Poove Unn Punnagayil - 22
அத்தியாயம் - 22
நான் படிக்கும் மோகனமே
நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே
தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு
கண்ணீரில் நின்னாச்சு
முந்தைய இரவின் தாக்கம் இன்னும் மீதம் இருக்க, ஹெட் போனை காதில் மாட்டி கண்ணோரம் ஈரம் கசிய இளையராஜாவின் இசையில் ஆறுதல் தேடிக்கொண்டிருந்தான் சத்யா.
கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும், 'ஆங்' என்றவாறு அவன் பாட்டை நிறுத்த, "குட் மார்னிங் மாம்ஸ்... வர சொல்லி மெசேஜ் போட்டிருந்தீங்க?" என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் சந்தோஷ்.
"இன்னைக்கு நீ ப்ரீயா?"
"சண்டேதான மாம்ஸ்... கொஞ்சம் அசைன்மென்ட்ஸ் எழுதணும், மத்தபடி முக்கியமான வேலை எதுவும் இல்ல"
"நல்லதா போச்சு... நான் சொல்றத கவனமா கேளு" என்றவன், சின்னவனின் பார்வை கூர்மை பெறவும், "எதையாவது சொல்லி, உன் உடன்பிறப்பை ஒரு லவன் தர்ட்டி டுவெல்க்கு வண்டலூர் ஜூ தாண்டி ஒரு ஸ்டார் ஹோட்டல் இருக்கு இல்ல, அங்க கூட்டிட்டு வா, எதேச்சையா அந்த பக்கம் வந்த மாதிரி நானும் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்" என சத்யா சொல்ல, "ஏன் மாமா, அத்தான் அங்க வரங்களா?" என விஷயத்தை அப்பட்டமாக கணித்தான் சந்தோஷ்.
ஒரு நொடி அதிர்ந்தாலும், இவன் அளவுக்கு ஹாசினிக்கு சூட்சமம் போதாது என்பதால் ஆசுவாசம் அடைந்தவன், "நீ புத்திசாலிதான் போ" எனக் கிண்டலாக என்றாலும் மருகனை மெச்சிக்கொண்டு, "அவகிட்ட எதையாவது உளறி வைக்காத, அங்க போன பிறகு தெரிஞ்சா கூட பிரச்சனை இல்ல" என்று சொல்லிவிட்டு, "இப்ப வேலை ஏதாவது இருந்தா போய் பாரு போ" என அவனை அங்கிருந்து அனுப்பினான் சத்யா. கை பாட்டிற்கு கைப்பேசியை இயக்க,
நீரு நிலம் நாலு பக்கம்
நான் திரும்பி பாத்தாலும்
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா
ஆட்டுகிற எம் மனச
யாரவிட்டு தூதுசொல்லி
நான் அறிவேன் உம் மனச