Anbenum Idhazhgal Malarattume!13*
அணிமா-13
ஈஸ்வர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தனது கையை விடுவித்துக்கொள்ளும் எண்ணத்தைக் கூட மறந்து அப்படியே உறைந்து போய் நின்றாள் மலர்.
அவளைப் பேசவிட்டால் என்ன சொல்வாளோ என்ற எண்ணம் தோன்றவும், "ஓஹோ நான் உன்னோட ஃபேவரைட் ஸ்டார் அதனாலதான் என் பேரை பச்சை குத்தி வெச்சிருக்கியா மலர்?
உன்னைப் பார்த்தால் அப்படி ஒண்ணும் மெச்யூரிட்டி இல்லாத பொண்ணு மாதிரியும் தெரியலியே!" என்று அவளது கோபத்தை தூண்டுவதுபோல் சொன்னான் ஈஸ்வர்.
அவன் சொன்ன நொடி சுறு சுறுவென கோபம் ஏற, "யாருக்கு மெச்யூரிட்டி இல்ல எனக்கா?" என்று கேட்டவள்,
"அன்னைக்கு, 'பார்த்தியா எப்படியும் கையை வாஷ் பண்ணும்போது என் ஆட்டோகிராப்பும் போயிடும்; பிறகு இது உனக்கு எதுக்கு' ன்னு பீல் பண்ணது யாரு நீங்கதானே? அதனாலதான் மனசு கேக்காம இதை டாட்டூவா மாத்திட்டேன்" என்றாள் மலர் காட்டமாக.
மனதிற்குள் நெகிழ்ந்தாலும், "நான் அப்படி சொன்னா அதுக்காக நீ வலியை பொறுத்துட்டு அதை டாட்டூவா வரையணுமா என்ன? உனக்கு ஏன் ஃபீல் ஆச்சு?" என்ற ஈஸ்வர், "என்னை உனக்கு பிடிச்சதுனாலதான்னு ஒத்துக்கோ; அதை விட்டுட்டு சும்மா மழுப்பாத மலர்" என்றவாறே அவளது கையை விட்டான்.
விடுபட்ட கையை உதறிக்கொண்ட மலர் கொஞ்சம் கோபம் கலந்த குரலில், "ஆமாம் பிடிச்சிருக்கு அதனாலதான் டாட்டூ வரைஞ்சிடேன்!
எனக்கு உங்களைப் பிடிக்க உங்களுக்கே தெரியாத பல காரணம் இருக்கு; ஆனால் எனக்கு மட்டும் பிடிச்சிருந்தால் போதுமா?" என்று நிறுத்த அவளை ஒரு வியந்த பார்வை பார்த்துவிட்டு,
"இதுக்கு பதிலை நான் முதலிலேயே சொல்லிட்டேன். நீ கவனிக்கலேன்னா மறுபடியும் சொல்றேன்; தெளிவா கேட்டுக்கோ; எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு; நீ சொன்னது போல எனக்கு உன்னைப் பிடிக்கறதுற்கு உனக்கே தெரியாத பல காரணம் இருக்கு.
அதனால வீண் பிடிவாதம் பிடிக்காம கல்யாணத்துக்கு ஓகே சொல்லு" என்று ஈஸ்வர் சொல்லவும் முதலில் அவனுக்கு ஏற்பட்ட வியப்பு மலரையும் தொற்றிக்கொண்டது.
ஆனாலும் சற்று நிதானித்தவள், “பிடிச்சிருக்கு என்கிற ஒரே காரணத்திற்காக உடனே கல்யாணமெல்லாம் செய்துக்க முடியாது; எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்" என்று மலர் சொல்லவும்,
'அப்படி வா வழிக்கு' என்ற எண்ணத்தில் புன்னகை அரும்ப, "எனக்கும் உடனே கல்யாணம் செய்துக்கணும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை; ஆனால் பாட்டி அவசரப் பட்டால் என்னால ஒண்ணும் செய்ய முடியாது.
நம்ம முடிவைச் சொன்னால் பத்து நாட்களுக்குள் கல்யாணத்தை முடிக்கச் சொல்லி அவங்க அவசரப் படுத்துவாங்க; பிறகு என்னால மறுத்து பேச முடியாது" என்ற ஈஸ்வர், "அதனால நாம உடனே கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டு மீடியால எல்லாம் ஒரு அனௌன்ஸ்மென்ட் கொடுத்திடுவோம்" என்றான்.
'ஐயோ இப்படி புரிஞ்சுக்காம கொல்றானே' என்ற எரிச்சல் மேலோங்க "இதோ பாருங்க எனக்கு இப்ப கல்யாணம் செய்துக்கற சூழ்நிலை இல்ல.
உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; நான் ஒரு கொலை கேஸ்ல மாட்டியிருக்கேன்; அது ஜெய்யை தவிர வேறு யாருக்கும் தெரியாது.
அது மட்டுமில்ல ஹீரோ கல்யாணத்துக்குப் பிறகு நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.
ஆனால் இப்ப இருக்கற நிலைமையில என்னால உங்களுக்கு உண்மையாக இருக்க முடியாது.
முதலில் எல்லாப் பிரச்சினையும் சரி செய்துட்டு நிம்மதியா இந்தக் கல்யாணத்தை செய்துக்கலாம்.
அதிகம் இல்ல; இன்னும் மூணு மாசம் மட்டும் எனக்கு டைம் குடுங்க போதும்" என்று சொல்லிக்கொண்டே போனாள் மலர்.
அவளது வெளிப்படையான பேச்சை அமைதியாகக் கேட