Anbenum Idhazhgal Malarattume! 10*
அணிமா 10
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே "நீ எப்ப வந்த மலர்? ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியா?" என்று கேட்டான் ஈஸ்வர்.
"இல்ல இப்பதான் ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் ஆச்சு?" என்ற மலர் "என்ன விஷயம் ஹீரோ! அண்ணி பத்தி ஏதாவது பேசணுமா?" என்று நேரடியாக விஷயத்திற்கு வர,
அங்கே எல்லோரின் கண்களும் அவர்களின் மேல் இருப்பதுபோல் தோன்றவும் "வா ரெஸ்டாரண்ட்ல உட்கார்ந்து பேசலாம்" என்ற ஈஸ்வர் அங்கே இருந்த உணவகத்திற்குள் அவளை அழைத்துச் சென்றான்.
மிதமான வெளிச்சத்தில் மெல்லிய இசை கசிந்துகொண்டிருக்க முன்பே பதிவு செய்திருந்த இருக்கையில் போய் உட்கார்ந்தனர் இருவரும்.
அங்கே 'வெல்கம் ட்ரிங்க்' என்று திராட்சை பழச்சாறு பரிமாறப்பட 'ஆஹான்! சூடம்மா இங்கே இல்லை நம்மள தடுக்க' என்று மனதில் எண்ணியவாறு மலர் அந்தப் பழரசத்தை கையில் எடுக்க,
"ஆளே இப்படி அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருக்க; பார்க்கவே சகிக்கல; உருப்படியா இருக்கறது உன்னோட குரல் ஒண்ணுதான் அதையும் கெடுத்துக்க போறியா” என்றவாறு அவளது கையிலிருந்து அதைப் பறித்த ஈஸ்வர் அங்கே இருந்த பணியாளரை அழைத்து 'இதை எடுத்துட்டு போங்க" என்று சொல்லிவிட்டு சூப் மற்றும் சில எளிய உணவு வகைகளை ‘ஆர்டர்’ செய்தான்.
'சூடாம்மா உங்களுக்கு ஆதரவா இங்கே ஒரு நல்லவரு கிளம்பியிருக்காரு" என்று முணுமுணுத்தவாறு அவனை முறைத்தவள், "ஆமாம் எனக்கு கிரேப் ஜூஸ் அலர்ஜினு உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்க,
புன்னகை எட்டிப் பார்த்தது அவனது முகத்தில், "ம்ப்ச் அதெல்லாம் எனக்கு எப்படியோ தெரியும்; இப்ப அதைப் பத்தி என்ன?" என்று கேட்டு விட்டு "எனக்கு இதைச் சொல்லு நீ வீட்டிலேயே இருக்கறதில்லன்னு ஜீவிதா ரொம்பவே வருத்த படுறா ஏன்?" என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் ஈஸ்வர், "இதுல அவ வருத்தப்பட என்ன இருக்கு ஏன் வருத்தப்படணும்?
நான் இதுக்கு உங்க கிட்ட என்ன எக்ஸ்ப்பிளனேஷன் கொடுக்கணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?" என்று மலர் படபடக்க, அதற்குள் சூப் பரிமாறப்பட்ட அதைச் சாப்பிட்டுக்கொண்டே,
"நீங்க இந்த ஜூஸை சாப்பிட விடாமல் தவிர்த்ததில் தொடங்கி எனக்கு பிடிச்ச ஃபுட் ஐட்டம்ஸ் ஆர்டர் பண்ணதுவரை என்னைப் பத்தி உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு.
இதெல்லாம் உங்க தங்கைக்கு தெரியாது அதனால அவ மூலமாக உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை
சோ நீங்க என்னை ஃபாலோ பண்றீங்கன்னு நான் உங்களிடம் கோபப் படலாமா?
இந்த சூப் கூட எனக்கு பிடிச்சதுதான் என் ஹெல்த்துக்கும் நல்லதுதான் இருந்தாலும் என்னைக் கேட்காமல் நீங்க ஆர்டர் செஞ்சீங்கன்னு நான் வருத்தப் படலாம் தானே அது போலத்தான் உங்க தங்கை வருத்தப்படுவதும்.
சோ இதை இப்படியே விட்டுடுங்க; எனக்கும் வீட்டில் இருக்கும் எல்லாரோட மனநிலையும் புரியாமல் இல்லை?
நான் நினைக்கறது செய்வது எல்லாமே என் அறிவைக் கேட்டுத்தான் செய்யறேன்!
என் மனசாட்சி என்னைக் குற்றம் சொல்லும் எந்த ஒரு செயலையும் என்னோட அறிவு என்னைச் செய்ய விடாது!
சோ இதைப் பற்றி இனிமேல் என்னிடம் எதுவும் கேட்காதீங்க" என்று கத்தரிப்பதுபோல் மலர் சொல்லிக்கொண்டிருக்க, அவளது கைப்பேசி இசைத்தது.
அவள் அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்துவிட்டு அந்த அழைப்பைத் துண்டித்து மலர் ஈஸ்வருடன் பேச முனைகையில் மறுபடியும் கைப்பேசி இசைக்கவே, "எக்ஸ்க்யூஸ் மீ இவன் பேசாமல் என்னை விட மாட்டான்; ஒரு அஞ்சு நிமிஷம் நான் பேசிட்டு வந்துடறேன்" என்றவள் கைப்பேசியை காதில் பொருத்திக்கொண்டு அந்த உணவகத்தை விட்டு வெளியில் வந்து அங்கே காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த வைர நகைகள் அடங்கிய ‘ஷோகேஸ்’ அருகில் வந்து நின்றுகொடு அந்த நகைகளைப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினாள்.
'ம் சொல்லுடா"