Anbenum Idhazhgal Malarattume! 22
Updated: Mar 7, 2021
அணிமா-22
அப்பொழுது சரியாக ஜெய்யுடைய கைபேசி ஒலிக்க பால்கனியில் சென்று பேசிவிட்டு வந்த ஜெய் "சாரி மலர்! ஒரு எமெர்ஜென்சி நான் உடனே கிளம்பனும் நீ சுபா அக்காவை எப்படி மீட் பன்னன்னு தெரிஞ்சுக்கற க்யூரியாசிட்டிலதான் வந்தேன்; அது தெரிஞ்சு போச்சு; மத்தபடி வேற ஒன்னும் இல்ல; நீ கன்டினியூ பண்ணு; என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தான் ஜெய்.
அதே நேரம் கதவை திறந்துகொண்டு செங்கமலம் பாட்டி பின் தொடர உறக்கம் கலையாமல் தள்ளாடியபடி உள்ளே நுழைந்த ஜீவன் மலரிடம் வந்து ஒட்டிக்கொண்டு "தேனே பாட்டு பாடு ஹனி!" என்றான் பிடிவாதக் குரலில்
பிறகு ஜெய் கிளம்பிவிட,"ஜீவன்! நீ தூங்கு அந்த பாட்டை நான் பிறகு பாடுறேன்!" என்று மலர் சொல்லவும் அழுகை கலந்த குரலில் "ஜீவன் சொல்லாத ஹனி!" என்று அவன் சொல்ல,
"ஓகே! பாய் ஃபிரென்ட்! சரியா! தூங்கு" என்று சொல்லி அவனை கட்டிலில் படுக்க வைக்க வாயில் விரலை வைத்துக்கொண்டு "பாடு ஹனி!" என்றான் ஜீவன் பிடிவாதத்தை விடாமல். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த செங்கமலம் பாட்டி ஈஸ்வர் அருகில் போய் உட்கார்ந்துகொள்ள பாடத்தொடங்கினாள் மலர்.
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ
மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை.
அன்று மலருடைய மென் குரலில் அந்தப் பாடலை கேட்கும் பொழுது அது அவனுக்குச் சொல்லாத செய்தியெல்லாம் இன்று மொத்தமாக ஈஸ்வரிடம் சொன்னது அந்தப் பாடல்.
அது ஜீவனுக்கென்றே மலர் பாடிய பாடல் என்பது தெளிவாக புரிந்தது.
குழந்தைகள் படிக்கும் 'ஹான்செல் அண்ட் கிரேட்டல்' கதை புத்தகத்தில் மலர் அவனுடைய 'ஆட்டோக்ராப்' வாங்கியதன் காரணம் புரிந்தது ஈஸ்வருக்கு.
"இன்னும் கொஞ்ச நாளில் தாய்மாமன் முறையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் தயாரா இருங்க!"
"உங்க மருமகனை நீங்க நேரில் பார்க்கும்போது எப்படி பீல் பண்ணுவீங்கன்னு பார்க்க இப்பவே வெயிட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னா பார்த்துக்கோங்க!"
"அது ஜீவன்னு ஒண்ணு இருக்கு எப்பவுமே அது என்னைத் தொல்லை பண்ணிட்டே இருக்கும் அவனை வெறுப்பேற்றத்தான்”
மலர் கடத்தப்பட்டதற்கு முந்தைய தினம் அந்த நட்சத்திர விடுதியில் குரலில் அத்தனை கொஞ்சலும் குழைவுமாக மலர் பேசிக்கொண்டிருத்தது என ஜீவனைக் குறிப்பிடாமல் அவனை மனதில் வைத்து மலர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஈஸ்வர் மனதில் வந்துபோனது.
தனக்காக தன்னைச் சேர்ந்தவர்களுக்காக அவள் செய்த ஒவ்வொரு செயலிலும் அவளது காதல் மேலோங்க