Poove Unn Punnagayil - 23
அத்தியாயம் -23
தயக்கமேதும் இன்றி வெகு சகஜ பாவத்தில் சக்தி ஒருத்தி அங்கே அமர்ந்திருக்க, ஒட்டுமொத்த சங்கோஜத்தையும் குத்தகைக்கு எடுத்தவன் போல படக்கென்று சத்யா போய் கௌசிக்கின் அருகில் உட்காரவும், மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டு, அவனைக் கண்களால் சீண்டியவாறே சக்திக்கு அருகில் வந்து உட்கார்ந்தான் சந்தோஷ்.
'நீ இப்படி இருந்தா உனக்கு எந்த பொண்ணும் செட்டே ஆகாது மாமோய்!' என்ற செய்தி அதில் அப்பட்டமாக அடங்கியிருக்க,'மகனே, உதை வாங்கப்போற' என்பதாக அவனை பட்டும் படாமல் முறைத்து வைத்தான் சத்யா.
கூடவே எழுந்துபோய் அவர்களைத் தடுக்கக்கூடத் தோன்றாமல், பயத்தில் சிலையாகவே ஆகிவிட்டதுபோல அசைவின்றி அமர்ந்திருந்தாள் ஹாசினி, அங்கே பரவியிருந்த ஏசியின் குளிரிலும் வியர்த்து வழிய.
'ம்கூம்' எனத் தொண்டையை செருமி, "எப்படி இருக்கீங்க அத்தான்" என ஒரு இயல்பான உரிமையுடன் சந்தோஷ் விசாரிக்க, என்னதான் கோபம் இருந்தாலும் சத்யாவிடம் செய்வதுபோல் அந்த சிறியவனிடம் முகந்திருப்ப இயலாமல் போனது கௌசிக்குக்கு.
"நல்லா இருக்கேன்ப்பா, உன் ஸ்டடீஸ் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு"
"பைஃன் அத்தான்"
இப்படியாக அவர்கள் பேச்சு தொடர, "இவங்கதான் மிஸ்.சக்தி, லாயர்- இவர் எங்க அக்கா சன் சந்தோஷ்" என இருவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்துவைத்தான் சத்யா.
"ஹாய்" என புன்னகைத்த சக்தியின் முகத்தை 'ஹலோ" என்றவாறே பார்த்தவன், 'அட, இவங்கள இதுக்கு முன்னால எங்கயோ பார்த்திருக்கோமே! அதுவும் நம்ம மாமா கூடவே! இவங்க ஃபுல் நேம் கூட மாமா பேர் மாதிரியே வருமே!' என அவன் தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட, 'அடப்பாவிங்க மாமா... இவங்களை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? அதான் அப்படி லுக்கு விட்டீங்களா?' என்பதாக அவனுடைய எண்ணப்போக்கு இருக்க, அது அப்படியே அவனுடைய முகத்தில் எழுதி ஒட்டாத குறையாகத் தெரியவும், அவனுடைய சிந்தனை செல்லும் தடத்தை ஊகித்தவனாக, கௌசிக் முன்பாக அவன் எதையாவது உளறி வைக்கக்கூடாதே என்கிற அவசரத்தில், “ஆமா நீ ஏன் என் பின்னாலயே வால் படிச்சிட்டு வந்த? உங்க அக்கா தனியா உட்கார்ந்து இருக்கா இல்ல, போ... போய் அவளுக்கு கம்பனி குடு" என அவனை அதட்ட,
"ஆவ்... மாமா, ஒரு மேஜரான பையன, அதுவும் ஒரு வருங்கால பிசினஸ் மேகனட்ட ஓவரா மிரட்டறீங்க, இது நல்லதுக்கில்ல... ம்கும்" என அவனைப் போலியாக முறைத்துக்கொண்டே தமக்கையின் அருகில் போய் உட்கார்ந்தவன் அவளிடம் எதையோ பேசத்தொடங்கிவிட்டான்.
