Nee Enbathe Naanaga - 8
8 - மௌனம்
மகளை இழுத்து கொண்டு வீட்டிற்குள் வந்த ஜானவி செழியன் மீதிருந்த மொத்த கோபத்தையும் தன் மகளிடம் காண்பித்துவிட்டாள்.
“மூஞ்சி முகரை தெரியாதவாங்க கிட்ட பேச கூடாதுன்னு உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்... யார் என்னன்னு தெரியாம அந்த ஆள் கையை பிடிச்சிக்கிட்டு நிற்கற... அப்படியாடி உன்னை நான் அடிச்சிட போறேன்” என்று பொரிந்து தள்ளி கொண்டே ஜானவி மீனாவை அடித்துவிட்டாள்.
அந்த ஒரு வாரமாக ஜானவிக்கு இருந்த டென்ஷனும் செழியன் மீதிருந்த அளவுகடந்த கோபமும் மகளிடம் அப்படி முரட்டுத்தனமாக அவளை நடந்து கொள்ள வைத்தது. ஆனால் ஜானவி என்றுமே இந்தளவு மோசமாக மகளிடம் நடந்து கொண்டதில்லை.
எப்போதும் மீனாவை அச்சுறுத்த அடிப்பது போல பாவனைதான் செய்வாள். என்றாவது கோபத்தில் ஜானவி மகளை கண்டிக்க வேண்டி ஓரடி அடிப்பாள். அவ்வளவுதான். ஆனால் இன்று கட்டுபடுத்த முடியாத கோபத்தில் ஜானவியும் மீறி கொண்டு மீனாவிற்கு பலமாகவே இரண்டு மூன்றடிகள் விழுந்துவிட்டன.
மீனா தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க, அதன் பின்னே ஜானவிக்கு தன் கோபத்தில் செய்த அறிவீனமான செயல் புரிந்தது. அவளுக்கு மகளின் அழுகையை பார்த்து மனம் தாங்கவில்லை. அவள் வழிகளிலும் நீர் ஊற்றாக பெருகியது. அதன் பின் ஜானவியே மகளை சமாதானம் செய்தாள். அதுவும் பெரும்பாடுப்பட்டு!
மீனாவும் ஒருவாறு அம்மாவின் சமாதான வார்த்தைகளில் இயல்பு நிலைக்கு வந்துவிட, ஜானவிக்கு எப்போதும் மகளுக்கு ஊட்டும் வழக்கம் இல்லை. ஆனால் இன்று அவளே மகளுக்கு உணவு கொடுத்து உறங்கவும் வைத்தாள்.
மீனா உறங்கிவிட்ட போதும் ஜானவிக்கு உறக்கமே வரவில்லை. மகளை அடித்துவிட்ட குற்றவுணர்வில் மீனாவின் அருகில் அமர்ந்து உண்ணாமல் உறங்காமல் இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தாள்.
மகளை உடலால் காயப்படுத்தியதில் இவள் மனதால் மருகி துடித்து கொண்டிருந்தாள். மீனாவின் வலியை விட மகளை அடித்துவிட்டோமே என்ற ஜானவியின் மனவலிதான் பெரிதாக இருந்தது.
ஜானவியின் மோசமான கடந்து காலம் மற்றும் ஓய்வில்லா வேலையென்று எல்லாம் அவளை அப்படி மகளிடம் நிதானமற்று நடந்து கொள்ள வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் மீனா மட்டுமே தனக்கு ஒரே துணை என்று மகள் மீது அவள் கொண்ட அதீத பாசமே உரிமையாகவும் கோபமாகவும் வெளிப்பட்டுவிட்டது.
ஜானவியின் மனநிலை அந்தளவு பலவீனமாக இருந்தது. ஆனால் அவளோ மகளிடம் அப்படி நடந்து கொண்டதற்கு செழியன்தான் காரணம் என்று எண்ணி கொண்டிருந்தாள். இயல்பான மனித குணத்தில் ஒன்று. தான் செய்யும் தவறுகளுக்கு பிறரை குற்றவாளிகளாக்கி தன் பலவீனத்தை மறைத்து கொள்வது.
