Anbenum Idhazhgal Malarattume 39 & 40 [Final Episodes]
அணிமா-39
ஆரம்பக்கட்ட மகப்பேறு காலத்தில் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டிய காரணத்தால் அவளை ஆபத்தை எதிர்கொள்ளும் எந்த வேலையிலும் ஈடுபட அனுமதிக்கவில்லை ஈஸ்வர்.
அவள் வெளியில் எங்கே செல்லவேண்டும் என்றாலும் மல்லிகார்ஜூன் அவளுக்குத் துணையாகச் செல்ல ஏற்பாடு செய்திருந்தான் அவன்.
ஜெய்யும் அவனுக்குத் துணை போகவே ஒன்றுமே செய்ய இயலாமல் தவித்தாள் மலர்.
சூடாமணியின் நேரடி கண்காணிப்பு வேறு.
ஈஸ்வர் முழு நேரமும் தொழிலில் மூழ்கினான் என்றால் ஜெய் அவனுடைய வேட்டையில் மும்முரமாக இருந்தான்.
மனதிற்கு நெருக்கமான இருவரும் வெகு தூரம் போனது போன்ற மாய உணர்வு ஆட்கொள்ள, தேவையற்ற பயமும், நம்பிக்கை இன்மையும் சூழ்ந்துகொண்டு, தவித்தாள் மலர்.
அது புரிந்ததாலோ என்னவோ, அவளை சில நிமிடங்கள் கூட தனிமையில் விடாமல் அவளுடைய ராசா ரோசா இருவரும் அவளை உற்சாகமாக வைத்திருக்கப் பெரிதும் போராடிக்கொண்டிருந்தனர்.
நாட்கள் அதன் வேகத்தில் செல்ல, மகிழ்ச்சி பொங்க ஜீவிதாவின் வளைகாப்பு விழாவை நடத்தி முடித்தனர்.
***
சலீமிடம் தொடங்கி ஜெய் மேற்கொண்ட புலனாய்வில், இன்பார்மர் எனப்படும் அடிமட்ட ஆள்காட்டிகள் முதல் ஏஜென்ட்டுகள், அவர்கள் தொடர்பிலுள்ள கூலிப்படைகள், அனாதை இல்லங்களை நடத்தும் முக்கிய புள்ளிகள், அவர்களுக்குத் துணை போகும் ட்ராவல் ஏஜென்ட்டுகள், காவல்துறையில் பணிபுரியும் சில அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் என ஒவ்வொருவராக மாட்டவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தை கடத்தல்கள் கட்டுக்குள் வரத்தொடங்கியது.
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளைக் கடத்த இயலாத வண்ணம், புதிய கருவிகள் பொருத்தப்பட்டு, அதுவும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருந்த முக்கிய புள்ளிகள் சிலரைத் தவிர்த்து, ஓரளவிற்கு மாநில வாரியாக, பல 'சில்ரன் ட்ராபிக்கிங் ராக்கெட்ஸ்' எனப்படும் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்கள் கண்டுபிடிக்கப் பட்டு, ஒழிக்கப்பட்டன.
ஆனாலும் போலி பாஸ்போர்ட் போலி விசா மூலமாகக் கடத்தப்பட்ட பல சிறுவர் சிறுமியர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் போனது.
பன்னாட்டுத் தூதரகங்கள் மூலமாகக் கூட அவர்களைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.
இதற்கிடையில் கருணாகரனுடன் இணைந்து ஜெய் செல்லும் வேகத்தையும் அவனது புத்திசாலித்தனத்தையும் தாக்குப்பிடிக்க முடியாமல், அவனை அந்த பொறுப்பிலிருந்து விலக்க சில அரசியல் ஊழல்வாதிகளால் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சில தினங்களிலேயே அது பிசுபிசுத்துப் போனது.
காரணம் அவன் கையும் களவுமாகப் பிடித்த ஒவ்வொருவரையும் பற்றிய தகவல்களுடன், அதிக எண்ணிக்கையிலான போலி பாஸ்ப்போர்ட்கள், போலி விசாக்கள், போலீஸ் வெரிஃபிகேஷன் செர்டிபிகேட், கம்ப்யூட்டர், லாப்டாப், பேன் கார்டுகள், வங்கி பாஸ்புக், கடன் அட்டைகள்,எனப் பல ஆவணங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளித்தான், அவனுடைய கடமையில் அவனுடைய தீவிரத்தை விளக்கும் விதமாக.
நேரடியாக அவனிடம் மோத முடியாமல் கூலிப்படை படையை ஏவி, அவனைக் கொல்லும் முயற்சியில் சிலர் ஈடுபட அதிலிருந்தும் மீண்டுவந்தான் ஜெய்.
அனைத்தும் சேர்ந்து மக்கள் மத்தியில் ஜெய் கிருஷ்ணா ஐ.பி.எஸ் என்ற பெயர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த பெயரில் திரைப்படம் எடுக்கும் வரை அவனது புகழ் பரவியிருந்தது.
***
ஜீவிதாவ