top of page

Are You Okay baby?! 7

நிலா-முகிலன் 7


"என்ன இவ டாக்டரா?” என அதிர்ந்து, பின், “இருந்தாலும் இருக்கலாம் அண்ணா!" என்ற கதிர், "அப்படின்னா தெரிஞ்சுதான் இந்த டேப்லெட்டை கன்ஸ்யூம் பண்றா போல இருக்குண்ணா" என்று முடிக்க,


"அவ இவன்னு சொல்லாதன்னு சொன்னேன் இல்ல கதிர். எனக்கு கொடுக்கற ரெஸ்பெக்ட்ட நீ என் வைஃபா வரபோறவளுக்கும் கொடுக்கணும்; இட்ஸ் அன் ஆர்டர்!" என்றான் முகிலன் கொஞ்சம் கடினம் ஏறிய குரலில்.


முகிலன் நிலாவிடம் இவ்வளவு தீவிரம் காண்பிக்கவும், அது ஆச்சரியமாக இருந்தது கதிருக்கு.


"ஆர் யூ டேக்கிங் திஸ் ரிலேஷன்ஷிப் வெரி சீரியஸ் அண்ணா!?” கேட்டான் கதிர்.


கதிருக்கு முகிலனின் வேலையைப் பற்றித் தெரியும்.


அதில் அவன் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.


அது போன்ற வேலைக்கு அவனே கூட சற்று தயங்குவான். ஆனால் முகிலன் அதை மனம் விரும்பி செய்கிறான்.


சென்னையில் இருக்கும் நாட்கள் அவனுக்கு ஒரு சிறு ஓய்வு போலத்தான். அதுவும் இதை அவன் ரசித்து அனுபவிப்பான்.


அந்த நேரத்திலும் யாரோ ஒருத்திக்காக அவன் இப்படி ஓடிக்கொண்டிருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை கதிருக்கு.


அதனால்தான் தன் மனதில் இருப்பதை மறைக்காமல், “இவ பார்க்க அழகா இருந்தாலும், கேரக்டர் பத்தி யோசிச்சா; நாட் அப் டு த மார்க்; ஐ திங்க் ஷீ இஸ் நத்திங் பட் அ ட்ரக் அடிக்ட்" என்றான் கதிர் விளையாட்டை எல்லாம் கைவிட்டவனாக.


"போதும் கதிர்! இதுக்கு மேல எதுவும் பேசிடாத. அது நம்ம ரெண்டு பேரையுமே அஃபக்ட் பண்ணும்" என்றான் முகிலன்.


"அண்ணா ப்ளீஸ்! எனக்கு யாரோ ஒரு பெண்ணை விட நீங்க ரொம்ப முக்கியம். ஸோ! ஐ கான்ட் அலவ் திஸ்!" மிகத் தீவிரமாகச் சொன்னான் கதிர்.


"நீ யார் என்னை அலவ் பண்ணன்னு கேட்டுடாதீங்க? நான் உடைஞ்சிடுவேன்" என்றான் தொடர்ச்சியாக.


"லூசு மாதிரி உளறாத கதிர். எனக்கு உன்னைத் தெரியும். எனக்கு அவ வேணும்தான். அதே போல நீயும் எனக்கு முக்கியம் டா!" என்றவன்,


"இதுக்கு பதில் சொல்லு? உன் வாழ்க்கைல வந்த முதல் பெண் யாரு?" எனக்கேட்டான் முகிலன்.


"ஸ்கூல்ல காலேஜ்ல இப்படி நிறையபேரை க்ராஸ் பண்ணி வந்திருப்போம் இல்ல? பர்டிகுலரா யாரை கேக்கறீங்க?" என்றான் கதிர்.


"உன் லைப்ல வந்த; நீ உணர்ந்த முதல் பெண்!" என்றான் முகிலன்.


"ஆப்வியஸ்லி அம்மாதான!" என்றான் கதிர்.


"எக்ஸாக்ட்லி, பட் அம்மாவை விட உனக்கு பிடிச்ச ஒருத்தங்கள சொல்லு!" என முகிலன் கேட்க, பட்டென்று பதில் சொன்னான் கதிர், "ஸ்ரீமணி ஆன்ட்டி! உங்க அம்மா!" என்று.


"ஏன்" முகிலன் கேட்க, "ஏன்னு உங்களுக்கு தெரியாதா என்ன? அவங்க ஒரு பர்ஃபெக்ட் அம்மா பிகர்; எங்கம்மாவுக்கு, அவங்க ஃப்ரண்ஸ், பார்ட்டீஸ், அவங்களோட சோஷியல் ஸ்டேட்டஸ், பந்தா இதெல்லாம்தான ப்ரிஃபரன்ஸ். நாங்க செகண்டரிதான.


பட் ஸ்ரீ ஆன்ட்டி அப்படி இல்லையே. லவ் அண்ட் கேரிங்.


உங்களோட சேர்த்து அவங்களோட அன்பு எங்களுக்கும் கிடைச்சுதே.


அதை எப்படி நினைக்காம இருக்க முடியும்?" என நெகிழ்ந்தான் கதிர்.


"அதேதான்டா இதுவும்! நிலாவ பார்க்கும்போது எங்க அம்மா மாதிரி ஒரு பொண்ணுங்கற ஃபீல்தான் வருது.


நான் அனுபவிச்ச ப்ரிவிலேஜ் என் பிள்ளைகளுக்கு அவளால மட்டும்தான் கொடுக்கமுடியும்னு எனக்கு ஒரு உள்ளுணர்வு.


சாரி டு சே திஸ்; உங்க அம்மா மாதிரி மைண்ட் செட் இருக்கற பொன்னுங்களதான ந