Nee Enabthe Naanaga - 19
19 - ஏக்கம்
அன்று விடிந்து சூரியன் அவர்கள் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்க்க, அந்த வெளிச்சம் முகத்தில் பட்ட நொடி ஜானவி விழித்து கொண்டாள். படுக்கையில் அவள் எழுந்தமர்ந்து கொள்ள இரவு நடந்த விஷயங்கள் யாவும் அவள் நினைவுகளில் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றியது. அந்த நொடி அவளை வெட்கம் சூழ்ந்து கொள்ள, இப்போது நினைத்தாலும் செழியன் கொடுத்த முத்தம் அவளை போதைநிலைக்கு இழுத்து சென்றது.
மயங்கிய நிலையில் உறக்கத்திலிருந்த தன்னவனை பார்வையாலேயே வருடி கொண்டிருந்தவள், அவன் என்றுமில்லாத திருநாளாக அப்படி அசந்து தூங்குவதை கண்டு அதிசியத்தாள்.
அதுவும் விடுமுறை நாட்களிலும் கூட நேரத்தோடு எழுந்து கொள்ளும் அவன் இன்னும் விழித்து கொள்ளாதது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவளுக்கு!
‘நம்ம தூங்கின பிறகும் இவர் முழிச்சிட்டு இருந்திருப்பாரோ... இருக்கும்... ப்ச் பாவம் செழியன் நீங்க... உங்களுக்காகவாச்சும் எதாச்சும் நடந்திருக்கலல்ல்லாம்’ என்றவள் அந்த லாமை இழுக்க, அது அவள் மனதிலும் இருந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான்.
செழியன் அப்போது புரண்டு படுக்க, ‘முழிச்சிட்டாரோ... ஐயோ! நம்ம இவர் தூக்கத்தில பேசனா கூட கேட்டிடும்... உஹும் எதுவும் பேச கூடாது’ என்று சொல்லி கொண்டே அவசரமாக குளியலறைக்குள் புகுந்து முகத்தை அலம்பி கொண்டு அவள் வெளியே வர, அவன் படுக்கையில் இல்லை. எழுந்துவிட்டிருந்தான். ஆனால் அதை அவள் கவனிக்கவில்லை.
வெளியே வந்ததும் அவள் பார்வை நேராக கடிகாரத்தின் மீதுதான் விழுநத்து. ‘ஐயோ டைமாச்சு... டைமாச்சு’ என்றுஅந்த நொடியே அவள் பதட்டமாகி தலையில் அடித்து கொண்டு சமையலறைக்குள் நுழைய போக உள்ளே செழியன் நின்றிருந்தான்.
மேலே செல்லாமல் அவனை பார்த்து அப்படியே அவள் உறைந்து நிற்க செழியன் அவளை பார்த்து கல்மிஷ்மாக புன்னகைத்து, “என்ன... வேகமா வந்துட்டு ஸ்பீட் ப்ரேக்ல ஏறி இறங்கின கார் மாறி அப்படியே ஜெர்காகி நிற்கிறீங்க” என்று கேட்க,
“அது... நீங்க தூங்கிட்டுதானே இருந்தீங்க” என்றாள்.
“நீங்க எழுந்த சத்தம் கேட்டு எனக்கும் முழிப்பு வந்துடுச்சு... என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எழுந்திருக்க லேட்டாயிடுச்சு வேற” என்றவன் சொல்லவும்,
“ஆமா ஆமா லேட்டாதான் ஆயிடுச்சு” என்று அவள் அவன் வார்த்தைகளை அப்படியே ஆமோதித்தாள்.
“அதுக்கு நீங்கதான் காரணம்” என்றவன் கோபமாக சொல்ல, “நான் என்ன பண்ணேன்?” என்று பரிதபாமாக கேட்டாள்.
“என்ன பண்ணேனா? குட் நைட் சொல்லிட்டு மேடம் நிம்மதியா தூங்கிட்டீங்க” என்றவன் சொல்ல, அவள் இதழோரம் வந்த புன்னகையை அவள் சிரம்மப்பட்டு அடக்கி கொண்டாலும் செழியன் அதை பார்த்துவிட்டானே!
அவன் மெல்ல அவளை நெருங்கவும் அவள் பின்னே காலெடுத்து வைத்து,