மீனாவுக்கு அடுத்த நாள் விடுமறைதான். ஜானவி விடிந்ததும் மகளை வெளியே அழைத்து கொண்டு சென்று அவளுக்கு பிடித்தமான உடை, விளையாட்டு பொருள், உணவு என்றுவாங்கி கொடுத்து மகிழ்வித்தாள்.
இதெல்லாம் மீனாவிற்காக அல்ல. அவள் அம்மாவின் கோபத்தை மறந்து நேற்றே சமாதான நிலைக்கு வந்துவிட்டாள். குழந்தைகளுக்கு கோபங்களையும் பகைமையையும் சுமக்க தெரியாது. ஜானவி தன் குற்றவுணர்வை போக்கவே மகளை அழைத்து கொண்டு அன்று முழுக்க வெளியே சுற்றி திரிந்தாள். அப்போதைய அவளின் வேதனைக்கு தீர்வாக அவள் பார்த்தது மகளின் முகத்தில் மலரும் கள்ளங்கபடமற்ற புன்னகைதான்.
மீனா களிப்போடு இருந்ததை பார்க்க ஜானவியின் மனஉளைச்சல் மற்ற கவலைகள் யாவும் மாயமாகி அவள் மனம் ஒருவாறு லேசானது. இறுதியாக, “வீட்டுக்கு போலாமா மீனு?” என்று ஜானவி கேட்க,
“அம்மம்மா வீட்டுக்கு போலாம் ம்மா” என்றாள் மீனா!
ஜானவியின் முகம் மாறியது. இருந்தும் அந்த நொடி மகளின் வார்த்தையை மறுக்க மனமில்லாமல், “சரி போயிட்டு உடனே வந்துடணும்” என்று மகளிடம் கண்டிப்பாக சொல்லியே அழைத்து கொண்டு சென்றாள்.
ஜானவி வீட்டின் வாயிலிற்கு வந்ததுமே உள்ளே தன் தமக்கை ஜோதி அவள் குடும்பத்தோடு வந்திருப்பதை பார்த்தாள். ஜானவி இருந்தவரை ஜோதி அந்த வீட்டு பக்கமே எட்டிபார்க்கவில்லை. ஆனால் இன்று அவள் வந்திருக்கிறாள் எனில் ஜானவியால் தாங்க முடியவில்லை. அதற்கு மேல் ஜானவியின் ஈகோ அவளை அந்த வீட்டின் வாயிலை தாண்டவிடவில்லை. அவள் அப்படியே வாசலில் நின்றுவிட, மீனாவோ விட்டால் போதுமென தன் அம்மம்மாவை பார்க்க உள்ளே ஓடிவிட்டாள்.
கிரிஜா மீனாவை பார்த்த மாத்திரத்தில் பாசத்தில் கட்டியணைத்து முத்தமிட அப்போது ஜமுனா வெளியே நின்ற ஜானவியிடம், “உள்ளே வா க்கா” என்று அழைத்தாள்.
“நான் வந்தா... உள்ளே இருக்கிறவங்க வெளியே போயிடுவாங்க... எதுக்கு வம்பு... நான் வெளியவே இருக்கேன்” என்றாள் வீம்புடன்!
“அப்படி எல்லா இல்ல க்கா... நீ உள்ளே வா” என்று ஜமுனா அவள் கரத்தை பிடிக்க,
“கையை விடு ஜமுனா... சுயமரியாதை கௌரவம் எல்லாம் அந்த அம்மாவுக்கும் மட்டும்தான் இருக்கா... எனக்கும் இருக்கு... நான் இந்த வீட்டில இருக்க வரைக்கும் இந்த வீட்டு வாசப்படியே மிதிக்க மாட்டேன்னு சவால் விட்டு போனவங்கதானே அந்த மேடம்... இப்ப அவங்க வந்திருக்கும் போது... நான் மட்டும் உள்ளே வரணுமா?” என்று ஜானவி பிடிவாதமாக சொல்வதை கேட்டு கொண்டே கிரிஜா அங்கே வந்து நின்றார்.
“என்னடி பேசுற நீ? ரெண்டு பேரையும் ஒரே வயத்திலத