Anbenum Idhazhgal Malarattume! 15
அணிமா-15
ஜெய்யின் கிண்டலில்... 'இவன் சும்மாவே நம்மள கலாய்ப்பான்... இனிமேல் கேக்கவே வேணாம்!' என்று எண்ணியவாறு... ஈஸ்வரின் அழைப்பை ஏற்றாள் மலர்...
"என்ன பூக்காரி... உன் அதிரடியெல்லாம்... எங்க ராணி மங்கம்மா கிட்ட வேலைக்கே ஆகல போலிருக்கே..." என்று கேட்டான் ஈஸ்வர் கிண்டலுடன்...
அதில் தன் இயல்பிற்கு வந்த மலர்... "ம்க்கும்... உங்க மங்கம்மா... என்கிட்ட சண்டைக்கு வந்திருந்தால்... அதிரடியா எதாவது செஞ்சிருக்கலாம்... அவங்க... அமைதிப் படையா இல்ல மாறிட்டாங்க..." என்ற மலர்... தொடர்ந்து... "ஆமாம்... மாமியிடமிருந்து இந்தப் பூக்காரியை மட்டும்தான் தெரிஞ்சுட்டீங்களா... இல்ல இன்னும் ஏதாவது தெரிஞ்சு வெச்சிருக்கீங்களா?" என்று கேட்க...
"அட இன்னும் வேற இருக்கா... அப்படின்னா மாமியை மறுபடியும் பார்க்கும்போது... கேட்டு வச்சுக்கணும்..." என ஈஸ்வர் கிண்டல் தொடர...
"ஐயோ! வேணாம்! மாமி நேற்றைக்குத்தான் ஒரு லக்ஷார்ச்சனையே நடத்தி முடிச்சாங்க... நீங்க அவங்க கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்...'' என்றாள் மலர்... பாவமாக...
சிரித்துக்கொண்டே... "அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம்" என்று சொன்ன ஈஸ்வர்... "பாட்டி உன்னை ஏதாவது நிர்பந்தப் படுத்தினாங்களா மலர்? உனக்கு அன்கம்ஃபர்டபுலா இருந்தால் சொல்லு... நான் பாட்டியை கன்வின்ஸ் பண்ணிக்கறேன்..." என்றான் தன்மையுடன்...
அதை மறுக்கும் விதமாக... "நாட் அட் ஆல்... பாட்டியின் ஆசையும் நியாயம்தான்... அதனால எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல" என்றாள் மலர்... வேகமாக...
"அப்ப... நம்ம கல்யாணத்துல உனக்கு முழு சம்மதம்... ரைட்..." நேரடியாக... அவளது வார்த்தையாகக் கேட்கும் எண்ணத்தில் ஈஸ்வர் கேட்கவும்...
"ம்... ஆமாம்!" என்ற மலர்... தொடர்ந்து... "ஆனால்... எனக்கு நீங்க ஒரு ஃபேவர் பண்ணனும்... நான் கல்யாணத்துக்கு ஓகேன்னு சொன்னதும்... உங்க பாட்டி... எங்க பாட்டி... தாத்தா எல்லாரும் சேர்ந்து... இன்னும் பன்னிரண்டு நாளில் கல்யாணத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க..."
"என்ன பிரச்சனை னா... டிரஸ் வாங்க... நகை வாங்க... அது இதுன்னு என்னால அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது...”
“நம்ம பெரியவங்க... குறிப்பா உங்க மாமியார்... என்னை ஃப்ரீயா விட மாட்டாங்க... இந்த இக்கட்டிலிருந்து... நீங்கதான் என்னை காப்பாத்தணும்" என்று முடித்தாள் மலர்...
'உங்க மாமியார்' என்ற வார்த்தையிலே அவளது மனது வெளிப்பட... அதில் திருப்தியுற்றவன்... "என் மாமியார் மட்டுமில்ல உன் மாமியாரையும் சேர்த்து..." மாமியார் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னவன்... "நான் டீல் பண்ணிக்கறேன்... நீ முகூர்த்த நேரத்துக்குச் சரியா வந்துடுவ இல்ல!" என அவன் அவளை வாற...
தன்னையும் அறியாமல்... 'உங்க மாமியார்' என்று சொல்லியதை நினைத்து நாக்கைக் கடித்தவள்... "நீங்க இவ்ளோ நல்லவரா இருக்கும்போது வந்துதானே ஆகணும்" என்று மலர் கெத்தாக சொல்லவும்...
எதிர் முனையில்... கம்பீரத்துடன் ஒலித்த அவனது சிரிப்பில் 'உங்களோட இந்த சிரிப்புக்காக... என்ன வேணாலும் செய்யலாம்!' என்று மனதில் எண்ணியவள்... "கீழே எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க... நான் பிறகு பேசறேன்..." என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் மலர்...
இரவு நேர பணிக்கு செல்வது... வேலை முடிந்து வீட்டிற்குத் தாமதமாக வருவது... இதையெல்லாம் இனி அனுமதிக்கவே முடியாது என மகளிடம் சூடாமணி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்...
பகல் நேரத்தில் சென்றே ஆகவேண்டும்... ஆகவே தன்னை எக்காரணம் கொண்டும் தடுக்கவே கூடாது என்ற நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக்கொண்டாள் மலர்...
மகள் இந்த மட்டும் திருமணத்திற்குச் சம்மதித்ததே போதும்... அவள் நேரத்திற்கு உண்டு உறங்கி ஓய்வெடுத்தால் சரி... என்ற நிலையில் இருந்ததால்... மேற்கொண்டு ஏதும் சொல்லவில்லை சூடாமணி...
மலர் கேட்டுக்கொண்டதால்... புடவைகள்... நகைகள் என வாங்கக் கடை கடையாகச் செல்லாமல்... அனைத்தையும் அவள் வீட்டில் இருக்கும் நேரம்... பிரபல கடைகளிலிருந்து... வீட்டிற்கே வரவழைத்து... அனைத்தையும் வாங்க ஏற்பாடு செய்துவிட்டான் ஈஸ்வர்...