Valasai Pogum Paravaikalaai - 28
28 - வெற்றியின் சுவை!
வரவேற்பறை சோஃபாவில் எட்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தைப் பிரித்து வைத்தபடி உட்கார்ந்திருந்தான் சூர்யா. அவன் மடியில் தலை வைத்துப் படுத்தவாறே அற்புத கவிதை ஒன்றை ஒப்பித்துக் கொண்டிருந்தான் சரண். தகப்பனின் கரம் மகனின் கேசத்தை வருடியவண்ணம் இருந்தது.
“ப்பா ரெடியா? சொல்லட்டுமா?’
‘ம்ம்”
“இளைய தோழனுக்கு!
‘ம்ம்’
நட
நாளை மட்டுமல்ல
இன்றும்
நம்முடையதுதான்
நட
பாதங்கள்
நடக்கத்தயாராய் இருந்தால்
பாதைகள்
மறுப்புச் சொல்லப்
போவதில்லை.
நெய்யாய்த் திரியாய்
நீயே மாறினால்
தோல்வியும் உனக்கொரு
தூண்டுகோலாகும்!
வெற்றி
உன்னைச்சுற்றி
வெளிச்சவிதை விதைக்கும்!
கவலைகளைத்