top of page

Valasai Pogum Paravaikalaai - 24

24 - கலக்கம்


ஏதோ ஒரு செய்தி சேனலில் காரசாரமான விவாத நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்க, வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தார் வசந்தன்.


வணக்கம் சார் என்றபடி உள்ளே நுழைந்த குயிலியின் ஓட்டுநர் அவளுடைய கோட் மற்றும் லேப்டாப் பேகைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார்.


சில நிமிடங்கள் கழித்துக் கைப்பேசியில் பேசியபடியே உள்ளே நுழைந்தவள் அவளுடைய அப்பாவை அங்கே பார்த்ததும், “ஓகே முகில், செக் பண்ணிட்டு, கஸ்டமர் பேஜ்ல வேற ஏதாவது மாடிஃபிகேஷன்ஸ் வேணும்னா மார்னிங் சொல்றேன்’ என்றபடி அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, “எங்க, பாட்டி-பேரன் ரெண்டு பேரையுமே ஆளைக் காணும்?” என்றபடி அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.


“நாளைக்கு எர்லி மார்னிங் ஊருக்குக் கிளம்பறாங்க இல்ல, அதான் நேரத்தோட சாப்பிட்டுப் படுக்கப் போயிட்டாங்க” என்ற அவரது பதிலில் அவளுடைய முகம் சுண்டிப் போனது.


ஆதி காலம் தொட்டே சூர்யாவின் குடும்பத்துப் பெண்களுடன் அவளுடைய அம்மாவுக்கு ஒரு நெருக்கம் உண்டு. விட்ட இடத்திலிருந்து இப்பொழுது அதை அவர் தொடர்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


“எங்க குலதெய்வ கோவிலுக்கு நீ கண்டிப்பா வரணும் பேபி!” என்று கமலக்கண்ணனின் மனைவி அழைப்பு விடுக்க மறுக்காமல் கிளம்பிவிட்டார். வசந்தன் மட்டும் மகளை விட்டுக்கொடுக்காமல் இங்கேயே இருந்துகொண்டார். அம்மாவும் உடன் வரவில்லை என்பது ஒரு குறையாக இருந்தாலும் சரணும், அவனுடைய அப்பா, தாத்தா, பாட்டி, அத்தைகள் என அனைவருடனும் சேர்ந்து செல்ல உற்சாகமாகவே தயாராகிவிட்டான்.


இப்பொழுதெல்லாம் மகன் தன்னைத் தேடுவதில்லையோ என்ற எண்ணம் தோன்றி நெஞ்சை அடைக்கச் சட்டெனத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஓ” என்றாள் உள்ளே போன குரலில்.


உள்ளே என்ன நினைக்கிறாள் என்பதே பிடிபடாமல், “என்ன கண்ணா, வேலை அதிகமா? ரொம்ப டயர்டா தெரியற” என வசந்தன் கேட்க, “புது ப்ளாக் கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல நின்னுட்டு இருந்தேன் பா அதான்” என்றவள், “நம்ம வெப்சைட் டிராப்ட் ரெடியாயிடுச்சு. எப்படி இருக்குன்னு பார்க்கறீங்களா?” என்று கேட்க, “வேண்டாம்மா, நாளைக்கு ஃப்ரீதான! பார்த்துக்கறேன், நீ முதல்ல ரெஃப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிட வா” என்றார் பெரியவர்.


“சாப்டேன் பா... டயர்டா இருக்கு. ஸோ... பேசமா போய் படுக்கப் போறேன்” என்றாள் ஆயாசத்துடன். அவளை ஏற இறங்கப் பார்த்தவர், “ஏம்மா பொய் சொல்ற, நீ சாப்பிடலன்னு உன் முகத்துலயே எழுதி ஒட்டியிருக்கே. டய்ர்ட்ல சாப்பிடப் பிடிக்காது. முதல்ல போய் குளிச்சிட்டு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடு. ராணி கிட்ட ரூம்லயே சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கச் சொல்றேன்” என அவர் சொல்லவும், மௌனமாக மாடிப் படிகளை நோக்கிப் போனாள்.


குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவளுக்கு அவளுடைய அந்த அறையே சூனியமாகத் தெரிந்தது. ஆயாசமாகப் போய் அப்படியே படுக்கையில் சுருண்டவள் அவளுக்கு அருகில் சரண் படுக்கும் இடத்தை மென்மையாக வருடினான். தன் மகன் தன்னைவிட்டு வெகு தூரம் போய்விட்டதுபோல ஒரு உணர்வு ஏற்பட திடீரென வாழ்க்கையே வெறுமையாகி விட்டது போல் தோன்றியது. அவளுக்காக அவளுடைய அப்பாவைத் தவிர அருகில் வேறு யாருமே இல்லையோ என்று மனம் ஏங்கித் தவித்தது.


‘என் பிள்ளையையே, என்னைக் கடைசி வரைக்கும் வெச்சு கஞ்சி ஊத்தும்னு சுயநலமா நினைச்சு பெத்துக்கல தெரியுமாடி!’ என அன்று அஞ்சுவிடம் வீம்பாகச் சொன்னதுதான் அவளுடைய உண்மையான மனநிலை என்றாலும் நிதரிசனம் என்பது மிகப் பூதாகரமாகத் தோன்றி மிரட்டுகிறது. தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய வயதை அவன் இன்னும் எட்டவில்லை என்பது கூட காரணமாக இருக்கும் எனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்ள முயன்றாள்.


சூர்யாவுடனானப் பிரிவுக்குப் பின் தன் நினைவுக்குள்ளேயே கொண்டுவராத அவனோடான நாட்கள் சம்பந்தமே இல்லாமல் காட்சிகளாக விரிந்தது. அடி வயிற்றிலிருந்து ஏதோ ஒன்று கிளம்பி வந்து நெஞ்சை அடைக்க மூண்ட அழுகையைக் கட்டுப்படுத்த அவள் எடுத்த முயற்சிகளால் தொண்டைத் தசைகள் இறுகி அப்படி ஒரு வலியைக் கொடுத்தது. தலைவலி விண்ணென்று தெறிக்கக் கண்களை இறுக மூடிக்கொண்டாள். சில நிமிடங்கள் உறக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் அப்படியே கழிய, கதவு தட்டும் ஓசைக் கேட்டது. ராணி சாப்பாடு கொண்டு வந்திருக்கக்கூடும் என்கிற எண்ணத்தில், "கொண்டு வந்து வெச்சிட்டுப் போ ராணி" என்று குரல் கொடுத்தாள்.


ஆனால் அவளுடைய அப்பாதான் உள்ளே வந்தார். “என்னப்பா” என்றபடி அவள் எழுந்து உட்கார, “என்ன கண்ணா ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க” எனப் பதறினார் அவர்.


“ப்ச்... நத்திங் பா, தூக்கக் கலக்கம்” என அவள் பதில் கொடுக்க, நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், தயக்கத்துடன் அவளை ஏறிட, “என்னப்பா, எனி ப்ராப்ளம்!” என அவள் மென்மையாகக் கேட்கவும், “சூர்யா வந்திருக்கான்ம்மா” என்றார்.


நேரத்தைப் பார்க்க, மணி எட்டைக் கடந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன. “இந்த நேரத்துல என்னப்பா?” என்று கேட்டாள் சிறு அதிர்வுடன்.


“இல்ல... சரணுக்காக ஏதோ பர்சேஸ் செஞ்சிட்டு வந்திருப்பான் போலிருக்கு” என்றவர், “உன் கிட்ட பேசணும்னு சொல்றான்மா. முகத்துல அடிச்ச மாதிரி வேண்டாம்ணு சொல்ல முடியல” என்று சொல்ல, “இட்ஸ் ஓகே..ப்பா நானே வரேன்” என அவள் எழுந்து நிற்க, “இல்லம்மா ஹால்ல வேண்டாம். வேலை செய்யறவங்கல்லாம் இருக்காங்க. அவரை இங்கயே வரச் சொல்றேனே” என அவர் அனுமதியாகவே கேட்க அவளுக்கு மறுக்க வழி இல்லாமல் போனது.


அவர் அங்கிருந்து செல்லும்போது அறைக் கதவைத் திறந்து வைத்துவிட்டே சென்றார்.


அவனுடைய கா