Nee Enbathe Naanaga - 17
17 - கண்ணாமூச்சி
சங்கரன் வீட்டிற்குள் நுழைந்ததும் கிரிஜா கணவருக்கு குடிக்க சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதனை ஆவேசமாக தட்டிவிட்டார் அவர்.
கிரிஜா அதிர்ந்துவிட, சங்கரன் கொந்தளிப்பாக மனைவியை முறைத்து கொண்டு நின்றார்.
அந்தளவுக்கு கோபத்தை கணவனிடம் கிரிஜா இதுவரை ஒரு முறை கூட பார்த்ததேயில்லை.
அப்படியே திகைத்து போய் கிரிஜா நிற்க, "என்னாச்சு ப்பா?" என்று மகள் ஜமுனா ஓடிவந்தாள்.
அவர் பதிலேதும் சொல்லாமல் சோபாவில் அமர்ந்து கொண்டுவிட, அவர் விழிகளில் கண்ணீர் தடம்.
"என்னங்க என்னாச்சு?" என்று படபடப்பாக கணவன் அருகில் வந்த கிரிஜாவிடம்,
"பேசாதே... கொன்னுடுவேன்" என்று சீற்றமானார்.
அவரின் வார்த்தை மேலும் கிரிஜாவை அதிர்ச்சிக்குள்ளாக்க, "என்னதான் ப்பா ஆச்சு?!" என்று ஜெகன் பதட்டமாக கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.
மகனை எரிப்பது போல் சங்கரன் ஒரு பார்வை பார்க்க, அவன் புரியாமல் அம்மாவையும் தமக்கையையும் என்னவென்று கண்ஜாடை செய்தான்.
அவர்களும் ஒன்றும் புரியாமல் குழம்பியபடி நிற்க, யாருக்கும் பதில் சொல்லும் நிலைமையில் சங்கரன் இல்லை.
சுவற்றில் மாட்டியிருந்த மகள்களும் மகனும் ஒன்றாக இருந்த புகைப்படத்தில் ஜானவியின் வெள்ளந்தியான புன்னகை அவர் மனதை குற்றவுணர்வில் ஆழ்த்தியது.
உடைந்து போன மனநிலையில் அவர் அமர்ந்திருக்க, விழிகளில் நீர் தளும்ப அவர் உள்ளம் அன்று மகளுக்கு செய்த அவமானத்தை எண்ணி ஊமையாக அழுதது.
கிரிஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. கணவனின் கண்ணீரை பார்த்தவர் படபடப்போடு,
"என்னதாங்க நடந்தது... ஏதாச்சும் சொன்னாதானே எங்களுக்கும் புரியும்" என்று குழப்பமாக வினவ,
"தப்பு செஞ்சிட்டோம் கிரிஜா... ஜானு மனசை நம்ம ரொம்ப நோகடிச்சிட்டோம்" என்று கண்களில் கண்ணீர் பெருக உரைத்தார்.
கிரிஜா முகம