Azhage Sugamaa?!9
Updated: 4 days ago
முகில்நிலவு 9
மூன்று மாதங்களுக்கு முன்,
நரம்பியல் அறுவை சிகிச்சை சம்பந்தமான மேற்படிப்பில் நிலாவுக்கு ஒன்றரை ஆண்டு கடந்திருந்த நிலையில்…
இடியும் மின்னலும் கோலாகலப் படுத்திக் கொண்டிருந்த ஒரு மழை நாளில், முன்னிரவு எட்டு மணி வாக்கில், தூறலில் நனைந்து உடல் சிலிர்த்தவாறு மருத்துவர்களுக்கான ஓய்வறைக்குள் நுழைந்தவள், அவள் எடுத்து வந்திருந்த கைப்பையை அங்கே இருந்த அலமாரியில் வைத்துவிட்டு துப்பட்டாவால் முகம், கைகள் எனத் துடைத்துக் கொண்டு, வெண்ணிற 'கோட்'டை எடுத்து அணிந்து கொண்டாள் நிலா.
சானிடைஸரை வலது உள்ளங்கையில் ஊற்றி இரண்டு கைகளிலும் தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டு, அவளது ஸ்டெதஸ்கோப்பைக் கழுத்தில் சூட்டிக்கொள்ள, அங்கே வந்த அவளது தோழி, சக மாணவி சரண்யா அவசரமாக அவளுடைய கையைப் பிடித்து இழுத்துச் சென்றவாறே, "வா! வா! தல நம்ம ரெண்டு பேரையும் அர்ஜென்டா கூப்பிடறாங்க!" என்றவாறு ஒட்டமும் நடையுமாகச் செல்ல, அவளுடைய இழுப்பிற்குச் சென்றாள் நிலா.
அவர்களுடைய அகராதியில் 'அர்ஜன்ட்' என்ற சொல் மட்டுமே உண்டு. அதன் எதிர்ப்பதம் புழக்கத்திலேயே கிடையாது. அதுவும் மழைக்கால இரவுப்பணி என்றால் அந்த அவசரத்தின் பொருள் பன் மடங்கு கூடிப்போகும்.
நரம்பியல் அறுவை சிகிச்சை பகுதியை அடைந்தவர்கள், அங்கே இருக்கும் மருத்துவர்கள் பணி அறையை நோக்கிச் செல்ல, உள்ளே உட்கார்ந்திருந்தார் கைத்தேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்யபாமா, அவர்களுடைய ஆசான், அவர்களுடைய ஹீரோ! முன்மாதிரி! எல்லாமும்!
அங்கே அனைவருக்குமே அவரிடம் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும். அவருடைய தகுதியும் தோற்றமும் அப்படி.
தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட நோயாளிகளைக் கூட, பிழைப்பதற்குக் கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்பிருந்தாலும் அதைப் பயன்படுத்தி உயிர்ப்பிக்கச் செய்யும் மாயத்தை தன் கைகளில் கொண்டிருக்கும் திறமைசாலி.
வெள்ளை வெளேர் என்றிருந்த அவரது கைகளைப் பார்க்கும் போதே தெரிந்தது, ஏதோ அறுவை சிகிச்சை முடிந்து கை உறைகளை அப்பொழுதுதான் கழற்றி இருக்கிறார் என்று.
"பொண்ணே, எமர்ஜன்சில... ப்ரெயின் இஞ்சுரி கேஸ் ஒண்ணு வந்திருக்காம். உடனே வரச் சொன்னாங்க. போய் அட்டண்ட் பண்ணுடா!" என அவர் பொதுவாகக் கட்டளை பிறப்பிக்க,
செல்ல எத்தனித்த சரண்யாவைத் தடுத்து, "இரு பொண்ணே! நேத்து சர்ஜரிஸ்ல நீதான என் கூட இருந்த. அந்த கேசஸ் பத்தி கொஞ்சம் இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்கணும்" என்று சொல்லிவிட்டு, "நிலா! நீ போய் அட்டண்ட் பண்ணுடாம்மா!" என்றார் அதிகாரம் தொனிக்கா ஒரு கட்டளையாக.
நிலாவின் விதிதான் சத்யபாமா வடிவில் அவளை அங்கே அனுப்பியதோ?
நிலா அந்த மருத்துவமனையின