி கட்டிக்கோ" என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன், "என்னடா... லவ்வா?" என்று கிண்டலுடன் கேட்க, அதிர்ச்சியும் சிறு வெட்கமும் போட்டிப்போட்டுக்கொண்டு எட்டிப்பார்த்தன மித்ரனின் முகத்தில்.
அதைக் கவனித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்த விக்ரம், "டேய் மிஸ்டர் லயன். யார்டா உன்னோட அந்த லயன்னஸ்?" என்று வேறு விடாமல் கேட்டு வைக்க, "டேய்... வேணாம் விட்டுடு... ஹாஸ்பிடல்னு கூட பார்க்கமாட்டேன்" எனப் போலியாகக் கோபப்பட்டான் மித்ரன்.
அதற்குள் கதவைத் தட்டிவிட்டு, அவர்களுடைய குடும்ப மருத்துவரான ஆனந்த் உள்ளே நுழைய, “குட் மார்னிங் அங்கிள்” என்றான் விக்ரம். கூடவே மித்ரனும் காலை வணக்கத்தைச் சொல்ல, "உன்னுடைய குட் மார்னிங் அக்ஸப்டட்" என விக்ரமை பார்த்து சொன்னவர், "இந்த மார்னிங்க்ல என்ன குட்...டை கண்ட நீ. நேத்து ராத்திரி டாஸ்மாக் குடிகாரனவிட கேவலமா குடிச்சிட்டு மட்டையாகி கிடந்திருக்க. விக்ரம் மட்டும் உன்னை இங்க கொண்டுவந்து போடலன்னா டீஹைரேஷன்ல நாக்குத் தள்ளி செத்திருப்ப. அப்பறம் இது ரொம்ப பேட் மார்னிங்கா இருந்திருக்கும்" என எகத்தாளமாக அவனைக் கடிந்துகொண்டார்.
குற்ற உணர்ச்சியுடன், "அங்கிள்…" எனப் பதில்சொல்லமுடியாமல் அவன் இழுக்க, "இந்த ஒரு தடவ போனாப்போகுது ஒழிஞ்சு போன்னு விடறேன். மறுபடியும் இது போல செஞ்சு வைக்காதே" என உரிமையுடன் அவனைக் கண்டித்தார் அவர்.
அவர் அறியாமல் விக்ரம் வேறு அவனைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கவும், அவருக்கு எதிரே அண்ணனை முறைக்கக்கூட இயலாமல், நல்லவன் போல முகத்தை வைத்துக்கொண்டு, "ஏதோ ஆக்சிடென்டலா நடந்துபோச்சு. ஃப்ரீயா விடுங்க அங்கிள்" எனச் சலுகையுடன் சொல்ல,
"போடா உன்னால ராத்திரி வீட்டுக்கே போகல. இப்ப போனா பொண்டாட்டி கையால தரும அடி நிச்சயம்" எனப் பரிதாபமாக அவனைப் பார்த்து முறைத்தவர் விக்ரமிடம், "எல்லாம் நல்லா தெளிஞ்சுட்டான், போய் பொழப்ப பார்க்க சொல்லு, கைல இருக்கறதெல்லாம் பிடுங்கிப்போட சொல்லி சிஸ்டர் கிட்ட சொல்லிட்டுப் போறேன்" என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அந்த மூத்த மருத்துவர்.
"இதெல்லாம் அவரா பேசினதா இல்ல நீ அவர