முதலில் ஒரு வேகத்தில் மிஸ் சக்தி என்று சொல்லிவிட்டு ஒரு நொடிக்குள் உணர்ந்து மூண்ட சிரிப்பை அடக்கி, மற்றவர் அறியாமல் அவளைப் பார்த்து கண்களால் சிரித்தது, மருமகனிடம் போலியாகக் கோபத்தைக் காண்பித்தது, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவனைப் புரிந்துகொண்டவனாக ஒரு வார்த்தை கூட மறுத்துப் பேசாமல் ஒரு இயல்பான கிண்டலுடன் சந்தோஷ் அங்கிருந்து அகன்ற விதம் என வந்த நோக்கமே மறந்துபோய் உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவனை ரசிக்கவே தொடங்கிவிட்டாள் சக்தி
அவள் உணர்ந்த அந்த சிறு விஷயம் கௌசிக்குக்குப் புரியாமல் போக, "உங்களுக்கு நார்மலாவே பேச வராதா? எல்லாரையும் இப்படி மிரட்டிட்டே இருப்பீங்களா நீங்க?" எனக் கடுப்புடன் கேட்டான் அவன்.
சத்யா அதற்கு பதில் சொல்வதற்குள், "என்ன மிஸ்டர் கௌசிக், இவர் சும்மாதான சந்தோஷை மிரட்டினார், அவரே அதை புரிஞ்சிட்டு ஜஸ்ட் லைக் தட் கலாய்ச்சிட்டு போறாரு. நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க? இவ்வளவு சென்சிட்டிவான விஷயம் பேசும்போது அவர் நடுவுல இருக்கணுமான்னு நானே நினைச்சேன்" என சக்தி முந்திக்கொள்ளவும் கப்பென்று வாயை மூடிக்கொண்டான் கௌசிக்.
"சரி அதை விடுங்க, இப்ப உங்க பிரச்சனைக்கு வருவோம்” என நேரடியாக விஷயத்திற்கு வந்தவன், “கத்தரிக்காய் முத்தி கடைத்தெருவுக்கும் வந்தாச்சு. இனிமேல் மூடி மறைச்சு பேசி பிரயோஜனம் இல்ல. என்ன நடந்ததுன்னு நீங்க கொஞ்சம் ஓப்பனா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். ப்ளீஸ் கௌசிக்" என சத்யா தீவிரமாகச் சொல்ல,
"ஏன், உங்க குட்டியம்மா எதையும் சொல்லலியா" என அவன் குதர்க்கமாகக் கேட்கவே, "அவ சொல்றது இருக்கட்டும், உங்க பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து நீங்களே கொஞ்சம் சொல்லுங்க" என்றான் சத்யா விட்டுக்கொடுக்காமல்.
சத்யா போன வேகத்தில், ஹாசினி ஒரு பீதியுடன் அவர்களையே பார்த்திருக்க, அவன் சந்தோஷை வேறு அதட்ட, அவனும் உடனே இவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்துவிட, "அக்கா, உன்னோட வீட்டுக்கார மாமா இன்னைக்கு ஒரு கை பார்க்காம விடமாட்டார்னு நினைக்கறேன்" என தன் பங்கிற்கு அவன் வேறு அவளை மேலும் பயமுறுத்த, அதற்கேற்றாற்போல இருவரும் அக்னிநட்சத்திரம் பிரபு கார்த்திக் போல் முறைத்துக்கொண்டிருக்க, பதறி அடித்து அவர்களை நோக்கி வந்தாள் ஹாசினி.
அவளுடன் கிளம்பிய சந்தோஷை சக்தி கை காண்பித்து நிறுத்தியிருக்க, உண்டான படபடப்பில் தொய்ந்துபோய் சத்யாவுக்கு அருகில் தொப்பென உட்கார்ந்தாள் ஹாசினி.
நேருக்கு நேர் அவளைப் பார்க்கவும், அதுவரை ஒரு விரைப்புடன் முறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தவன் பட்டென்று தளர்ந்துபோனான் கௌசிக் தான் சொல்லவந்த விஷயத்தையே மறந்து. கோபம், அவமானம் இயலாமை என எல்லாம் கலந்து முகம் கருத்து போக, அவனுடைய கண்கள் கூட லேசாக கலங்கியதோ?
அவனுடைய பார்வை அவளிடமே இருக்கவும், "அவ கிடக்கறா, அவள ஏன் பார்க்கறீங்க, நல்லதோ கெட்டதோ இன்னைக்கே பேசி ஒரு முடிவுக்கு வந்துடுவோம், நீங்க சொல்லுங்க கௌசிக்" என சத்யா விடாப்பிடியாகச் சொல்ல,
"என்ன சொல்லணும், தெரியாமத்தான் கேக்கறேன் சொல்லுங்க, நான் என்ன சொல்லணும்? கல்யாணத்துக்கு மூணு வருஷம