top of page

தனிக்குடித்தனம் போகலாமா?



தனிக்குடித்தனம் போகலாமா?


வழக்கமாக நடைப்பயிற்சிக்குச் செல்லும் பூங்காவில் போடப்பட்டிருந்த கல் மேடையில் ஓய்வாக அமர்ந்திருந்தார் ராஜாமணி.


அவர் முகத்தில் அவ்வளவு யோசனையின் ரேகை படிந்திருந்தது.


அவருக்கு அறுபது வயது முடிந்து, வெகு விமரிசையாக சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது.


மத்திய அரசுப் பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றும் கூட.


பொறுப்பான மனைவி மைதிலி.


இரண்டு மகன்கள் ஒரு மகள் என நிறைவான குடும்பம் அவருடையது.


பிள்ளைகளை நன்கு படிக்கவைத்தார்.


அவர்களும் பொறுப்பாக படித்து நல்ல வேலையைத் தேடிக்கொள்ள, பொருத்தமான வாழ்க்கைத்துணைகள் வாய்க்கப்பெற்று இப்பொழுது யாவரும் நலம்.


மூத்தவன் சுந்தர் இவர்கள் கூடவே இருக்கிறான். மருமகள் நித்யா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவர்களுக்கு ஒரு மகன். இப்பொழுதுதான் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். இரண்டாவது பெண் குழந்தைக்கு இப்பொழுதுதான் ஒன்பது மாதங்கள் ஆகிறது.


இளையவன் பாஸ்கர் பெங்களூரில் இருக்கிறான்.


அவன் மனைவி ஒரு கல்லூரி பேராசிரியை. இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.


மகள் சுமதி திருமணம் முடிந்து அமெரிக்காவில் இருக்கிறாள். மாப்பிள்ளை ஒரு மென்பொறியாளர்.


அவர்கள் குழந்தைக்கு ஒரு வயது நிரம்பியிருந்தது.


ஆறு மாதங்கள் அமெரிக்கா சென்று தங்கியிருந்து மகளுக்குப் பிரசவம் பார்த்துவிட்டு வந்திருந்தாள் மைதிலி.


அதன் பிறகு குழந்தையின் முதல் பிறந்தநாளை இங்கே கொண்டாட வந்தவர்கள் அப்படியே இவர்களுடைய அறுபதாம் கல்யாணத்திலும் கலந்துகொண்டு பின்பு அமெரிக்கா திரும்பியிருந்தனர்.


முக்கிய கடமைகளை முடித்தாகிவிட்டது 'அப்பாடா' என மூச்சுவிடலாம் என்று இருக்கும்பொழுது இப்படி ஒரு புதிய பூதம் கிளம்புகிறது.


அவர் தன்னுடைய எண்ணப்போக்கிலிருக்க அவரு