top of page

Anbenum Idhazhgal Malarattume! 4

Updated: 3 days ago

அணிமா 4


"உன்னோட போலீஸ் ஆஃபிசர் கெத்த எங்கிட்டயே காமிக்கிறயா? அந்த நாய பார்த்தா, உனக்கு இன்னசண்ட்டா தோணுதா? என்னையே மிரட்டுவியா நீ? அங்கேயே உன்னையும் ரெண்டு போட்டிருப்பேன். நீ யூனிஃபாம்ல இருந்ததால தப்பிச்ச!" என்று சொல்லிக்கொண்டே அவனை மலர் அடிக்கவும்,


ஒரு பூனை, அதன் குட்டியின் கழுத்தில் கவ்வித் தூக்கும் இலாவகம் அவள் அவனை அடித்த அடியில் இருந்தது போலும்! "காந்தக் கண்ணழகி! ஆங் லெஃப்ட்ல பூசு! ஆங் ரைட்ல பூசு!" எனச் சொல்லிக்கொண்டே ஜெய் இப்படியும் அப்படியுமாகத் திரும்ப,


"அட ஈஈஈஸ்வராஆஆ! ஜெய்! நீ அடங்கவே மாட்டியா?" என்று கேட்டுக்கொண்டே அவள் இன்னும் இரண்டு அடி அடிக்கவும், அவளுடைய கையைப் பிடித்து தடுத்தவன், "ஏய் என்ன! நீ செஞ்சு வெச்ச வேலைக்கு நான் அத்தைக்கிட்ட மட்டும் சொல்லியிருந்தா நீ இந்த ஆட்டம் ஆட மாட்டடி" என அவன் குறிப் பார்த்து அடிக்கவும்தான் சற்று மலையிறங்கினாள் மலர்.


அதற்குள் அந்த மின்தூக்கி. நான்காவது தளத்தை எட்டிவிடவும் அதிலிருந்து வெளியேறினர் இருவரும். அங்கே அச்சுதனின் வீடு பூட்டப்பட்டிருக்கவும், "ஒண்ணுமில்ல! பாட்டி ஒரு வாட்ஸாப் க்ரூப்ல இருக்காங்க. அவங்க எல்லாரும் சேர்ந்து இங்க ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ஒருத்தங்க வீட்டுல மார்கழி பஜனை ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அங்கேதான் அம்மா, பாட்டி, தாத்தா மூணு பேரும் போயிருப்பாங்க. நீ இங்க வரப்போரது அவங்களுக்குத் தெரியும் அதனால சீக்கிரம் வந்திடுவாங்க. வா, அதுவரைக்கும் மொட்டை மாடில இருக்கலாம்" எனக்கூறிவிட்டு, அவனுடைய அம்மாவும் அச்சுதனின் மனைவியுமான சாவித்ரிக்கு அவர்கள் வந்துவிட்டதைத் தெரியப்படுத்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு மலருடன் மொட்டை மாடி நோக்கிச் சென்றான் ஜெய்.


"டிராக் சூட்ல இருக்க, ஜிம்முக்குப் போயிட்டு வரியா என்ன?" எனக் கேட்டுக்கொண்டே மாடிப்படியில் ஏறினாள் மலர்.


"ம்!. ஒரு அர்ஜன்ட் வேலை இருக்கு. இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பனும் அதனால ஒர்கவுட்ட பாதில விட்டுட்டு வந்துட்டேன்" என்றவன் நினைவு வந்தவனாக,


"உனக்கு எவ்ளோ தில்லு மலர்! பைபாஸ்ல அதுவும் நூறுல பைக்கை ஓட்டிட்டுப் போற, ம்... அவனைப் போட்டு அந்த அடி அடிச்சிருக்க. இந்த அழகுல என்னை வேற நக்கலா ஒரு பார்வை பார்க்கற, ம்..! அவன் இப்ப என்ன நிலைமையில இருக்கான்னு உனக்குத் தெரியுமா? அடி வயத்துல சிவியரா அடிபட்டிருக்கு. அவன் நிமிர்ந்து நடக்கவே மூணு வாரம் ஆகுமாம்" கோவமாகப் பேசத் தொடங்கி சிரித்துக்கொண்டே முடித்தான்.


"அவனை நான் அவ்ளோ ஸ்பீடா போய் பிடிக்காம இருந்திருந்தா, அப்படியே எஸ் ஆகியிருப்பான். அன்னைக்கே இன்னும் ஒரு சம்பவத்தையும் நடத்தி முடிச்சிருப்பான். என்ன செஞ்சு என்ன பிரயோஜனம்? இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஜாமீனில் வெளியில வந்துட போறான். நான் போட்ட எஃபோர்ட் மொத்தம் வீணாதான் போக போகுது" ஆயாசமாக வந்தன மலரின் வார்த்தைகள்.


தனது டிஷர்ட்டில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டே கண்கள் மின்னச் சொன்னான் ஜெய், "சான்ஸே இல்லம்மா! இந்தத் தடவை அவன உள்ள தள்ளியிருக்கறது ஜெய்கிருஷ்ணா ஐ.பி.எஸ் ஆச்சே! அதுவும் அவன் செஞ்சு வச்சிருக்கற கேவலமான வேலைக்கெல்லாம் அந்தக் கடவுளே நினைச்சாலும் அவனால ஜாமீன்ல வெளியில வர முடியாது!”


"ஏய், ஜாமீன்ல கூட வெளியில் வர முடியாத அளவுக்கு அப்படி என்னடா செஞ்ச?" என மலர் வியந்தவண்ணம் கேட்கவும்,


"ஐபிசி செக்ஷன் 376, 384, 392, 306, 307 அத்தனையிலும், அதாவது பெண்களை பாலியல் வன்கொடுமை செஞ்சது, கொள்ளை அடிச்சது, உன் ஃப்ரெண்ட் மாதிரி சில பேரைத் தற்கொலைக்குத் தூண்டினது, கொலை முயற்சி, இது எல்லாத்தையும் சேர்த்து அவனோட செல்ஃபோன்ல இருக்கற வீடியோவை ஆதாரமா வெச்சு... வெச்..சு செஞ்சிட்டேன்.


இதுல இருந்தெல்லாம் ஒரு வேளைத் தப்பிக்க முடிஞ்சா கூட, நார்கோடிக்ஸ் கேஸ்லேயும், அதாவது நாங்க, கமர்ஷியல் குவான்டிட்டின்னு சொல்லுவோம் அந்த அளவு போதை மருந்தோட அவனைப் பிடிச்சதா கேஸ் புக் பண்ணியிருக்கேன், மினிமம் பத்து வருஷத்துக்கு அவனால வெளியில வரவே முடியாது கண்ணம்மா!" என ஜெய் சொல்லி முடிக்கவும்,


"ஹுர்ரே!" என்றவாறு துள்ளிக் குதித்த மலர் அவளுக்கே உரித்தான இயல்பின் படி அவனது கன்னங்களை இரண்டு கைகளாலும் கிள்ளி "உம்மா!" என்றவாறு, "என்னோட ஜெய்ன்னா ஜெய்தான்! ச்சோ ஸ்வீட் டா!" என்று மகிழ,


"இதெல்லாம் வேண்டாம், உனக்காக இவ்ளோ செஞ்சிருக்கேன் இல்ல என்னை ஒரே ஒரு தடவை மாமான்னு கூப்பிடு!" என ஜெய் அனாயாசமாகச் சொல்லவும்,


"இதெல்லாம் போங்கு! நீ உன் ட்யூடியைத்தான செஞ்ச. அதுக்காகவெல்லாம் உன்னைப