Anbenum Idhazhgal Malarattume 33 &34
அணிமா 33
"ஹலோ! ஹலோ! என்ன ஆச்சு மலர் லைன்லதான் இருக்கியா?" என்று ஜெய் ;எதிர் முனையில் படபடக்கவும், "ம்... சொல்லு ஜெய்; கேட்டுட்டுத்தான் இருக்கேன்" என்றாள் மலர்.
"நான் எவ்ளோ பெரிய விஷயத்தை பேசிட்டு இருக்கேன்; நீ என்னடான்னா இப்படி அசால்ட்டா பதில் சொல்ற" என அவன் அலுத்துக்கொள்ளவும், "ப்ச்… அப்படிலாம் இல்ல; உண்மையிலேயே ஷாக் ஆயிட்டேன்" என்ற மலர், "ஜெய் பாவம் ஜெய் அந்த ஆளு! கண்டுபிடிச்சா கூட அவரை ஒண்ணும் செஞ்சுடாத ப்ளீஸ்!” என்று கெஞ்சலாக சொல்லவும்,
"இப்ப இதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் மலர்! அதைக் காலம்தான் தீர்மானிக்கும்" என்ற ஜெய்யின் பதிலில் கொஞ்சம் கடுப்பானவள், “அரசியல் பலம் பண பலம் எல்லாத்தையும் வெச்சுட்டு பல பேரோட குடும்பங்களை சீரழிக்கறவனை எல்லாம் விட்டுட்டு சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருப்பீங்க.
இவனை மாதிரி யாராவது கிடைச்சா குற்றவாளியை பிடிச்சிட்டோம்னு பெருமை பேசிட்டு அவனை வெச்சு செய்வீங்௧!" என்று அங்கலாய்ப்புடன் சொன்னாள் மலர்.
"இதையெல்லாம் போனிலேயே பேசி முடிச்சிடலாமா! நான் இதை ஆர்வ கோளாறுல உன்கிட்ட இப்படிச் சொன்னதே தப்பு போல இருக்கே!" என்றான் ஜெய் கோபக்குரலில், "ப்ச்! நான் என்ன சொல்லிட்டேன்னு உனக்கு கோவம் வருது ஜெய்; எதுக்கு டென்சன் ஆகற?" என மலர் பதிலுக்கு அவனிடம் எகிறவும், "இவ்ளோ டீட்டைலா இதெல்லாம் போன்ல பேசக்கூடாதுடீ லூசு! நான் ஈவினிங் உங்க வீட்டுக்கே வரேன்; நேரிலேயே பேசிக்கலாம்" என்று சொல்லி, பட்டென்று அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.
ஜெய்யிடம் எழுந்த கோபத்தை மறைத்துக்கொண்டு, ஈஸ்வரைத் தேடி கீழே வந்தாள் மலர் ஜெய்யுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலுக்கான காரணத்தை அவனிடம் கேட்க.
ஆனால் அதன் பிறகு நேரமே அமையவேயில்லை மலருக்கு.
மாலை ஈஸ்வர் அவனுடைய அலுவலக அறையில் தனிமையில் இருப்பதை அறிந்து அவனிடம் அது பற்றிக் கேட்டுவிடலாம் என எண்ணி, அந்த அறை நோக்கிச் சென்றாள் அவள்.
அப்பொழுது முரட்டுத்தனமான ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டில், ஆஜானுபாகுவான உயரமும், திரண்ட தோள்களும், ரப்பர் பேண்ட் போட்டு அடக்கியிருந்த தலை முடியும், ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் என, அனாயாசமாக ஒரு மனிதனை தன் ஒரே கையில் தூக்கிவிடுவான் என்பதை உணர்த்தும்படியான, பார்க்கும் பொழுதே பயம் வந்து ஒட்டிக்கொள்ளும் தோற்றத்தில், அங்கே வந்துகொண்டிருந்தான் ஈஸ்வரிடம் வேலை செய்யும் பௌன்சர்களில் ஒருவன்.
ஈஸ்வருடன் பொது இடங்களில் செல்லும் பொழுது அடிக்கடி அவனைச் சந்தித்திருந்த காரணத்தால் அவனை அடையாளம் கண்டுகொண்டவள், 'ஐயோ! இப்பவும் பேச முடியாது போல இருக்கே!' என மனதிற்குள் சலித்தவரே, "வாங்க மாலிக் அண்ணா! எப்படி இருக்கீங்க?" என்று மலர் கேட்கவும், அவளிடம் பேசத் தயங்கியவாறே, சிறிது வெட்கத்துடன் 'நன்றாக இருக்கிறேன்!' என சொல்வதுபோல் தலையை மட்டும் ஆட்டினான் அந்த மாலிக்.
அப்பொழுது அவனுக்காகவே எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போன்று அறையை விட்டு வெளியே வந்த ஈஸ்வர், "நீ உள்ள வா!" என அவனை அழைத்துவிட்டு மலரை நோக்கி, "நீ வசந்திம்மா கிட்ட சொல்லி ரெண்டு பேருக்கும் காஃபீ அனுப்பு" என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல, மாலிக்கும் அவனை பின் தொடர்ந்து உள்ளே சென்றான்.
அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் போய் அமர்ந்த ஈஸ்வர், எதிர் புறம் இருந்த இருக்கையை கை காட்டி, "உட்கார்!" என்று அவனிடம் கட்டளையாகச் சொல்லவும், "பரவாலேது அண்ணையா!" என்று அவன் சங்கடமாய் நெளிய,
"நீ முதல்ல உட்காரு, உன்கிட்ட முக்கியமா பேசணும்!" என்று ஈஸ்வர் சொல்லவும், அந்த இருக்கையின் நுனியில் தயக்கத்துடன் உட்கார்ந்தவன் ஈஸ்வருடைய முகத்தைப் பார்க்க, அதில் தெரிந்த கடினத்தில் பயந்துபோய், "க்ஷமிஞ்சண்டி அண்ணையா! எந்துக்கு கோபம் புரிலோ! சொல்லுங்கோ, பணிலோ நேனு என்னா தப்பு செஞ்சனா?!" என்று உள்ளே சென்ற குரலில் கேட்டான் அவன்.
"நீ வேலைல எந்த தப்பும் செய்யல மல்லிக்! ஆனா என்கிட்ட நிறைய விஷயத்தை மறைச்சுட்டியே!
எத்தனை வருஷமா உனக்கு என்னைத் தெரியும்? அதுவும் நாலு அஞ்சு மாசமா என் கூடவே தான இருக்க?
இருந்தாலும் என் மேல உனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை வரல... அப்படித்தானே?" என ஈஸ்வர் ஆதங்கத்துடன் கேட்கவும்,
"தேவுடா! அட்டனெ செப்ப குடுது அண்ணையா! சாலா பாத பட்துந்தி!" என அவன் கண்கள் கலங்க